மது மகிழன் - 3
கல்லணை. மதுவும், கார்த்திகாவும் வந்து அரை மணி நேரம் கடந்தும் மகிழன் வரவில்லை. மணிக்கட்டைத் திருப்பி பார்த்தாள் மது. இன்னும் பதினொன்றாவதற்கு ஐந்து நிமிடம் இருந்தது. "உங்க அண்ணன் பெரிய கலெக்டர் சொன்ன டைமுக்கு தான் வருவாரு போல' என்றாள் மது. "எங்க அண்ணன் உனக்கு யாரு' என்னறாள் கார்த்திகா மது கண்களில் தன்னவனை பார்க்க போகும் மகிழ்ச்சி பிராவகமாய் ஊற்று எடுத்து இருந்தது. அவள் மனது ஒரு நிலையில் இல்லை. கார்த்திகா பேசுவது கூட அவள் காதில் விழவில்லை. அவள் இதழ்களில் எப்போதும் ஒட்டி இருக்கும் புன்னகை இன்று ஏனோ பெரியதாக விரிந்து இருந்தது. இருக்காதா பின்னே? எத்தனை வருடத் தவம், கனவு, ஆசை.. உள்ளுக்குள் பொங்கிய மகிழ்ச்சியில் அவள் அருகில் இருந்த கார்த்திகாவை கிள்ளுவதும், அடிப்பதுமாய் படுத்தி எடுத்தாள், அவள் துன்பத்தை எல்லாம் தங்கி நின்ற தோழி அவள் மகிழ்ச்சி தரும் தொல்லைகளையும் தாங்கினாள். கனவுலகில் மது திளைத்திருக்க..... "ம்ஹூம்" என்கிற சத்தத்தில் கவனம் கலைய மது நிமிர்ந்து பார்த்தாள். அகன்று விரிந்த தோளோடு, கண்களில் குறும்போடு அவளையே பார்த்திருந்தான் மகிழன். திடீரென மாமனை பார்...