நிச்சயம்
"எங்க வீட்டுக்கு முதல் முதலா வந்திருக்கீங்க, அதால சந்தோஷமா இருந்திருக்கும்.” அவள் முந்திக் கொண்டு பதில் சொல்ல, வாய் விட்டு சிரித்தவன்...
"
"நாளைக்கு வருவீங்க இல்லை மாமா?"
"கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன்டா. அம்மாவும், அத்தையும் சேந்தா கடையை ஒரு வழி பண்ணிடுவாங்க. அந்த நேரத்துக்கு நான் ரெண்டு வேலையை முடிச்சிருவேன்."
"கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கும் இப்படித்தான் சொல்லுவீங்களா?"
"சான்ஸே இல்லை. ஏன்னா உனக்கு செலெக்ட் பண்ணப்போறது நான். ஸோ யூ டோண்ட் வொர்ரி น!"
"எஃப்..."
"முகூர்த்த பட்டு கூட நான் ஏற்கனவே வாங்கியாச்சு. என்ன வெள்ளைப் பட்டு. சூப்பரா இருந்தது. பாட்டி ஒரே சண்டை. கல்யாணத்துக்கு அந்தக் கலர் உடுத்தக் கூடாதுன்னு. சரி நான் இதை வாங்குறேன். நீங்க வேற கலர் வாங்குங்கன்னு விட்டுட்டேன்."
"அப்போ அதை என்ன பண்ணப் போறீங்க?"
"ஏய் பட்டு, கல்யாணத்துக்கு அப்புறமா நிறைய
மணமேடையில் எழிலோவியமாக மதுநிலா
அத்தனை தொலைவில் கூட அவனை வசீகரித்தாள் அந்தக் பேரழகி. இவளைப் பார்க்கும் போதெல்லாம் தான் ஏன் கண்ணியத்தை கடன் கொடுத்து விடுகிறோம் என்பது இன்று வரை மகிழனுக்குப் புரியவில்லை. கட்டுக் காவல்களை மீறி அவன் கண்கள் அவளை ரசித்தது. ஆனாலும் அது போதவில்லை. கீழே வரச்சொல்லி அழைத்து விட்டுத்தான் உள்ளே போனான்.
ஜூஸ் சிந்தியபோது கூட அவன் மேல் ஒன்றிரண்டு துளிகள் தான் தெறித்தது. அதற்கு ஏன் ஐஷு இத்தனை ஸீன் போடுகிறாள் என்று தான் முதலில் தோன்றியது.
பைரவி முன்னால் போக, இவன் அவளைத் தொடர்ந்தவன்,
இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை தவற விட அவன் ஒன்றும் முட்டாள் அல்லவே!
எத்தனை மென்மை. தான் தொட்டபோது கூசிச் சிலிர்த்த அந்த மேனி இப்போதும் போதை ஏற்றியது மகிழனுக்கு. அந்தக் கணம் அப்படியே உறைந்து போகக் கூடாதா என்று தான் தோன்றியது. விவரமாகப் பயன்படுத்திக் கொண்டான்.
********
அந்த நான்கு கார்களும், இரண்டு பேருந்துகளும் திருச்சி நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தாமரையின் சொந்தங்கள், சந்திரனின் சொந்தங்கள் என உறவினர்கள் அன்பில் நிரம்பி வழிந்தது பேருந்து. காலையிலேயே புறப்பட்டு விட்டார்கள். இரவு மண்டபத்தில் நிச்சயதார்த்தம், மறுநாள் காலையில் முகூர்த்தம் என நேரங் குறிக்கப்பட்டிருந்தது.
மது அமைதியாக அவர்களின் காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி வெளிப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அருகில் தாமரை, முன் சீட்டில் இளமாறன்.
திருச்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' எனும் பதாகை தொங்க. எண்ணங்கள் பின்னோக்கி போனது. முதலாக மாமானைத் தேடி திருச்சி வந்த நாளை அசை போட்டது. உடம்பு லேசாக புல்லரிக்க கண்கள் கலங்கியது மதுவிற்கு.
எத்தனை ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு, அது நிறைவேறுமா, நிறைவேறாதா? எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தான் கல்விக்காக என்று திருச்சி வந்தாள். தன் காதல் மேல் வைத்த நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு அம்மாவை எதிர்த்து, அப்பாவிடம் மறைத்து என எத்தனை வேதனைகள். ஆனால் இன்று. அந்த உணர்வு சுகமாக இருக்க ஆழமான ஒரு மூச்சை இழுத்துவிட்டான்.
போனது கூடத் தெரியாமல் இயற்கையோடு இணைந்திருந்தான்.
அந்த வீதிக்குள் நுழையும்போதே அவன் வாசத்தை அவள் நாசி உணர்ந்து கொண்டது.
அவள் உதடுகளில் புன்னகை நெளிந்தது. அந்த உணர்வு தந்த சுகத்தில் கண் மூடிக் கொண்டாள். சட்டென்று வர்சினி முகம் கண்ணில் வந்து போனது.
உங்க கல்யாணம் நடக்காது, நடக்க விட மாட்டேன் என்று அன்று அவள் ஆங்காரமாக சொன்னது காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
வாசுகி தன் கையாலேயே தன் மருமகளுக்கு ஆரத்தி சுற்றினார். தன் நெடுநாள் கனவு நனவானதில் அத்தனை பூரிப்பு அவருக்கு. எல்லாம் இந்தப் பெண்ணின் ராசிதான் என்று நிச்சயமாக நம்பினார்.
மதுவுக்கு கொஞ்சம் களைப்பாக இருக்கவே, தனது ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
அவள் விட்டுப் போன அத்தனை பொருட்களும் அந்தந்த இடத்தில் அப்படியே இருந்தது. அலமாரியில் கொண்டு வந்திருந்த பொருட்களை வைக்கத் திறந்தவள் அதில் புதிதாக குடிவந்திருந்த அந்த ஃபோட்டோவை கையில் எடுத்தாள்.
ரிசார்ட்டில் ஆனந்தனின் மேஜை மேல் இருந்த அதே ஃபோட்டோ. சின்னதாக ஃப்ரேம் பண்ணி வைத்திருந்தான். புன்னகையோடு பார்த்திருந்தவளை கலைத்தது ஃபோன். யாரெனப் பார்க்க... அவள் சிந்னையின் நாயகன் அழைத்துக் கொண்டிருந்தான். அழைப்பை ஏற்க,
"என்ன குட்டிம்மா, மாமன் ஊருக்கு வந்து சேந்துட்டீங்களா?" என்றான்.
"ம்..."
"என்னடா செய்ற?" அவன் குரலில் அத்தனை உற்சாகம்.
"ஏய் அம்மு, மண்டபம் எப்படி இருக்கு. டெக்ரேஷன் பாத்தியா? பிடிச்சிருக்கா
"ம்... யாரு எடுத்தா? எனக்குத் தேரியாதே?"
"வெயிட் அன்ட் சீ பேபி, உங்களுக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்துக்கிட்டு இருக்கு."
"என்னன்னு தான் சொல்லுங்களேன் மாமா” அவள் குரல் கொஞ்சியது.
"மேடம் வெறும் ப்ளூ ப்ரிண்ட் தானே பாத்தீங்க. இப்போ முழுசா, உருவத்தோட நிக்குற என்னோட கனவை இன்னும் பாக்கலையே. பாத்துட்டு சொல்லுங்க, எப்பிடி இருக்குன்னு."
"எஃப்..."
"சரிடா, ட்ராவல் பண்ணின டயர்ட் இருக்கும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மண்டபத்துக்கு வந்து சேருங்க பொண்டாட்டி"
"ம்..." என்றாள் சிரித்துக்கொண்டே.
அந்த Black Audi மண்டப வாசலில் வந்து நின்றது. அத்தனை பேரின் கவனமும் அங்கு திரும்ப, ட்ரைவர் திறந்து விட்ட கதவைப் பிடித்தபடி இறங்கினாள் மது.
அது ஆனந்தன் பைரவிக்கு விடுத்த உத்தரவு. அந்தக் கார் அவளுக்கும் எத்தனை பிடித்தம் என்பதை அறிந்ததால் இந்த ஏற்பாட்டை பண்ணி இருந்தான். சந்திரனுக்கு காரைப் பார்த்த பிறகு தான் மகளின் ஆசை புரிந்தது.
கண்களால் மது எங்கேயாவது தென்படுகிறாளா என்று துழாவியபடி காரை விட்டிறங்கினான் மகிழன் மண்டபம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால் எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் அத்தியாவசியங்களே எங்கும் நிறைந்திருந்தது. அவன் சொந்தங்களுக்கு அறிமுகம் என்றாலும் புது மாப்பிள்ளை பார்க்க எல்லோரும் ஆர்வம் காட்டினார்கள்.
சந்திரன் எல்லோரது அன்புக்கும், மரியாதைக்கும் உரியவர் என்பதால் ஆளாளுக்கு வந்து பார்த்து விட்டு போனார்கள்.
அடர்ந்த பின்க் நிறத்தில் ஒரு பட்டு உடுத்தி இருந்தாள். உடல் முழுவதும் தங்க ஜரிகைப் பூக்கள் நெய்யப்பட்டிருந்தது. பெரிய கோல்ட் போடரும் அதே நிறத்தில் ப்ளவுசுமாக ஒரு தாமரையைப் பார்ப்பது போல இருந்தது. அன்று நகைகளை கொஞ்சம் அதிகமாகவே அணிந்திருந்தாள். அருந்ததியின் உத்தரவு அது.
கழுத்தை ஒட்டி சின்னதாக ஒரு ஆரம், அதை அடுத்து சற்றுப் பெரிதாக ஒரு ஆரம், காதில் பெரிய குடை ஜிமிக்கி, கை நிறைய வளையல்கள் என்று அத்தனை அழகாக இருந்தாள். கண்களுக்கு லேசாக மையிட்டிருக்க, அந்த மைவிழி இரண்டும் தன் மனாளணைத் தேடிய வண்ணமே இருந்தது.
மாடியிலிருந்த தன் அறையிலிருந்து அத்தனையையும் பார்த்திருந்தான் ஆனந்தன். கண்களை அவளை விட்டுத் திருப்ப முடியவில்லை. அத்தனை அழகாய் இருந்தாள். இந்தப் பெண் தனக்குரியவள் என்று எண்ணும் போது கொஞ்சம் பெருமிதமாக இருந்தது. சிரித்துக் கொண்டான்.
பெண் மண்டபத்திற்கு வந்து சற்று நேரத்திற்கு பிறகு நிச்சயதார்த்தம் வைத்திருந்தார்கள். சபையில் அத்தனை பேரும் கூட, ஆனந்தனும் அமர்ந்திருந்தான்.
பெண்ணும் அழைத்து வரப்பட, சடங்குகளை ஆரம்பித்தார்கள்.
ஒரு கணம் மதுவின் இதயம் நின்று துடித்தது. அந்தக் கணப் பொழுதில் வர்சினியின் முகம் மின்னலாய் வந்து போக, தன்னை சுதாரித்தவள், நிகழ்காலத்தை மட்டும் நினைத்துக் கொண்டாள்.
பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளைக் கோலத்தில் மாமனை பார்த்ததும் மனதில் இருந்த அத்தனை சஞ்சலங்களும் மறைந்து போனது.
‘லக்னப் பத்திரிக்கை' படித்து திருமணத்தை இரு வீட்டாரும் நிச்சயப் படுத்தினார்கள். அது முடியவே, நலங்கு வைக்கிறோம் என்று மஹாவும், கார்த்திகாவும் மதுவை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பகுதியில் இதுபோன்ற சடங்குகள் இல்லை என்பதால் பெரியவர்கள் சிறுசுகளுடன் சேர்ந்து அவர்கள் சொல்வதை செய்தார்கள். சீதாவின் மேற்பார்வையில் சுமங்கலிகள் நலங்கு வைக்க, அந்த இடமே கலகலப்பாக இருந்தது. மகிழன் அமைதியாக உட்கார்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்திருந்தான்.
"சித்தப்பா, நீங்க கல்யாணப் பொண்ணுக்கு நலுங்கு வைக்கலியா? வாங்க வாங்க." மஹா அவனை கைப்பிடியாக அழைத்துச் செல்ல, அங்கிருந்த அனைவருமே சிரித்தார்கள். மகிழனுக்கு சங்கடமாகிப் போனது.
"மஹா, சித்தப்பா பாவம் இல்லையா" சொல்வதைக் கேட்டால் அது மஹா இல்லையே. விடாப்பிடியாக அவனை அழைத்துச் சென்றவள் சந்தனக் கிண்ணத்தை அவனிடம் நீட்ட...
ஆவலாய் அவன் முகம் பார்த்தவளிடம் கண்ணாலேயே அனுமதி கேட்க, அங்கே ஆணையே பிறந்தது. சிரித்தபடி அதை எடுத்தவன் மதுவின் கன்னத்தில் பூசினான். அண்ணார்ந்து தன் முகம் பார்த்து சிரித்தவளை அள்ளிக் கொள்ளலாம் போல இருந்தது, அந்தக் கணத்தை கண்மூடி அனுபவித்தாள் மது. சுற்றியிருந்த இளையவர்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்க, மதுவிற்கு லேசாக கண்கள் பனித்தது. மகிழனுக்குமே ஏதோ ஓர் புது விதமான நூதன உணர்வு உடலெங்கும் ஓடியது. தன்னையே பார்த்திருந்தவளை பார்த்து வசியமாகப் புன்னகைத்து, கண்ணடித்தவன் பன்னீரைத் தூவி விட்டுப் போனான். இமைக்க மறந்து பார்த்திருந்தாள் மது.
கேளிக்கைகள் அனைத்தும் முடிந்திருக்க, டின்னரை முடித்துவிட்டு எல்லோரும் படுக்கைக்கு தயாரானார்கள. மது தனக்குரிய அறையில் ஓய்வாக அமர்ந்திருந்தாள். போனை எடுத்து அழைக்க, தாமதமாகவே ஆன்ஸர் பண்ணினான்.
மண்டபத்தை நிறைத்திருந்தது நாதஸ்வர ஒலி, ஊர் மக்கள், உற்றார், உறவினர் என நிறைந்திருந்தது அந்த இடம். மணவறையில் ஆனந்தன் உட்கார்ந்து ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தான்.
சற்று முன்னர் கன்னிகாதானம் நடந்து முடிந்திருந்தது. சந்திரனும், அருந்ததியும் கண்கள் குளமாக தங்கள் மகளை தாரை வார்த்துக் கொடுத்திருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த கூறைப் பட்டுடன் மணமகள் அலங்காரம் நடந்து கொண்டிருக்க, சபையில் கூடியிருந்த பெரியோர்களிடம் தாலி இருந்த தட்டத்தை எடுத்துச் சென்று ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தாள்
எல்லோர் கண்களும் மணப்பெண் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தது.
மணமகளின் அறைக்கதவு திறக்கவே, எல்லோர் கண்களும் அங்கு ஆவலாகத் திரும்பியது.
அரக்கு நிறமும், மஞ்சளும் போட்டி போட ஜொலித்தது அந்த கூறைப்பட்டு. உடல் முழுவதும் மயில் கண்கள் ஜரிகைகளால் நெய்யப்பட்டிருக்க, அடர்ந்த சிவப்பில் பெரிய போடர் இருந்தது. ஒரு சாண் அகிலத்தில் இருந்த அந்த போடரில் சிறிதும் பெரிதுமாய்ப் பூக்களும், மாங்காய் டிசைனும் அள்ளித் தெளித்திருந்தது. ஹெட் பீஸ் தனியாக தங்க நிறத்தில் தக தகவென்று இருந்தது. அரக்கு நிற
ப்ளவுஸ்பைரவியின் கிறச்சிற்சாச்சி அடிச்சா
அரக்கு நிறமும், மஞ்சளும் போட்டி போட ஜொலித்தது அந்த கூறைப்பட்டு. உடல் முழுவதும் மயில் கண்கள் ஜரிகைகளால் நெய்யப்பட்டிருக்க, அடர்ந்த சிவப்பில் பெரிய போடர் இருந்தது. ஒரு சாண் அகிலத்தில் இருந்த அந்த போடரில் சிறிதும் பெரிதுமாய்ப் பூக்களும், மாங்காய் டிசைனும் அள்ளித் தெளித்திருந்தது. ஹெட் பீஸ் தனியாக தங்க நிறத்தில் தக தகவென்று இருந்தது. அரக்கு நிற ப்ளவுஸ் பைரவியின் நிறத்திற்கு தூக்கி அடித்தது.
உடம்பில் ஓர் இடம் பாக்கி இல்லாமல் ஆபரணம் பூட்டி இருந்தார் அருந்ததி. மாப்பிள்ளை வீடு ஊரிலேயே மிகவும் செல்வாக்கானவர்கள் என்று அறிந்ததால், தான் மகளுக்கு ஏற்கனவே சேர்த்து வைத்திருந்த நகைகள் போக இன்னும் கொஞ்சம் வாங்கிக் கொண்டார். மாப்பிள்ளை வீட்டிற்கு தாங்கள் எந்த வகையிலும் குறைச்சல் இல்லை என்பதை பறை சாற்றுவதாகவே இருந்தது அவரின் ஒவ்வொரு செயல்களும்.
கழுத்து முழுவதும் வரிசையாக அணிகலன்கள் இருக்க, கை இரண்டிலும் வளையல்கள் குலுங்கியது. அவள் மெல்லிடையை தொட்டுத் தழுவியிருந்த தங்க ஒட்டியாணத்தின் பட்டுக் கயிறு அவள் இடை நெருக்க, அதில் தொங்கிக் கொண்டிருந்த முத்து மணிகள் லேசாக சத்தம் எழுப்பியது.
ஆனந்தனுக்கு மலர்ந்தும் மலராத மல்லிகை பூ நிரம்பவே பிடிக்கும் என்பதால் ஒரு கூடைப் பூவை விரும்பியே தலையில் வைத்திருந்தாள் பைரவி. நெற்றிச் சுட்டி, சூரிய சந்திர பிறைகள் என அவள் தலை வர்ண ஜாலம் காட்டியது.
பியூட்டி பார்லர் பெண்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டியிருக்க, பைரவியின் மூக்கில் புதிதாக இடம்பிடித்திருந்த அந்த ஒற்றைக் கல் வைர மூக்குத்தி அனந்தனின் அசையை கட்டியங் கூறியது.
சர்வலங்கார பூஷிதையாக அவள் நடந்து வர, அந்த மண்டபத்தின் அனைத்துக் கண்களும் அவள் மேல் மொய்த்திருந்தது.
ஒரு சில நொடிகள் இமைக்க மறந்து அவளைப் பார்த்திருந்தான் ஆனந்தன். வழமைக்கு மாறாக இன்று சற்று அதிகமாக தீட்டியிருந்த கண்மையும், லிப் க்ளொஸ்ஸும் அவனை மயக்கியது.
மணவறையை சுற்றி குடும்பத்தினர்கள் ஆண்கள் ஒரு பக்கமாகவும், பெண்கள் மறு பக்கமாகவும் நின்றிருந்தனர். தங்கள் பெண்ணை அந்தக் கோலத்தில் பார்த்த பெற்றோர் நெஞ்சு நிறைந்திருக்க, இவள் இனி எங்கள் வீட்டுப் பெண் என்ற புழகாங்கிதத்தில் இருந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
பைரவி நேராக மணவறைக்குப் போகாமல் முதலில் சந்திரனிடம்தான் போனாள். அவர் கைகள் இரண்டையும் பிடித்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டவள், அவரைப் பார்த்து சிரிக்க... நெகிழ்ந்து போனார் சந்திரன். கண்கள் இரண்டும் கலங்க,
"கண்ணம்மா... பைரவி...!" அதற்கு மேல் பேச அவருக்கு வார்த்தை வரவில்லை. சுற்றியிருந்த அனைவருக்குமே கண்கள் கலங்க, மகிழன் அனைத்தையும் ஒரு புன் சிரிப்போடு பார்த்திருந்தான்.
"அப்பாவும், மகளும் என்னைக் கடுப்பேத்துறதுக்கே இப்படி ஸீனைப் போடுவாங்க" அருகில் நின்றிருந்த வாசுகியிடம் கேலியாக அருந்ததி சொன்னாலும், அந்தக் குரலில் பெருமையே மிஞ்சி நின்றது.
"பொண்ணை வரச் சொல்லுங்கோ" ஐயர் குரல் கொடுக்க, சந்திரனே தன் மகளைக் கைப்பிடித்து மணவறைக்கு அழைத்துச் சென்றார்.
அவள் பிறந்த போது முதன் முதலாக அவளை கையிலேந்திய அந்தப் பொழுது சந்திரனின் மனதில் நிழலாடியது. தான் லட்சம் லட்சமாக சம்பாதித்த போது கிடைக்காத சந்தோஷத்தை ஒரு நொடிப் பொழுதில் தன் மகள் தனக்குக் கொடுத்து விட்டதை நினைத்து மகிழ்ந்து போனார்.
சடங்குகளும், சம்பிரதாயங்களும் இன்னும் கொஞ்ச நேரம் நீடிக்க...
வேதியர் வேதம் ஓத, கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, பைரவியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் ஆனந்தன்.
'பாக்கியவதியே! யான் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக இந்த மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூற்றாண்டு வாழ்வாயாக'
உற்றமும், சுற்றமும் சூழ இருந்து அட்சதை தூவ அங்கே மாங்கல்ய தாரணம் நடந்தேறியது. மாலையும் கழுத்துமாக தன் அருகே அமர்ந்திருந்தவளை ஒரு நொடி ஆனந்தன் பார்க்க, அந்தப் பார்வையை உணர்ந்தவள் தானும் தலை நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் நான்கும் கலந்து கொள்ள அங்கே ஆனந்தம் கும்மி கொட்டியது.
'நீயும், நானும் முதுமை அடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம்',
'நீயும், நானும் முதுமை அடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம்',
என்று மந்திரமோதி தன் மனைவியின் கைப் பிடித்து அக்கினியை வலம் வந்தான் ஆனந்தன்.
அம்மி மிதித்து...
'இந்தக் கல்லைப் போல உறுதியாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள்'
என மந்திரமோதி அவள் காலில் மெட்டி அணிவித்த போது அவன் சின்ன விரலில் கணபதி ஹோமம் நடந்த அன்று அவள் போட்டு விட்ட மோதிரம் இருந்தது.
தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க, நண்பர்களும் உற்றார் உறவினர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். லியம் அருகில் வந்தவன், ஆனந்தனை ஆரத்தழுவி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். பைரவியின் கையைப் பிடித்தவன் வார்த்தைகள் வராமல் வெறுமனே சிரித்தான். மூன்று நாட்கள் மாத்திரமே விடுமுறை கிடைத்திருந்ததால், அன்றே புறப்பட வேண்டி இருந்தது. மணமக்களிடம் விடைபெற்றுக் கொண்டான்.
அடுத்து அவர்களை நோக்கி அரவிந்தன் வர, பைரவியின் உடல் விறைத்தது. அதை உணர்ந்த ஆனந்தன் அவள் கைபிடித்து ஆசுவாசப் படுத்த, அவன் முகம் பார்த்தவள் சிரிக்க முயன்று தோற்றாள்.
அரவிந்தன் எந்த வித பாகுபாடும் இன்றி ஆனந்தனை தழுவிக்கொண்டான். பைரவியின் அருகில் வந்தவன், அவள் வெளுறிய முகம் பார்த்து கனிவு கொண்டவனாக அவள் தலையை வருடிக் கொடுத்தான். அவள் லேசாகப் புன்னகைக்கவும்,
அரவிந்தன் எந்த வித பாகுபாடும் இன்றி ஆனந்தனை தழுவிக்கொண்டான். பைரவியின் அருகில் வந்தவன், அவள் வெளுறிய முகம் பார்த்து கனிவு கொண்டவனாக அவள் தலையை வருடிக் கொடுத்தான். அவள் லேசாகப் புன்னகைக்கவும்,
"நீ ரொம்ப லக்கி பைரவி, ஆனந்தன் என் நண்பன் என்றதுக்காக இதை நான் சொல்லலைம்மா, மனசார சொல்லுறேன். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும். மனசுல எந்த குற்ற உணர்ச்சியும் உனக்குத் தேவையில்லை பைரவி. என் தங்கை அவள் வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கணும். அப்போ தான் இந்த அண்ணனுக்கு சந்தோஷம். சரியாடா" அவன் நீளமாகப் பேசி முடிக்க, விக்கித்துப் போனாள் பைரவி. இதை அவள் அரவிந்தனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்க...
"அரவிந்த் அண்ணா” என்க,
"எதுக்கும் கண் கலங்க கூடாது சரியா?"
"ம்..." அனைத்தையும் உணர்ச்சிகளற்ற முகத்தோடு பார்த்திருந்தான் ஆனந்தன்.
மணமக்கள் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். விருந்தினர் ஆரவாரம் ஒரு பக்கம் இருக்க, குடும்ப அங்கத்தவர்கள் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார்கள். சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாம் முடிவு பெற்றிருக்க கொஞ்சம் களைப்பாக உணர்ந்தாள் பைரவி.
அவள் முகத்தைப் பார்த்த பாட்டி,
"சாதனா, அண்ணியை அவங்க ரூமிற்கு கூட்டிட்டு போம்மா, கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்" என்றார். பட்டுப் புடவையில் பெரிய மனுஷியாக அன்று சாதனா
பேசிக்கிட்டே இருப்பேன்."
அவள் ரூம் கதவை மூடிவிட்டுப் போக பைரவி கொஞ்ச நேரம் கட்டிலில் சாய்ந்த படி கண்மூடி அமர்ந்திருந்தாள்.
அன்றைய நிகழ்வுகள் அனைத்தும் மூடிய விழிளுக்குள் படமாக ஓடியது. மாப்பிள்ளைக் கோலத்தில் மாலையுங் கழுத்துமாக ஆனந்தன் அத்தனை கம்பீரமாக இருந்தான். அவன் கண்கள் தன்னை வருடுவதை தலை குனிந்து அமர்ந்திருந்தாலும் பைரவியால் உணர முடிந்தது.
சுவரில் மாட்டியிருந்த அந்தப் பெரிய ஃபோட்டோவை எப்போதும் போல இப்போதும் விழியெடுக்காமல் பார்த்திருந்தாள் பைரவி.
கால்கள் தன்னிச்சையாக அங்கே இழுத்துச் செல்ல, அதனருகே போனவள், அந்த ஆண்மை நிறைந்த முகத்தை பார்த்த வண்ணம் இருந்தாள் இன்று அவள் பார்வையில் அத்தனை உரிமை இருந்தது. தன் இத்தனை வருடக் கனவு நனவானதில் மெய்மறந்து நின்றவளை பின்னோடு அணைத்தது இரண்டு கரங்கள். அவள் கூந்தல் காட்டில் முகம் புதைத்தவன், அந்த மல்லிகை வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தான். அந்தக் கைகள் சற்றே எல்லை மீறத் துடிக்க, அதை தடுத்து நிறுத்தியவள் தலை குனிந்து கொண்டாள்.
அவளைத் தன் புறமாகத் திருப்பிய ஆனந்தன் அவள் கண்களுக்குள் பார்க்க, அவனைப் பார்க்க மறுத்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.
"ஹேய் பைரவி, இது நியாயம் இல்லை." மெதுவாக அவனை விட்டு விலகியவள்,
"நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிக்கட்டுமா?" என்றாள்.
"இல்லையில்லை. இது ரொம்ப அழகா இருக்கு. நான் இப்படியே கொஞ்ச நேரம் பாக்கனும். மண்டபத்துல சரியா பாக்க முடியலை பைரவி" என்றவன், அவளை இன்னும் நெருங்கி...
"பட்டு, இந்தப் பேச்சு இப்ப ரொம்ப முக்கியமா?” அவன் குரல் கரகரப்பாக வந்தது. அதில் சிலிர்த்ததுப் போனவள், அவனை நிமிர்ந்து பார்க்க, அவள் முகம் பற்றியவன், உரிமையோடு அவள் இதழ்களில் இதழ் பதித்தான். கண்மூடி அதை ஏற்றவள் அந்த நொடிகளை அனுபவித்திருக்க, அத்தனை சீக்கிரத்தில் அவளை விடுவிக்கும் எண்ணம் இருக்கவில்லை ஆனந்தனுக்கு.
அந்த மயக்கத்தில் திளைத்திருந்தவன் இன்னும், இன்னும் என அவளுக்குள் புதைந்து போனான். அவர்கள் ஏகாந்தத்தை குலைத்தது வெளியே கேட்ட பாட்டியின் குரல்.
சட்டென்று பைரவி விலக, அதில் அதிருப்தி கொண்டவன்,
"பைரவி!" என்றான் சற்று அதட்டலாக.
"ஆனந்த்... பாட்டி..." அவள் திணற, அவள் இடையை வளைத்து தனதருகே இழுத்தவன்,
"பாட்டிக்கு என்ன இப்போ?" என்றான். அவள் தடுமாற, அவள் நிலையை புரிந்து கொண்டு, அவளைக் கைப்பிடியாய் வாட்ரோபிற்கு அழைத்துச் சென்றவன், அதைத் திறந்து அந்தக் கவரை அவள் கைகளில் கொடுத்தான்.
மிகவும் கனமாக இருக்கவே, கட்டிலில் வைத்தவள் பிரித்துப் பார்க்க, அவன் சொன்ன வெள்ளை
மிகவும் கனமாக இருக்கவே, கட்டிலில் வைத்தவள் பிரித்துப் பார்க்க, அவன் சொன்ன வெள்ளை முகூர்த்தப் பட்டு இருந்தது.
"ரொம்ப அழகா இருக்கு" என்றாள்.
"அழகா இருக்கில்ல? அப்போ தாங்ஸ் சொல்லு பைரவி” என்க,
"ரொம்ப ரொம்ப தாங்ஸ் ஆனந்த்" என்றாள்.
"இந்த தாங்ஸ் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி. இப்போ இந்த தாங்ஸ் எல்லாம் செல்லுபடியாகாது" என்றான். சிரித்தவள், சற்றே எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து,
"தாங்ஸ்" என்றாள். உதட்டைப் பிதுக்கியவன்,
"இதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி குடுத்தாச்சு" என்றான். அவள் கலவரமாகப் பார்க்க... கண்ணடித்தவன்,
"நான் குடுத்த மாதிரி குடுக்கனும்" என்றான்.
"வாட்?" என்றாள் பைரவி அதிர்ந்து போய்.
"எதுக்குடி உனக்கு இத்தனை ஷாக்? அப்படி என்னத்தை நான் கேட்டுட்டேன்?” அவன் இலகுவாகக் கேட்க, முறைத்தவள்,
"நீங்க குடுக்காத ஒன்னு நான் குடுக்கட்டுமா?" என்றாள்.
அவள் ஏதோ வில்லங்கம் பண்ணப் போகிறாள் என்று புரிந்தவன், சிரித்துக் கொண்டே...
"பட்டு, நீ எங்கயோ போயிட்டடீ! குடு, குடு என்றான்" மீண்டும் மெதுவாக எம்பியவள், அவன் கன்னத்தைக்
Comments
Post a Comment