mm2
காலையிலேயே திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு இருந்தார்கள் மதுநிலாவும், மகிழனும். நான்கு மணி நேரப் பயணம். ஓட்டுநர் இருக்கையில் இருந்த மதுவின் தோற்றம் இன்று கூடுதல் அழகாக இருந்தது. தன் காதல் கைகூடும் மகிழ்ச்சி அவள் கண்களில்.. இன்று ஊருக்கு வருவதாக தன் தாய்க்கு நேற்றே தகவல் சொல்லிவிட்டாள். ஆனால் மாமனை பற்றி மூச்சு விடவில்லை. அம்மா தன் உணர்வுகளை புரிந்து கொள்வார் என்று மனம் ஆறுதலாக இருந்தாலும், அப்பாவை நினைக்கும் போது கொஞ்சம் கவலையும், பயமும் இருந்தது மதுவுக்கு.
கார் சிட்டியை விட்டுத் தாண்டியதும் வேகமெடுத்தது. மது கைகளில் அந்தக் ஹோண்டா சிட்டி மிக லாவகமாக முன்னால் சென்ற வாகனங்களை முந்திக்கொண்டு பறந்தது. மகிழன் அவள் கார் ஓட்டும் அழகை வியந்து பார்த்தான். அவன் ரசிப்பதை கண்ட பெண்ணுக்குள் உற்சாகம் பிறந்தது.
"ஏய் மது இவ்வளவு அழகா கார் ஓட்டுற..
"தாங்க்ஸ் மாமா... என்று உள்ளம் இனிக்க சிரித்தாள் பெண்.
வாழ்க்கையில் எல்லாவற்றையும் சவாலாக எடுத்துக் கொள்பவள் மது
மதுரை நெருங்கியதும் ஒரு உணவு விடுதியின் முன்பாக நின்றது கார்.
"சாப்பிடலாம் மாமா, ரெம்ப பசிக்குது." என்று வயிறை தட்டி கட்டி அவள் சொன்ன அழகில் மகிழன் குட்டி மதுவை பார்த்தான்.
காலை உணவை முடித்து, சூடாக டீயும் அருந்திவிட்டுக் கிளம்பிய பயணம் அதன் பிறகு எங்கேயும் நிற்கவில்லை.
நான்கு மணிநேர பயணம் சலிக்காதவாறு என்னென்னவோ பேசினாள். ஊரை நெருங்கும் போது நேரம் பத்து தாண்டிவிட்டது.
விளாத்திக்குளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்னும் தகவல் பலகை கடந்ததும் சட்டென்று அமைதியாகி விட்டாள் மது. கொஞ்சம் படபடப்பு தெரிந்தது, காருக்குள் ஏசி இருந்தும் நெற்றியில் வியர்த்தது. அவள் கார் ஓட்டும் அழகை ரசித்துக் கொண்டே வந்த மகிழன் அவளின் முக மாறுதல்களை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டான்..
நகருக்குள் நுழைந்த கார் கடைவீதி, பேருந்து நிலையம் கடந்து எட்டையபுரம் சாலையில் திரும்பி கறிக்கடைகள், சினிமா தியேட்டர் கடந்து மது வீட்டு வாசலில் நின்றது, காரில் இருந்து மதுதான் முதலில் இறங்கினாள். அமர்ந்தே இருந்த மாமனை கேள்வியாக பார்த்து என்ன? என்று கண்களால் கேட்க.
"நீ முதல்ல உள்ள போ மது” என்று சொன்னவனை வியப்பாக பார்த்தவள்..
"என்ன மாமா பயமா இருக்க? பொண்ண சைட் அடிக்க தெரியும் போது, அடி விழுந்தாலும் வாங்க தைரியம் இருக்கணும்” சிரிப்போடு அவள் சொல்ல, அவனும் சிரித்தான், தைரியமாக வந்துவிட்டாலும் அவனுக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்தது.
மது பயந்ததைப் போல அவள் அப்பா குறித்து மகிழனுக்கு எந்த சங்கடமும் இருக்கவில்லை. அவர் தன்னைப் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கை நிறையவே இருந்தது. ஐந்து வருடங்கள் இந்த வீட்டின் வாசற்படியைக் கூட மிதிக்காமல் வீம்பாக இருந்துவிட்டான். வீட்டுக்குள் உரிமையோடு நுழைந்த கால்கள் இன்று தயங்கி நிற்கிறது.
காரைவிட்டு இறங்கிய மகிழனை "உள்ளே வா மாமா' கையைப் பிடித்து மது இழுத்த போதும் நகராமல் நின்றான். கோபமாக அவனை முறைத்துக் கொண்டே கேட்டை திறந்து கொண்டு அவள் மட்டும் உள்ளே சென்றாள்.
மகிழன் கம்பீரமாக நின்ற அக்காவின் வீட்டை நிமிர்ந்து பார்த்தான். ஒரு கைதேர்ந்த கட்டட கலைஞனின் கவிதையாய் இருந்தது வீடு. இந்த வீடு சந்திரன் இப்போது புதிதாக காட்டியது, இரண்டு வருடங்கள்தான். மகிழன் முதல் முறையாக இப்போது தான் இந்த வீட்டுக்கு வருகிறான். 4800 சதுர அடி நிலத்தில் 2000 சதுர அடியை வீடாக்கி இருந்தனர். சுற்றிலும் ஐந்து அடி உயர மதில்சுவர், இரண்டு கார்கள் நிறுத்தும் அளவுக்கு போர்டிகோ, அதன் முன்னால் படர்ந்து விரிந்த மல்லிகை பந்தல். காலியாக இருந்த இடத்தில் அழகான பூந்தோட்டம். மகிழன் வீட்டை ரசித்து நிற்க.. உள்ளே சென்ற மது அழைப்பு மணியை அழுத்த, இளமாறன் வந்து கதவைத் திறந்தான். வெளியே தன் அக்காவை தாண்டி மகிழனை பார்த்தவன்,
"அம்மா மாமா வந்திருக்காங்க' என்று சத்தமாக கத்திக்கொண்டே அவனைப் பார்த்து ஓடி வந்தான்.
மது தம்பியையே ஆச்சர்யமாக பார்த்து நின்றாள். அக்காவின் மனதில் உள்ளது தம்பிக்கும் தெரியும்தான், ஆனால் அவனும் மகிழனை எவ்வளவு தூரம் எதிர்பார்த்தான் என்பது அவன் ஓட்டத்தில் தெரிந்தது.
மகிழன் கைகளை பிடித்துக் கொண்டு "அக்கா உங்க கூடத்தான் வந்தாளா மாமா' என்று மகிழ்ச்சியில் குதித்தான். தம்பி வந்துவிட்டான் என்றதும் தாமரை உள்ளே நுழைந்த மகளைக் கூட பார்க்காமல் வாசலுக்கு வந்திருந்தார்.
"மகி உள்ளே வாடா, ஏன் அங்கேயே நின்னுட்ட?" மகிழ்ச்சி பொங்க தாமரை அழைத்த பின்புதான் கதவை நோக்கி நகர்ந்தான் மகிழன். ஓடிவந்து தம்பியை கட்டிக்கொண்டார் தாமரை, கண்களில் தாரை தாரையாக கண்ணீர். மகிழன் கண்களும் கலங்கி இருந்தது.
நால்வரும் உள்ளே வர.. ஹாலில் சோபாவில் அமர்ந்து இருந்தார் சந்திரன். டிவியில் செய்தி ஓடிக்கொண்டு இருந்தது. உள்ளே வந்த மகிழன் இருகரம் கூப்பி மாமனை வணங்கினான், பதிலுக்கு சந்திரனும் வணக்கம் சொல்லிவிட்டு அமரும்படி இருக்கையை காட்டினார். எதிரில் அமர்ந்து கொண்டான்.
மது உள்ளே வந்ததில் இருந்து படபடப்புடனேயே இருந்தாள், எதிரே கம்பீரமாக சந்திரன் அமர்ந்திருக்க தவிப்புடன் அமர்ந்திருந்தான் மகிழன், ஒரு வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இதுநாள் வரை சந்திரன் அக்காவின் கணவர். ஆனால் இன்று? இனிமேல்?
மௌனத்தை உடைத்தார் தாமரை.
"சித்தி நல்ல இருக்காங்களா மகி?'
"ம்ம்" அம்மாவும் கூட வர்றதா இருந்ததுக்கா... கொஞ்சம் கால் முடியல' என்றவன் நிமிர்ந்து தன் அக்காவை பார்த்தான்...
"எங்க மேல என்னடா கோபம்? அஞ்சு வருசமா ஒதுங்கி இருந்துட்ட! ஆதங்கமாக கேட்ட தாமரையின் கண்கள் மீண்டும் கலங்கியது.
மகிழன் பேச முடியாமல் மௌனமாக அமர்ந்திருந்தான்.
"சொல்லுங்க மாப்ள, உங்க அக்கா தான் கேட்கிறா! எப்போதும் அவனை ஒருமையில் அழைக்கும் மாமாவின் வார்த்தைகள், இன்று பன்மைக்கு மாறியிருந்தது.
மாமனை நேருக்கு நேராக பார்த்தான் மகிழன்.
"மதுவை எனக்கு பிடிச்சிருக்கு மாமா, அந்த எண்ணத்தோடு இங்க வர்ரது உங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல? அதான்..." என்று எழுந்து நின்றான்.
"உட்காருங்க மாப்ள" உங்ககிட்ட நிறைய பேச இருக்கு' என்று அவனை பார்த்து மூச்சை இழுத்து விட்டவர்.
நீங்க ரெண்டு பேரும்தான் ஏற்கனவே முடிவு எடுத்தாச்சே அப்புறம் என்ன?” நிதானமாக கேட்டர் சந்திரன், மது கண்களில் கண்ணீர் அருவியாய் ஓடியது. மகிழன் எதுவும் பேசமுடியாமல் அவரையே பார்த்திருந்தான்.
"உண்மையைச் சொல்லணும்னா.. "உங்களுக்கு பொண்ணு கொடுக்க முதல்ல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை." அது உங்களை பிடிக்காம எல்லாம் இல்லை, தன்னோட பொண்ணு எந்தக் குறையும் இல்லாமல் வசதியா வாழனும்னு நினைக்கிற சராசரி அப்பானோட ஆசை.
"எனக்கு புரியுது மாமா"
"ஆனா... உங்க அக்கா அதைப்பத்தி எதையுமே யோசிக்கலை, ஏன் தெரியுமா?" அவளுக்கு உங்கமேல அவ்வளவு பாசம், என் தம்பிக்கு தான் என் மகளை கட்டி கொடுப்பேன்னு சண்டை போட்டு என்னை சம்மதிக்க வச்ச, மகிழன் நிமிர்ந்து தன் சகோதரியை பாசமாய் பார்த்தான். தாமரையின் கண்கள் இன்னும் கலங்கியே இருந்தது...
"அவ பாசத்தை நீங்க காப்பாத்தலயே மாப்ள! வீட்டுக்கும் வராம எதுக்கு இவ்வளவு தூரம் விலகிப் போனீங்க?
தலைகுனிந்து இருந்தான் அவர் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. பாசத்தை பேசும் மனிதரிடம், பணம் இல்லை, நான் அப்போது ஏழ்மையில் இருந்தேன் என்று சொல்ல மனது வரவில்லை. தவித்துப் போய் அமர்ந்து இருந்தான்.
சந்திரனுக்கே அவனை பார்க்க வேதனையாக இருந்திருக்க வேண்டும். எழுந்தவர் அவனருகில் வந்து அமர்ந்து தோளோடு அவனை அணைத்துக் கொண்டார். அதைக்கண்டு தாமரை நெகிழ்ந்து போக. மது ஓடிவந்து தன் தந்தையை கட்டிக்கொண்டாள். அவள் கண்களில் அத்தனை மகிழ்ச்சி. ஒரு தந்தையாய் சந்திரன் இதுவரை பார்த்திராத மகிழ்ச்சி.
ஒரு கையால் மருமகனையும், மறுகையால் மகளையும் அணைத்துக் கொண்ட சந்திரன்.
"என் மக மனசு இந்த அப்பாவுக்கு தெரியாத' என தன் தலையை மகள் தலையோடு செல்லமாக முட்டினார்.
"பெண் பிள்ளைகள் மீது தந்தைக்கு இருக்கும் பாசத்தை நிரூபித்துக் கொண்டிருந்தார் அந்த பாசமிகு தந்தை. எம்பொண்ணு சந்தோஷமா வாழணும், எனக்கு அது மட்டுந்தான் வேணும் என்றது அவரது செயல்கள்.
தந்தையின் இடுப்பை கட்டிக்கொண்டு அவர் மீது சாய்ந்து கொண்டாள் மது. அவள் கண்களில் இன்னும் மகிழ்ச்சியின் கண்ணீர்...
சந்திரனை பிரமிப்பாக பார்த்தான் மகிழன், மகளின் மேல் இந்த மனிதருக்கு எத்தனை அன்பு, தன் பெண்ணின் வாழ்க்கை மேல் எத்தனை அக்கறை இருந்தால் இதை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்வார்.
குடும்பம்தான் தன் உலகம் என்று வாழ்ந்து பழகிவிட்ட மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்களோ? பாசம் வைப்பதில் அவரை அடித்துக் கொள்ள முடியாது என்று அக்கா கூடச் சொன்னாளே! அந்த உண்மையை கண்ணால் பார்க்கிறான்.
மனதுக்குள் மழை பெய்வது போல இருந்தது மகிழனுக்கு, மதுவைப் பார்த்து புன்னகைத்தான். அவள் உதட்டைச் சுழித்து அவனை கேலி செய்தாள். என் அப்பா எப்படி? என்று பெருமை பேசியது அவள் விழிகள்.
"எனக்கு ஒரேயொரு ஆசைதான் மாப்ள "என் பொண்ணு எப்போதும் கண் கலங்கக் கூடாது' கண்களில் உயிரைத் தேக்கிச் சொன்னார் சந்திரன். அதுவரை அமைதியாக இருந்தவன் சட்டென்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
"மது என்னோட உயிர் மாமா" உணர்ச்சி ததும்ப மகிழன் சொன்னபோது சந்திரன் தன் கண்களை ஒருமுறை மூடித் திறந்தார்.
"இதில் அம்மாவுக்கு? மகிழனை கேள்வியாக பார்த்தார் சந்திரன்.
அம்மாவுக்கு எல்லாம் தெரியும் மாமா "அவங்க சம்மதம் இல்லாம என்னோட எந்த முடிவும் இருந்ததில்லை! அவன் சொல்ல சந்திரன் அவன் கைகளை அழுத்திக் கொடுத்தார்.
தம்பி வந்த மகிழ்ச்சியில் தாமரைக்கு என்ன செய்கிறோம் என்றே புரியவில்லை. மகிழன் தேநீர் குடித்து ஐந்து நிமிடங்கள் ஆகவில்லை, அவன் முன்னால் பழரசம் இருந்தது. கூடவே புரூட் கேக்கும்.
மதிய சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்க தந்த லிஸ்டில் இருந்ததை பார்த்து சந்திரனுக்கு மயக்கமே வந்துவிட்டது.
"தாமரை இது உனக்கே கொஞ்சம் ஓவராக தெரியலையா?
"போங்க நீங்க' எத்தனை வருசம் போய் என் தம்பி வந்திருக்கான், சீக்கிரம் வாங்கிட்டு வாங்க.. இப்பவே மணி பத்தாச்சு சந்திரனை விரட்டினார்.
சமையல் அறையில் இருந்து கொண்டு தாமரை சத்தமாக கேட்டார். மகி தோசைக்கு சாம்பார், சட்னி மட்டும் போதுமா? இல்ல வேற எதுவும் செய்யவா?
பழரசத்தையே குடிக்க முடியாமல் திணறும் மாமனை பார்த்து மதுவும், இளமாறனும் விழுந்து விழுந்து சிரிக்க மகிழன் செய்வதறியாமல் விழித்தான்.
மதுவுக்கு மாமனை பார்க்க பாவமாக இருந்தது. சமையல் அறைக்குள் சென்று தன் தாயின் கழுத்தை கட்டிக்கொண்டவள்.
"அம்மா நானும், மாமாவும் வரும்போதே ஹோட்டல்ல சாப்பிட்டாச்சு, அங்க ஜூசை வச்சுக்கிட்டு மாமா குடிக்க முடியாமல் திணறுறார், நீ இங்க தோசையை அடுக்குற.. "பாவம் மா அவரு விட்டுரும்மா' என்று கேலி பேச.
தாமரை மதுவின் கன்னத்தை பிடித்து ஆசையாக கிள்ளினார். தாயின் முகம் மகிழ்ச்சியில் பூரித்துப் போய் இருந்தது. மகளின் கண்களுக்கு தாய் பத்து வயது குறைந்ததுபோல் உற்சாகமாக தெரிந்தார்.
"மது இந்த வெங்காயத்தை வெட்டும்மா.. என்று அவளுக்கு ஒரு வேலையை ஒதுக்கியவர்,
"மாறா.. என்று அழைக்க இளமாறன் மகிழனையும் இழுத்துக் கொண்டு மாடிக்கு ஓடிவிட்டான்.
கீழ்தளத்தில் பெரிய ஹால், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, பூஜை அறை என்று இருக்க, மேல்தளத்தில் இருபதுக்கு பதினாறு அளவில் இரண்டு பெரிய அறைகளும், ஒரு சிறிய விருந்தினர் அறையும் இருந்தது. மதுவின் அறைக்குள் மகிழனை அழைத்து வந்திருந்தான் இளமாறன். மதுவை போலவே அவள் அறையும் அவ்வளவு அழகாக இருந்தது.
"அக்கா ரூம் எப்போதும் நீட்ட இருக்கும் மாமா' எதையாவது மாற்றி வைத்தால் அவ்வளவுதான் பத்ரகாளியா மாறிடுவா!.
"மதுவுக்கு கோபம் வருமா? மகிழன் ஆச்சர்யமாக கேட்டான்
"கோபம் வருமா வா? "ஐயோ' பாவம் மாமா நீங்க! என்று சிரித்தான்.
மதுவின் விருப்பு, வெறுப்புகளை, ஆசைகளை, சேட்டைகளை இளமாறன் ஒவ்வொன்றாக சொல்ல தனக்குள் குறித்துக்கொண்டான் அவள் வருங்கால கணவன்.
மதிய உணவுவரை இருவரும் மேலேயே இருந்தனர். தந்தை இருந்ததால் மது மேலே வரவேயில்லை. தாமரை உணவுண்ண அழைக்க இருவரும் கீழே வந்தார்கள். மதுவை பரிமாறச் சொல்ல, மகிழனுக்கு வெகு கவனமுடன் அவன் இலையை பார்த்துப் பார்த்து பரிமாறினாள். மட்டன், சிக்கன், மீன், இறால் என்று வாழை இலையையே மறைத்தது உணவு வகைகள்.
மகிழன் தன் அக்காவை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தான்.
"என்னக்கா அதுக்குள்ள இவ்வளவு செஞ்சிருக்க?
அவன் தலையை தடவிக்கொண்டே "சும்மா சாப்பிடுறா.. எத்தனை வருஷம் ஆச்சு என் கையாள உனக்கு சமைச்சுப் போட்டு.
"மாப்ள உங்க அக்காவுக்கு இப்படி எல்லாம் சமைக்க தெரியும்னு எனக்கே இன்னைக்கு தான் தெரியும் என்றார் சந்திரன்.
ஆமா இவருக்கு நான் எதுவுமே சமைச்சு கொடுக்கல பாருங்க..
கேலியும், கிண்டலுமாய் வயிறும், மனசும் ஒன்றாய் நிறைந்தது அனைவருக்கும்.
தொழில் சார்ந்த விடயங்களை பகிர்ந்து கொண்டு மாமனுடன் அமர்ந்து தேநீர் அருந்தியவன்
"நேரமாச்சு, "அப்போ நான் போயிட்டு வரேன், மாமா" என சந்திரனிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தான்.
"சரி மாப்ள' என்று சோபாவில் அமர்ந்தவாறு விடைகொடுத்தவர் அவன் புறப்பட போவதாக சொன்னதும் மகளின் முகம் வாடிப்போனதை கவனிக்க தவறவில்லை. சந்திரன் சோபாவிலேயே அமர்ந்து விட தாயும் பிள்ளைகளும் முகப்பு வாசல்வரை வந்தார்கள்.
தாமரையிடமும், இளமாறனிடமும் சொல்லிக் கொண்டவன். மதுவிடம் கண்ணசைவில் விடைபெற அனுமதி கேட்க, அவள் தலை தானாக அசைத்து விடைக்கொடுத்தாலும். அவனை கலவரமாக பார்த்தாள். என்னை விட்டுவிட்டு போகப்போகிறாயா? என்றது அவள் கண்கள்.
இருவரும் பேசிக் கொள்ளட்டும் என நினைத்து மகிழனுக்கு விடை கொடுத்துவிட்டு தாயும், மகனும் உள்ளே சென்றுவிட, வாசலில் நின்றிருந்தனர் மதுவும், மகிழனும்.
அவனது அந்த சிரித்த முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள் மது. இவரால் எப்படி சிரிக்க முடிகிறது? என்னைப் பிரிவது அவருக்கு துன்பமாக இல்லையா?
காரில் ஏறியதும் அவனுமே கலங்கிப் போனான். அவள் கண்ணீர் விழிகளைப் பார்த்த போது, அப்படியே அவளையும் அழைத்துக் கொண்டு போய்விடலாமா எனத்தான் தோன்றியது.
அவளை பார்த்து கொண்டே காரை மெதுவாக நகர்த்தினான், மது அவனை பார்த்து சிரிக்க முயன்று தோற்றுப்போனாள். கண்கள் அருவியாகி இருந்தது. கையை அசைத்து கொண்டே இருந்தாள் கண்ணில் இருந்து கார் மறையும்வரை..
**********
மறுநாள் விடுமுறை நாள். சந்திரன் வீட்டில் இருந்தார். முதல்நாள் மகிழன் வந்து சென்றிருக்க, அதன் பின் மதுவிடம் வழக்கம் போலவே இயல்பாகவே இருந்தார், மகிழன் தொடர்பான எதுவும் பேச்சுக்குள் வரவில்லை. தந்தையிடம் சொல்லாமல் மாமனோடு காரில் வந்ததற்கு மன்னிப்புக்கோர தந்தை ஏதாவது கேட்பார் என எதிர்பார்த்தாவாறு மது அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தாள். கவனித்தவர் எதுவும் சொல்லாதிருக்க,
அமைதியாக அவள் அப்பத்தாவின் அறைக்குள் சென்று தூய்மை செய்வதாக பொருட்களை உருட்ட, அந்த சத்தம் வாசல்வரை கேட்டது. அவள் அப்பத்தா வீட்டில் இல்லை. தன் மகள்வழிப் பேரன் அர்ஜுனுக்கு மதுவை திருமணம் முடிக்க அவருக்கு ஆசை. ஆனால் சந்திரனுக்கு அதில் உடன்பாடு இல்லை. தந்தைக்குத் தான் மகள் மனதில் என்ன இருக்கு என்று தெரியுமே! அதில் அவர் தாய்க்கு கொஞ்சம் வருத்தம். மகள் வீட்டுக்கு போனவர் ஒருவாரம் ஆகியும் இன்னும் திரும்பவில்லை,
மகிழனிடம் ஒரு வசீகரம் இருந்தது. அது சந்திரனையும் ஈர்க்கத் தவறவில்லை. தன் மகளுக்குப் பொருத்தமானவன் மகிழன்தான் என்று அவருக்குள்ளும் பதிந்து போனது. ஒரு தந்தைக்கு மகளின் மகிழ்ச்சியை விட வேறென்ன வேண்டும்,
தாமரை வழக்கம் போல் சமையலில் இருந்தார். இளமாறனும் வீட்டில் இல்லை. மதுவை அழைத்த சந்திரன். பக்கத்தில் அமரவைத்து அவளையே புன்னகையுடன் பார்த்தார்.
"என்னப்பா'
"என் பொண்ணு எவ்வளவு பெரிய மனுசியா வளர்ந்துட்ட..! என்று ஆச்சரியம் காட்டினார்.
சிறுவயதில் மகிழன் மீது மகளுக்கு வந்த ஆர்வம் அந்த வயதின் சிறு தடுமாற்றம் என்றுதான் நினைத்தார் சந்திரன், நேற்று மகிழன் புறப்பட்ட போது மகளின் கண்களில் தெரிந்த தவிப்பில் தந்தை திகைத்து நின்றார். மகிழன் மீது அவள் கொண்ட காதல் புரிந்ததும் இதை இழந்தால் மகள் என்னவாகி இருப்பாள் என்று நினைக்கவே பயந்தார்.
"உனக்கு மகிய கல்யாணம் பண்ண சம்மதம் தானே மதும்மா?
தந்தையின் கேள்வியில் வெட்கம் கொண்டவள், "அப்பா' என்று சிணுங்கி அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள். இதுவரை மது தன் தந்தையிடம் மகிழன் மீதான தன் காதலை சொன்னதில்லை என்பது புரிய, தந்தையின் எதிர்பார்ப்பை அறிந்தவள்,
"எனக்கு மாமாவை ரெம்ப பிடிக்கும்பா” அவர் இல்லாமல்.. கூற வந்ததை நிறுத்தியவள் தந்தை மார்பில் சாய்ந்து கொண்டாள்.
மகள் முகத்தில் என்றும் இல்லாத பரவசம் கண்டார் தந்தை, மென்மையாக அவள் தலையை தடவிக் கொடுத்தவர். பழைய மதுவை மீட்டு வரும் சக்தி மகிழனிடம் தான் உள்ளது என்பதை நேற்றே புரிந்துகொண்டவர். துள்ளலும், பேச்சில் குறும்பும் சேர மான்மகுட்டியாய் துள்ளித் திரிந்த மகளை பார்க்க தந்தையின் உள்ளம் மகிழ்ந்தது போனது,
தங்கள் பெண்ணிற்கு அவர்கள் கொடுத்த வாழ்க்கையை விட மகிழன் ஒரு படி மேலே போய் இன்னும் வளமாக அவளை வாழ வைப்பான் என்று நிச்சயமாக அவர் நம்பினார். அந்த நம்பிக்கை எந்த இடத்திலும் பொய்த்துப் போய்விடக்கூடாது என்பதில் மகிழன் மிகவும் உறுதியாக இருந்தான். தாங்கள் சரியான ஒரு மாப்பிள்ளையைத்தான் தங்கள் பெண்ணிற்குத் தேர்வு செய்திருக்கிறோம் என்று அக்காவும், மாமாவும் திருப்திப்பட வேண்டும்.
அப்படித் திருப்தியான ஒரு வாழ்க்கையைத் தன் மனைவிக்கு, தான் கொடுக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டான்.
******************
நாட்கள் வேகமாக கடந்தது. கல்யாணத்தை திருச்சியில் வைத்துக்கொள்ள மகிழன் பிடிவாதமாக இருந்ததால். சந்திரனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. நீ தனியாக இருக்கிறாய் இங்கேயே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ சொல்லியும் மகிழன் அதைமட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். மதுவிற்கு திருமணத்திற்கு பத்து நாட்கள் முன்பு வரை பரீட்சை இருந்தது, அதனால் திருமணத்திற்கு முதல் நாளில் நிச்சயம் வைத்து அன்றே பெண் அழைப்பையும் வைப்பது நல்லது என்று முடிவு எடுக்கப்பட்டது.
திருமணத்திற்கு முதல் நாள் நிச்சயத்தை பெரிதாக நடத்த நேரம் இல்லாததால் பூ வைக்கும் விழாவை கொஞ்சம் பெரிதாக நடத்த நினைத்தார் சந்திரன். ஒரே பெண்ணின் திருமணவிழா எந்த மனக்குறையும் வராமல் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தார்கள்.
மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என்று தனித்தனியாக விருந்தினர்களை அழைக்கவில்லை. என் தம்பிக்கும், மகளுக்கும் பேசி முடிக்கிறோம் என்று தாமரையே சொந்தங்களை அழைத்தார். பத்து மணிக்கு விழா, அதன் பிற்பாடு மதிய விருந்து என்று ஏற்பாடாகி இருந்தது. மண்டபம் பிடித்தால் இயந்திர தனமாக இருக்குமென்று தங்கள் காம்பவுண்ட்க்கு உள்ளேயே கீற்றில் பந்தல் போட்டு அதை மண்டபத்தை விட அழகாக அலங்கரித்து இருந்தார்கள். விருந்து ஒரு புறம் தயாராகிக் கொண்டிருக்க. வீடு சொந்தங்களால் நிரம்பி வழிந்தது. மாப்பிள்ளை வீட்டார் போய்ச் சேர்ந்தது தான் தாமதம், அந்த இடமே கோலாகலமாகிவிட்டது.
காரில் இருந்து முதலில் மகிழன் இறங்கினான், பட்டு வேஷ்டி சட்டையில் அழகாக இருந்தான், கூடவே அவன் தோழர்கள் அரவிந்த், அன்புச்செழியன். பின்னால் வந்த கார்களில் ஒன்றில் பார்வதியும், யமுனாவும், அர்ச்சனாவும் பின் இருக்கையில் இருந்து இறங்க. முன் இருக்கையில் இருந்து மதன் இறங்கினான். மற்றொரு காரில் மஹா அக்கா கீர்த்தனாவும், அவள் கணவர் சிவாவும், அவர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு மஹாவும் இறங்கினார்கள். மணமகன் தரப்பில் அவ்வளவுதான் கூட்டம். ஆனால், பெண் வீட்டார் தரப்பில் ஒரு ஊரே திரண்டு இருந்தது. அத்தனைப் பேரையும் எந்தக் குறையும் இல்லாமல், முகம் கோணாமல் வரவேற்றார்கள் பெண்வீட்டார்.
புன்னகை முகமாக பாட்டியின் அறையில் அமர்ந்திருந்தாள் மது அதற்குள் அவள் அத்தை வந்து அவளை அழைத்துச் செல்ல, அதே மெல்லிய சிரிப்போடு மலர்ந்த முகமாக வெளியில் வந்தாள், ஹாலுக்கு வந்தவள் கைக்கூப்பி அனைவருக்குமாக ஒரு வணக்கத்தைத் தெரிவித்தாள்.
வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்திருந்தான் மகிழன். கல்யாணக் கலையோ ஏதோ ஒன்று அவள் முகத்தில் கூடுதல் அழகை கொடுத்திருந்தது.
ஆரஞ்சும் மஞ்சளும் கலந்த பட்டு உடுத்தி இருந்தாள். அடுத்தடுத்ததாக அடுக்கி வைத்தாற்போல மாங்காய் டிசைன் தங்க நிற பார்டரில் மின்னியது. உடம்பு முழுவதும் அதே தங்க நிற மாங்காய் டிசைன். கூந்தலைத் தளர்வாகப் பின்னி பூ வைத்திருந்தாள். மிதமான ஒப்பனை. ஆபரணங்கள் அத்தனை அணிந்திருக்கவில்லை. நெற்றி வகிட்டில் சின்னதாக ஒரு நெற்றிச்சுட்டி,
தங்கப் பாவைப்போல நுழைந்த பெண்ணிடம் இருந்து விழியை விலக்க முடியாமல் தவித்தான் மகிழன்.. கோகிலா மகிழனுக்கு எதிரே யமுனாவிற்கு அருகே மதுவை அமர வைத்தார். அவள் கண்கள் ஒரு முறை அண்ணார்ந்து அங்கிருந்த மனிதர்களைப் பார்த்தது தந்தைக்கு அருகே அமர்ந்திருக்கும் மகிழனை ஒருமுறை பார்வையால் வருடிக்கொண்டாள். அந்தக் காந்த விழிகள் மகிழனை பார்த்து புன்னகைக்க, அப்பொழுது தான் அவளைப் புதிதாக பார்ப்பது போல மகிழன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது பார்வையின் தீவிரம் உணர்ந்த மது நாணத்தில் முகம் சிவந்தாள்,
சம்பிரதாயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவு பெற... இன்னாரது பெண் இன்னார்க்கு என்று சுற்றம் சூழ உறுதிப்படுத்தப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டார் சார்பாக, கோகிலா பூ வைக்க, மஹா ஒரு பெரிய ஆரம் அணிவித்தாள். மாப்பிள்ளையின் தங்கையாக அனைத்துக் காரியங்களிலும் அவளே முன்னின்று செய்ய. ஒரு சிலருக்கு உடன்பாடில்லை. அது எப்படி அந்த பொண்ணு மகமுறையில்ல வேணும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
மது படித்துக் கொண்டிருந்ததால், அவளது பரீட்சை முடிந்தே திருமணம் என்று இரு தரப்பும் சொல்லிவிட, அதற்கு தோதான நாள் ஏற்கனவே முடிவு செய்தாகிவிட்டது. வைகாசி 28 சபையில் பெரியவர்கள் முன்னிலையில் உறுதி செய்யப்பட்டது...
"வைகாசி 28 நாள் நல்ல இருக்கு, ஞாயிறுக்கிழமை வருது, எல்லோரும் குடும்பமாக கலந்துக்கலாம் என்ன சொல்றிங்க ஒரு பெரியவர் கேட்க
"அதற்கு முன்னாடியே வேறு முகூர்த்த நாள் இல்லையான்னு' மாப்பிள்ளை கேட்கிறார் என்றான் அரவிந்த், அங்கு மெல்லிய சிரிப்பலை எழுந்தது அனைவரிடமிருந்தும்.
"மாப்பிளைக்கு ரொம்ப தான் அவசரம்" என்று சொந்தங்கள் கேலி பேச, "உண்மையிலே உன் அழகுல மயங்கிட்டார் போல" என மதுவின் காதுக்குள் உரைத்தார்கள் அவள் வயது பெண்கள், மது தான் நெளிந்து கொண்டிருந்தாள்.
"லூசு மாமா' என்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள்.
"இந்த நாள்தான் எல்லோருக்கும் தோதா வருது மாப்ள' உங்களுக்கு எதுவும் மாத்தணுமா? சந்திரன் கேட்டார்.
"இல்ல மாமா' அவன் சும்மா கேலி பேசுறான். எங்களுக்கும் சம்மதம் என்றான் மகிழன்.
"ஸ்கூல் தொடங்கிருமே' என்று யாரோ இடையில் புகுந்தார்கள்.
"ஏம்பா அதனால தானே ஞாயிற்றுக்கிழமை வைக்கிறோம், காலேஜ், ஸ்கூலு தொடங்கினாலும் பரீட்சை எல்லாம் இருக்காது, ஒரு ரெண்டு நாளு லீவு போடுங்க, இது கூட பண்ணலானா அப்புறம் என்ன சொந்த பந்தம்.
ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைச் சொல்ல, கடைசியாக கூடிப்பேசி அந்த நாளையே உறுதி செய்தார்கள். இந்த மாதம், இந்த நாள் திருமணம்,
மகிழ்ச்சி பொங்க தாமரையை இறுக அணைத்துக் கொண்ட மகிழனின் தாய். தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"ஐயோ! என்ன சித்தி இது? எதுக்கு இப்போ கண் கலங்குற?"
"அவனை நல்லாப் பார்த்துக்கிற மாதிரி, பொறுப்பான ஒரு பொண்ணு அமையணும்னு எல்லா கடவுளிடமும் வேண்டிக்கிடுவேன் தாமரை, என்னோட பிரார்த்தனை வீண் போகலை."
"அழாதீங்க சித்தி."
"மனசுக்கு நிறைவா இருக்கு தாமரை, மது எம்புள்ளையை நல்லாப் பார்த்திக்கிடுவா, அவனுக்கு தனியாக பிறந்த குறை இல்லாம செஞ்சிடுவா."
"என்ன சித்தி இதெல்லாம், நாங்க எல்லாம் இல்லையா? அவனை எப்ப பிரிச்சு பார்த்தோம், அவன் என் தம்பி சித்தி...
"எனக்கு அது போதும் தாமரை"
மதிய உணவு சிறப்பாக நடந்து முடிந்தது, விருந்தினர்கள் அனைவரும் கலைந்து போயிருக்க ஒரு சம்பிரதாயத்திற்காக மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார்கள் அமர்ந்து கூடி பேசினார்கள்.
இளையவர்கள் எல்லாம் மாடிக்குப் போக, மகிழனையும் இழுத்துப் போனார்கள், அங்கேதான் மதுவும் இருந்தாள்.
"ஏம்பா பொண்ணு பார்க்க வந்தா' பொண்ணும் மாப்பிள்ளையும் கொஞ்சம் தனியா பேசணும்! அந்த பழக்கம் எல்லாம் உங்க ஊரில் கிடையாதா? என்றாள் மஹா.
"அது புதுசா பார்க்க வர்றவங்களுக்கு! இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பேசிப் பேசித்தான் இந்த கல்யாணமே நடக்குது... என்றாள் கவிதா. அந்த இடமே சிரிப்பாள் அதிர்ந்தது.
"வந்து உன் மாமா பக்கத்தில் உட்காரு செல்லம்" என்று மதுவை பிடித்து மகிழன் அருகில் அமர வைத்தாள் மஹா. மது சட்டென்று எழுந்து விட்டாள்.
'பொண்ணு ரெம்ப வெட்க படுறா வாங்க நாம வெளியே போகலாம்! என்று மஹா சொல்லி முடிக்க..
சட்டென்று கதவு மூடும் சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தார்கள் இருவரும். அவர்களை தவிர அறைக்குள் யாரும் இல்லை. இந்தப் பெண்களின் கூத்து புரிய சிரித்துக் கொண்டான் மகிழன்
மதுவைப் பார்த்தான். இன்று முழுவதும் அவன் கண்ணெதிரேதான் நின்றிருந்தாள். ஆனால் இத்தனை உரிமையாக அவனால் அவளைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. சுற்றிவர அத்தனை உறவுகளை வைத்துக் கொண்டு அப்படிப் பார்ப்பதும் நன்றாக இராது என்பதால் மகிழன் தன்னை அடக்கிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போது அவன் கண்ணிரெண்டும் அவன் பேச்சைக் கேட்கவில்லை. முதல் முறையாக தன் சொத்து அவள் என்று அவளை ரசித்தது.
"புடவையில பார்க்க ரொம்ப அழகா இருக்கே!"
"ஏதாவது பேசேன் மது... இன்னைக்கு பங்ஷன் நல்லா இருந்துதில்லை?"
“ரொம்ப நல்லா இருந்துச்சு."
"உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கா?"
"ஐயையோ! அப்பிடியெல்லாம் இல்லை, இதுவே ரொம்ப க்ராண்ட்டா இருந்துது."
"கல்யாணத்தை ஜமாய்ச்சுடலாம், அதுக்குத்தான் இன்னும் நிறைய நாள் இருக்கே.”
"ஆனா எனக்குத் தான் "நடுவுல இவ்வளவு நாள் இருக்கேன்னு வருத்தமா இருக்கு." அவன் சோகமாகச் சொல்ல இதுவரை இயல்பாக அவன் முகம் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று குனிந்து விட்டாள்.
இன்று மதுவிடம் வெட்கம் கொஞ்சம் கூடியிருந்தது மகிழன் மௌனமாகச் சிரித்தான். தான் பேசும் சின்னச் சின்ன வார்த்தைகளுக்கும் அவள் நாணுவது, முகம் சிவக்கத் தலை குனிவது... பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது அவனுக்கு.
"நான் எப்பிடி இருக்கேன்னு சொல்லவே இல்லையே?"
"அழகா இருக்கீங்க மாமா." குனிந்த தலை நிமிராமல் பதில் வந்தது.
****************
"ஹேய் அம்மு, எப்படி இருக்க? அவன் குரல் குழைந்தது.
"நல்லாவே இல்லை." சொல்லும் போதே குரல் கலங்கியது.
"ரெண்டு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு பொண்ணு பேசுறா பேச்சா இது? ஏன் பொண்ணுக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையோ?" அவன் கேலியில் இறங்க,
"பேச்சை மாத்தாதீங்க மாமா. இந்த வாரம் எத்தனை வாட்டி எங்கூட பேசியிருக்கீங்க சொல்லுங்க. போன் பண்ணுறதே இல்லை. நீங்க என்னை மிஸ் பண்ணவே இல்லையா மாமா?'' அவள் குரல் உடைந்து வந்தது.
"கல்யாணத்திற்கு முன்னாடியே தொழிலை விரிவாக்கும் வேலையை முடிச்சிரணும்னு ரொம்பவே தீவிரமா இருக்கேன் அம்மு, அப்பத்தான் நான் உன்கூட நிறைய நேரம் இருக்க முடியும். இன்னும் ரெண்டு வாரம்தான் இருக்கு. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சிட்டாத்தான் நிம்மதி. அதுக்கப்புறம் ஃபுல் டைம் என் அம்மு கூடத்தான் ?"
"ம்..." அவள் இழுக்க,
"அதை சிரிச்சுட்டே சொல்லலாமே"
"மாமா..."
“என்னடா..?” உலகத்துக் காதலெல்லாம் அவன் குரலிலும் வழிந்தது.
“எனக்கு உங்களைப் பாக்கனும்” அவள் குரல் கெஞ்சலாய் மாறியிருந்தது.
"இன்னும் ரெண்டு வாரம் தான் இருக்குடா, அப்புறம் இந்த அம்மு எப்போதும் மாமன் கூட தான்.
"இன்னும் ரெண்...டு வாரம் இருக்கு, என்னால உங்கள பார்க்கமா இருக்க முடியாது.... ப்ளீஸ் மம்மு ஊருக்கு ஒரே ஒரு நாள் மட்டும் வந்துட்டு போங்க...
“என்னால வரமுடியாது அம்மு. அது அழகும் இல்லை. என்னதான் அக்கா வீட இருந்தாலும் நிச்சயம் ஆனா பொண்ணை பார்க்க மாப்பிள்ளை வந்தால் நல்ல இருக்காதுடா...
"போங்க மாமா....' அது அது ஜோடியா சேர்ந்தே ஊர் ஊராக சுற்றித்திரியுதுகா! நீங்க வீட்டுக்கு வர யோசிக்கணுமா?
"மது, முக்கியமான ஒருத்தர் கால் பண்ணுறார். நான் அப்புறமா கூப்பிடுறேன்டா" அவள் பதிலை எதிர்பாராமல் அழைப்பை துண்டித்து விட்டான்.
மதுவுக்கு சலிப்பாக இருந்தது. இனி அவனாகக் கூப்பிட மாட்டான். வேலையில் பிஸியாகிவிட்டால் இவள் அழைத்தாலும் பதில் இருக்காது.
மது பித்துப் பிடித்தது போல ஆகிப்போனாள். எங்கு பார்த்தாலும் அவன் நினைவுகள். நிச்சயதார்த்தம் அன்று அந்த ஒற்றை சோஃபாவில் தன்னையே வெறித்துப் பார்த்திருந்தவன் ஞாபகத்திற்கு வர. ஆசையாக சோபாவில் அமர்த்தவள், உடலை குறுக்கி அதில் படுத்துக்கொண்டாள். மயக்கத்தின் அதீதம் நோயாகத் தங்கிவிட, அவள் காதல் நோயினால் துன்புற்றாள்.
அடிக்கடி அவனை கைபேசியில் பிடிக்க முடியவில்லை. தவித்துப் போனாள் மது. வருடக்கணக்கில் மனதில் சுமந்து இருந்திருக்கிறாள். காதலாக நெருங்கிப் பழகியது விரல் விட்டு எண்ணும் நாட்களே.
இந்த இரண்டு வருடங்கள் திருச்சியில் இருந்தவரை அவன் காதல் இல்லாவிட்டாலும் அவன் இருக்கும் ஊரில் இருப்பதே சுகமாக இருந்தது.
மாமன் திடீரென கண்முன் நின்றபோது திக்குமுக்காடிப் போனாள். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சி. அதுவும் கடைசி மூன்று மாதங்கள் சொர்க்கமாய் இனித்தது மதுவிற்கு. அவன் காட்டிய அந்த கண்ணியம் தாண்டா நெருக்கமும். மார்பில் சாய்ந்து கொள்ள இடை நெருக்கிய அணைப்பும் மீண்டும் மீண்டும் வேண்டும் என மனம் சண்டித்தனம் பண்ணியது.
அவன் இல்லாத தன் வாழ்வு இத்தனை ஆண்டுகள் எத்தனை சூனியமாக இருந்தது என்று எண்ணி எண்ணி அந்த நாட்களை வெறுத்தாள் . ஆனால் இதெயெல்லாம் யாரிடம் சொல்ல முடியும். புரிந்து கொள்ள வேண்டியவனே புரிந்து கொள்ளாமல் ஓடும்போது அவளால் என்னதான் செய்ய முடியும். வாடிப் போனாள்.
"அவருக்கா தோணும் போது பேசட்டும்.. அவர் மட்டும் வேலையைப் பார்த்துகிட்டு இருக்கார்.. உனக்கு மட்டும் என்ன எப்ப பார்த்தாலும் அவரோட நினைப்பு.. சும்மா இரு' என்று தன்னைத் தானே திட்டிக்கொள்வாள்
ஒருநாள் காத்திருப்புக்கு பின்பு அவளை அழைத்தான் மகிழன்..
"சொல்லுங்க மாமா' என்று அவன் குரல் கேட்டதும் உருகியவள், அவன் மீதான கோபம் நினைப்பில் வர அமைதியானாள்.
மது என்ன அமைதியாகிட்ட
"என்னை எல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்க மாமா என்றாள் கேலியாக..
"என்னடா? .."
“என்னோட பேசுறதுக்கு கூட உங்களுக்கு நேரம் இல்லையா மாமா.. நீங்க ஒரு போனைக் காணோம்.."
"அப்போ மேடம் என்னைத் தேடிருக்கீங்க?" என்றவன் குரலில் சந்தோஷம் தாண்டவம் ஆடியது..
"நான் ஒன்னும் உங்களைத் தேடலை." அவள் வீம்புடன் கூற
"தேடலை?"
"ஆமா தேடலை."
"அப்போ போனை வெச்சுடவா?"
“என்ன மிரட்டுறீங்களா? எங்க போனை கட் பண்ணிப் பாருங்க..?" இவள் மிரட்ட
“ஏய் மது நீயா பேசுற?"
ஆமா நான் தான்'
"சத்தம் பலமா இருக்கு?!
"அப்புறம் எப்போதும் அமைதியா இருந்த நீங்கதான் என்னை ஏமத்துறீங்களே'
“ஏய் எல்லாரும் உன்னை அமைதியின் சிகரம்ன்னு நினைச்சுட்டு இருக்காங்க மது..." கிண்டலாக அவன் கூற,
"இல்ல நான் சண்டைக்காரி'
ஐயோ மது எனக்கு பயமா இருக்கே
"போங்க மாமா, அம்மாச்சி கூட நேத்து மட்டும் என்னோட ரெண்டு வாட்டி பேசிட்டாங்க.. நீங்க சுத்த வேஸ்ட் மாமா உங்களுக்கு லவ் பண்ணக்கூட தெரியல..
"ஹாஹா..
"போன் எடுத்ததுல இருந்து சண்டை தான் போடுற.. தெரியாம உன்கிட்ட மாட்டிகிட்டேனோ?" சிரிப்புடன் கூற, மதுவும் சிரித்துக் கொண்டே
"மாட்டுனது மாட்டுனது தான்.. தப்பிக்க முடியாது.."
"மது.. என்னால தினமும் போன் பண்ண முடியாதுடா.. நேரம் கிடைக்கும் போது நானே கூப்பிடுறேன்.."
இருவரும் பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தனர்..
இடையில் இரண்டு நாட்கள் திருச்சி வந்திருந்தாள் மது, ஆனாலும் மகிழனை அவளால் நேரில் சந்திக்க முடியவில்லை தோழிகளின் கேலி, கிண்டலுடன் கல்யாண ஷாப்பிங், ட்ரீட் என்று நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது..
*************
மதுவின் வாழ்வில் குழப்பத்தை கொண்டுவரப் போகும் அன்றைய பொழுது மதுவுக்கு வழமையாய் தான் விடிந்தது. தாயிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டே காபி கோப்பையை வாங்கியவள், அதை பருகும் போது, தன்னுடைய செல்பேசியை எடுத்துப் பார்க்கத் துவங்கினாள்.
அவள் பேசியில் இணையத்தை இணைத்ததும், 'டிங்' என்ற ஒலியோடு புலன செய்தி ஒன்று எட்டிப் பார்க்க, திறந்து பார்த்தவள், புது எண்ணில் அனுப்பிருந்த செய்தியை படிக்க அதிர்ச்சியில் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து நின்றாள்.
தாமரை மகளின் செய்கையில் துணுக்குற்று அவள் அருகில் வந்தார்.
மகளின் பார்வை அலைபேசியில் நிலைத்திருக்க, கண்களில் கோடாய் கண்ணீர், அதிர்ச்சிடைந்த மது பேச்சு மூச்சற்று நிற்க, அவளைப் பிடித்து உலுக்கினார் தாமரை
மது...மது ! என்னாச்சுடா? இங்கப்பாரு, அம்மாவைப் பாரு." போன்ல என்ன பார்த்த.. என்று அவள் தோளைத் தட்ட,
மதுவிற்கு அதன் பிறகுதான் சூழ்நிலை புரிந்தது. தான் அவசரப்பட்டு அம்மா முன்னிலையில் அழுதிருக்கக் கூடாதோ என்று காலந் தாழ்ந்து யோசித்தவள் மனதில் பலவாறு சிந்தனை ஓடியது.
"என் பிரண்டுக்கு ரெம்பவும் முடியலம்மா சீரியஸா ஹாஸ்பிடலில் இருக்க..திக்கித் திணறி பொய் சொன்னாள்.
மெதுவாக கண்களை துடைத்து இயல்புக்கு வர முயன்ற மகளை பார்க்க தாமரைக்கும் கலக்கமாக இருந்தது. தன் நெருங்கிய தோழிக்கு முடியாமல் ஆனதில் மகள் நொருங்கிப் போயிருக்கிறாள் என்றுதான் அவர் நினைத்தார்.
எதையும் சிந்திக்கும் நிலையில் மது இல்லை. அவள் எண்ணமெல்லாம் ஹாஸ்பிடலில் சீரியசாக இருக்கும் வர்சினியிடமே இருந்தது. அவளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று மனம் இடைவிடாது பிரார்த்திக்க ஆரம்பித்தது.
அறைக்குள் நுழைந்த மது ஆத்திரத்தில் தன் அலைபேசியை படுக்கையில் வீசி எறிந்தாள்.
தலையை இரு கைகளிலும் அழுந்தப் பற்றியவள், அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள். சொல்ல முடியா வலி இதயத்தை தாக்க, 'ஒற்றைச் செய்தி வாழ்வின் மீதான ஒட்டு மொத்த நம்பிக்கையை குலைக்க முடியுமா?' என மனம் வேதனை கொள்ள சற்று நேரம் விழிகளை அழுந்த மூடி அப்படியே அமர்ந்திருந்தாள்.
கன்னத்தில் சூடான உவர் நீர் வழிய, அப்போதே தான் அழுவதை உணர்ந்தவள், கண்ணீரை துடைத்து விட்டு, எழுந்தாள். உள்ளம் முழுதும் பொங்கி வழியும் எரிமலைக் குழம்பாய் தகிக்க வீசி எறிந்த அலைபேசியை தேடி எடுத்து மஹாவை அழைத்தாள்.
இவன் காலையில் அழைக்கவும், சிறிது இடைவெளி விட்டே மஹா அழைப்பை ஏற்றாள். அந்தப் பக்கம் அழைப்பை ஏற்றாளோ இல்லையோ, அவள் 'ஹாலோ' என்ற வார்த்தையை சொல்லக் கூட இடைவெளி கொடுக்காமல்,
"என்ன நடந்தது' என்று கோபமாக கேட்டவள் விபரங்களை மனதில் குறித்துக் கொண்டு அழைப்பை துண்டித்தாள்.
சட்டென்று முடிவெடுத்து அவள் திருச்சி புறப்பட, தாமரை தடுத்து பார்த்தார், அவள் பிடிவாதமாக இருக்க தானும் துணைக்கு வருவதாக கூறவும் வேண்டாம் என்று தடுத்து விட்டாள். இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் தாமரைக்கு மகளின் முடிவில் உடன்பாடு இல்லை. ஆனால் சந்திரன் மகளின் குரலிலேயே அவளின் தவிப்பை புரிந்துகொண்டார். அவர் அனுமதி தந்ததும் தாய் அமைதியாகி விட்டார்.
அவர்களுடைய காரில் மதுரை வந்தவள், அங்கிருந்து கார்த்திகாவின் காரில் ஏறிக்கொண்டு, தங்கள் காரை திருப்பி அனுப்பிவிட்டாள். கார்த்திகா மதுரை வந்தது. தங்கள் ட்ரைவரை தவிர்க்க மது செய்த ஏற்பாடு.
நேராக ஹாஸ்பிடல் வளாகத்திற்குள் நுழைந்தார்கள் மதுவும், கார்த்திகாவும். மஹாவிடம் எல்லா தகவல்களையும் கார்த்திகா வாங்கியிருந்தாள். தோழியாக மதுவுடன் கார்த்திகா நின்றாலும் இங்கே மது வருவதில் அவளுக்கும் உடன்பாடில்லை.
ஹாஸ்பிடல் ரிசப்ஷனில் விசாரித்தபோது இரண்டாம் தளத்தில் தனிப் பிரிவில் 12ஆம் எண் அறை என்றார்கள், லிப்ட்டைப் பிடித்து இருவரும் மேலே வர, அந்த அறையின் கதவோரம் இருந்த இருக்கையில் ஒரு வயதான மனிதர் தலையெல்லாம் கலைந்து பார்க்கப் பரிதாபமாக அமர்ந்திருந்தார்.
அதுவரை தைரியமாக வந்திருந்த மதுவுக்கு அதற்கு மேல் கால்கள் பின்னிக் கொண்டன. வர்சினியின் குடும்பத்தினரை இருவருக்கும் அறிமுகம் இல்லை, இனங்காணும் அளவிற்கு கூட ஆட்களைத் தெரியாது. இவர் தான் வர்சினியின் அப்பாவா?
அவரையே பார்த்து நின்றாள் மது, தன் தந்தையை விட கொஞ்சம் வயதானவராகவே தெரிந்தார். தன் தந்தையின் இடத்தில் அவரைப் பார்க்க உள்ளுக்குள் வலித்தது.
மெதுவாக அவரை நெருங்கிய கார்த்திகா "இங்க வர்சினி? சட்டென்று நிமிர்ந்து இருவரையும் கலக்கத்துடன் பார்த்தார். அவர் கண்களில் வாழ்வையே தொலைத்த வெறுமை தெரிந்தது.
"நீங்க யாரும்மா' என்றவரின் கேள்விக்கான பதிலைச் சொல்லாமல்
"நீங்க வர்சினி அப்பாவா?' என்றாள் கார்த்திகா, மதுவோ எதுவும் பேசவேயில்லை.
"ம்ம்' என்றவர் அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தார்.
"டாக்டர் என்னப்பா சொல்றாங்க?" என்று கேட்டாள் கார்த்திகா
"எல்லாத்தையும் வாஷ் பண்ணிட்டாங்கம்மா, சரியான நேரத்துக்கு கொண்டு வந்துட்டோம். இல்லைன்னா.... பேச்சை நிறுத்தியவர் கண்களில் வழிந்த கண்ணீர் அவர் வலியைச் சொல்லியது.
"கடவுள் புண்ணியத்துல அவளுக்கு இனி எந்தப் பிரச்சினையும் இல்லாம்மா." அவ அம்மாதான் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடக்கிறா என்று அவர் பேசிக் கொண்டிருக்க,
இன்னைக்கு காலையில் தான் தனி ரூமுக்கு மாத்தினங்க என்றவர் கதவை தட்டிவிட்டு அறைக்குள் அவர்களை அழைத்துச் சென்றார். வர்சினி சோர்வாக கட்டிலில் படுத்திருக்க, அவள் வயதை ஒத்த பெண்கள் இருவர் அருகில் இருந்தார்கள். தலைமுடியை எல்லாம் விரித்துப் போட்டு பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
"அந்த பையனுக்கு கல்யாணம்னு கேள்விப் பட்டதிலிருந்து இப்படித்தான் பைத்தியம் மாதிரி இருக்கா. நீங்களும் கொஞ்சம் புத்திமதி சொல்லுங்கம்மா என்று சொன்ன பெரியவர் வெளியே போய்விட்டார்,
வர்சினி அருகில் போனாள் மது, கார்த்திகாவிற்கு படபடப்பு இன்னும் அதிகமானது. அவர்கள் இருவரையும் நிமிர்ந்து பார்த்தாள் வர்சினி, எவ்வளவு முயன்றும் அவர்கள் யாரென்று அவளால் யூகிக்க கூட முடியவில்லை. இருவரையும் கேள்வியாக பார்த்தாள்.
வர்சினியின் படுக்கையில் அமர்ந்து அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட மது, அவள் கண்களை நேராக பார்த்தாள்.
"நான் மது, இது என்னோட பிரண்ட் கார்த்திகா, நான்தான் நீங்க விரும்பிய மகிழன் மாமாவை கட்டிக்க இருக்கும் பொண்ணு..... மது முடிக்க
சட்டென்று கையை இழுத்துக் கொண்டு பின்னால் நகர்ந்திருந்தாள் வர்சினி, கண்களில் அவ்வளவு அதிர்ச்சி. துணைக்கு இருந்த இரு பெண்களும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றார்கள்.
"ஏய் நீ எதுக்கு இங்க வந்த' என்று மதுவின் கையை பிடித்து இழுத்து கட்டிலை விட்டு இறக்கினாள் உடன் இருந்த ஒருபெண், நிலைமை கைமீறிப் போவது போல தோணவே கார்த்திகா கொஞ்சம் பயந்து போனாள் .
"பார்தி' அவ கையை விடு என்றாள் வர்சினி, முறைத்துக் கொண்டு கையை விட்டவள் அவர்களையே பார்த்து நிற்க.
"எதுக்கு இங்க வந்த? நான் சாகிறத பார்க்கவா? சீக்கிரம் இங்க இருந்து ஓடிப்போயிரு எங்க அண்ணன் வந்தான் ஒரு விரலை நீட்டி மதுவை எச்சரித்தாள். அவரு மேல எங்க வீட்டில் எல்லோரும் கோபமா இருக்காங்க. நீ அவங்க கண்ணுல படாம சீக்கிரம் கிளம்பு" என்றாள் கேலியாக
நீ பண்ணின முட்டாள்த்தனத்துக்கு என் மாமா என்ன செய்வார்
"யாரு நான் முட்டாளா? நான் முட்டாளா? சத்தமாக கத்தினாள்.
ஐயோ இந்தப் பெண் நிலமை இப்படி இருக்க மது எதற்கு இங்கு வந்திருக்கிறாள். தலை வேதனையாக இருந்தது கார்த்திகாவிற்கு
அடுத்த நிமிடம் அமிலமாக வந்தது வர்சினியின் வார்த்தைகள்
உன் மாமாவா? பார்க்கலாம் "நிச்சயமா உங்க கல்யாணம் நடக்காது! நடக்கவும் விட மாட்டேன்." என்றாள் வர்சினி அங்காரமாக.. மது விழிகளை இறுக மூடி அந்த வார்த்தைகளை தங்கிக்கொண்டாள்.. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
" உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சுன்னா நீ தாலி அறுத்திட்டு தான் நிற்ப என்றாள் கூட இருந்த பெண்" உடன் இருந்த இரு பெண்களும் மாறி மாறி கேவலமாக பேச காதை பொத்திக்கொண்ட மது எதுவும் பேசாமல் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.
.
அவள் அருகே வந்த கார்த்திகா,
"மது... மது...!" மென்மையாக அவள் கன்னம் தட்ட, எந்த பதிலும் இல்லை. அப்படியே உறைந்தபடி அமர்ந்திருந்தாள் மது. அவள் முகத்தை கைகளில் ஏந்தியவள்,
"மது, இங்கப்பாரு , ஏதாவது பேசுடி." அவளிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அவள் தோள்களைப் பிடித்து அவள் உலுக்க, அப்போது அசைந்தவள் அவள் முகத்தைப் பார்த்தாள்.
"எதுக்குடி நீ இங்கெல்லாம் வந்த. இது உனக்கு தேவையா?"அவன் கேள்வி அவள் மூளையை சென்றடைந்த மாதிரி தெரியவில்லை. அவள் கை பிடித்து எழுப்பி வெளியே அழைத்துச் சென்றாள் கார்த்திகா
பின்தொடர்ந்த இரு பெண்களும் லிப்ட் வரை திட்டிக்கொண்டே வந்தார்கள்.
எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்று அவளுக்கே தெரியாது. மடை திறந்த வெள்ளம் போல கண்ணீர் பெருக கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள் மது
கார்த்திகா அவள் எதிரே அமர்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்தாள். மதுவின் போன் திரும்பத் திரும்ப இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. கார்த்திகா எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்திருந்தாள்.
மனதின் காயம் சிறிது ஆறும் வரை அழுதவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
"அழுது முடிச்சாச்சா மது?" தோழியின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை மது.
கார்த்தி, அவங்க என்னைப் பாத்து எப்படி சத்தம் போட்டாங்க பாத்தியா?. நான் என்னடி பண்ணினேன், போறவங்க, வர்றவங்க எல்லாரும் திரும்பி திரும்பிப் பாத்தாங்க" உடம்பெல்லாம் கூசுதுடி.. மது உடம்பில் அத்தனை நடுக்கம்.. தோழியை அணைத்து கொண்டாள் கார்த்திகா. வர்சினியை கொன்று விடலாம் போல் ஆத்திரம் வந்தது அவளுக்கு.
"அவங்க சத்தம் போட்டது கூடப் பரவாயில்லை. என்னைப் பாத்து, நீ தாலி கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழ மாட்டாடி? அந்தத்... தாலி... உனக்கு... நி... நிலைக்கா....." உதடு பிதுங்க கேவிக் கேவி அவள் வெடித்தழுத போது, செய்வதறியாது மலைத்து நின்றாள் கார்த்திகா. கண்கள் குளமாக வார்த்தைக்கு தவித்த தோழியை இன்னும் இறுக அணைத்துக் கொண்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லைடி. அவங்க சொன்னா நடந்திடுமா? விட்டுத் தள்ளு மது." நியாயம்னு ஒண்ணு இருக்கு, "அவங்க என்ன வேணும்னாலும் சொல்லட்டும் கடவுள் இருக்கிறார். இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி அழுது கரையுற?"
இன்னும் என்ன ஆகணும் கார்த்தி? என் மாமாவால் ஒரு பெண்ணு சாக கிடக்கிறாள்.” சொல்லும் போதே குரல் கம்மியது.
“உனக்கு பைத்தியமா மது? அவள் செய்த முட்டாள் தனத்திற்கு உன் மாமா என்ன செய்வார்?"
கார்த்திகா சத்தமாக பேச. மது மௌனமாகி விட்டாள்
"முதல்ல எழும்பி ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிட்டு வா. சாப்பிடலாம். எனக்கு பசிக்குது
அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் துளிர்க்கவும் கார்த்திகாவிற்கு கோபம் வந்தது.
"மது!" என்றாள் அதட்டலாக.
சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டவள் எழுந்து உடையை மாற்றிக் கொண்டாள். கார்த்திகாவிற்காகப் பெயருக்கு உணவைக் கொறித்தாள்.
எவ்வளவு முயன்றும் அவர்கள் பேசியதில் இருந்து மதுவால் வெளியே வர முடியவில்லை. சோற்றை பிசைந்து கொண்டே இருந்தாள்.
அவளுக்கு உண்ணும் எண்ணம் இருப்பது போல் தோன்றவில்லை கார்த்திகாவிற்கு, அவள் கையில் இருந்த தட்டை வாங்கியவள் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிவிட, அழுதுகொண்டே உண்டு முடித்தவள், அவள் மடியிலேயே தலை வைத்து உறங்கிப் போனாள். அவள் தலையை தடவிக் கொடுத்தபடி, அவளையே பார்த்திருந்தாள் கார்த்திகா.
***************
திருவிழா நிகழ்ந்து முடிந்த கோவிலின்
வெறுமை உணர்ந்தாள் மது, கடந்த ஆறு மாதங்கள் இருந்த மகிழ்ச்சி தொலைந்து போயிருக்க, வர்சினியை பார்த்து வந்ததில் இருந்து படுத்தே இருந்தாள்.
வெறுமை உணர்ந்தாள் மது, கடந்த ஆறு மாதங்கள் இருந்த மகிழ்ச்சி தொலைந்து போயிருக்க, வர்சினியை பார்த்து வந்ததில் இருந்து படுத்தே இருந்தாள்.
காலையிலேயே மஹா வந்திருந்தாள். இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை மது.
"மது.." பேச ஆரம்பித்துவிட்டு லேசாகத் தயங்கினாள் கார்த்திகா
"என்ன? என்பது போல் கார்த்திகாவை பார்த்தாள்
"நான் ஒன்னு கேட்பேன், நீ தப்பா எடுத்துக்கக் கூடாது."
"மது அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருந்தாள்.
"நீ மகி அண்ணாவை சந்தேக படுறியா?" பட்டென்று கேட்டாள் கார்த்திகா. மஹாவின் முகத்திலும் கவலை தெரிந்தது. மதுவின் முகத்தையே இருவரும் பார்த்தபடி இருந்தார்கள்.
விரக்தியாக சிரித்தாள் மது நானும் என் மாமாவும் வேற வேற இல்லடி. அவரை சந்தேகப்பட...
சிறிது நேரம் எதுவுமே பேசமால் இருந்தவள் கண்கள் சட்டென்று கண்ணீரை கொட்டியது,
"அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா? என் மாமாவை.. மேலே பேச முடியாமல் தவித்தாள். செய்யாத தப்புக்கு என் மாமா வாழ்க்கை முழுவதும் தண்டனை அனுபவிக்கனும், அதுக்கு அவளையே அவர் கட்டிகலாம்.
"என்னடி உளறல் இது?." பைத்தியமா உனக்கு. அவ செத்த சாகட்டும் விடு, நீ லூசு மாதிரி பேசாத.
“உன்னளவுக்கு என்னால இதையெல்லாம் சட்டுன்னு ஏத்துக்க முடியலை கார்த்தி." எனக்கு என் மாமா நல்ல இருக்கணும், அவர் மேல எந்த பழியும் வந்திரக் கூடாது.
"மது சித்தப்பா மனசு முழுக்க நீதான் இருக்கே. தேவை இல்லாமல் ஏதாவது பேசி வாழ்க்கையை குழப்பிக்காத என்றாள் மஹா.
"மது! நீ உன் மாமாவோட முதல்ல பேசிடு." என்றாள் கார்த்திகா
“வேணாம் கார்த்தி."
"பாவம்டி அவங்க என்ன பண்ணினாங்க? யாரோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் யாரையோ தண்டிக்க நினைக்கிற?"
“ம்ப்ச்... விடு கார்த்தி." இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மது போன் பாடியது. மகிழன் தான் அழைத்திருந்தான.
'தயங்கி படியே போனைக் காதுக்குக் கொடுத்தாள் மது.
"மது..." கோபமாக வந்தது அவன் குரல்.
"மாமா?" அவன் குரலில் திகைத்துப் போனாள் மது.
"கீழ வா மது'
"என்ன சொல்றீங்க? நீங்க இப்போ எங்க இருக்கீங்க?"
"உங்க வீட்டுக்கு முன்னாடி தான்... கீழே இறங்கி வா மது அவன் சொல்லி முடிக்கவும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மது.
மதுவின் மனநிலையை மகிழனுக்கு செய்தியாக தெரியப்படுத்தி இருந்தாள் மஹா.
மது கீழே வர. அவளை உள்ளே வாங்கிக் கொண்டு பறந்து கார்
***********
திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் மகிழன். மாமனின் முகத்தைப் பார்க்க அவளுக்கு சற்று பயமாக இருந்தது. இன்னும் அவன் மதுவிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோபத்தில் இருக்கிறான்.
அவளாக எந்த பேச்சையும் துவக்கவில்லை. அவனாகவும் பேசவில்லை.
விராலிமலை தாண்டி மதுரை நோக்கி போய்க்கொண்டிருந்தது கார்.
"மாமா..." மெலிதாக அவனை அழைக்க, அவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவனது பார்வை நேராக சாலையில் இருந்தது. முன்பானால் எதாவது பேசி அவனை பேச வைத்து விடுவாள். ஆனால் இப்போது தயக்கமாக இருந்தது.
"ஏன் இப்படி இருக்கீங்க? என்றவளின் குரல் திக்கியது. என்னவானாலும் சொல்லுங்க மாமா." நீங்க எந்த முடிவெடுத்தாலும் எனக்கு சரி" என்று கூறுவதற்குள் லட்சம் தடவை தவித்துப் போனாள்.
அவளை திரும்பி ஆழ்ந்து பார்த்தான்..
"அப்படி என்ன முடிவெடுப்பேன்னு நினைக்கறீங்க மேடம்?” உணர்வுகளை சற்றும் காட்டிக் கொள்ளாமல் அவன் கேட்க,
"பாவம் அவங்க. நீங்க என்னை...” என்று திக்கியவள், அதற்கும் மேல் தொடர முடியாமல் தவித்து நிறுத்தினாள்.
"ம்ம்ம் சொல்லு மது..."
“நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுவேன்..." என்றவள் உணர்வுகளை துடைத்துவிட்டு கூறினாலும், அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் ஆயிரம் பாகங்களாக உடைந்து கொண்டிருந்தாள்.
மகிழன் காரை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்தி இருந்தான். அவனால் அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை இயக்க முடியவில்லை
"அதுதான் நான் என்ன முடிவெடுக்கணும்ன்னு நீங்க சொல்லுங்க மேடம்..." என்றவனின் குரலில் அத்தனை கோபம்! அதை கேட்டதில் மதுவுக்கு பொறுமை பறந்தது. அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்வுகள் உடைத்துக் கொண்டு வெளியேறி விடும் போல தோன்றியது.
“நான் என்ன சொல்ல மாமா? நீங்க என்னவோ பண்ணுங்க... என்னை விடுங்க..." என்றவள், பொங்கிய கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதாள், அவளது கண்ணீர் அவனையும் காயப்படுத்தியது!
"நான் என்ன பண்ணட்டும் மது?" அவன் அவளைக் கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளது பார்வையில் உயிர் வலி தெரிந்தது
“போ மாமா... என் கிட்ட வராத... இன்னொரு தடவை என்ன பண்ணட்டும்ன்னு கேட்ட, கொலை விழும்..." கொதித்துக் கொட்டினாள்.
அவனது முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது!
"சரி வா போகலாம்." என்று கூறியவனை கோபமாக பார்த்தாள்.
"வர்சினியை பார்க்க போகணும்." என்றதும் எழுந்து நின்றவள்,
"நிஜமா கொலை விழுந்துரும். போறதுன்னா போய் தொலை.
"ஏய் நீ தான் தியாகியாச்சே! என்னை தூக்கி கொடுத்துடலாம்ன்னு முடிவுக்கு வந்தவளாச்சே. அப்புறம் ஏன் உனக்குக் கோபம் வருது?" என்று கேட்க,
"அதுக்காக உன்னை பிடிச்சு வெச்சுக்க போட்டி போட சொல்றியா?" என்றவளின் வார்த்தைகளில் அத்தனை உஷ்ணம்.
"அப்படீன்னா என்னை விட்டுக் கொடுத்துடுவ?" கேலியாக அவன் கேட்க,
"உன்னால ஒரு உயிர் போச்சுன்னு யாராவது சொன்ன அதை என்னால தாங்க முடியாது மாமா..." என்றவள் வெடித்தாள்.
"என் மேல உனக்கு கொஞ்சம் கூட பொசெசிவ்னஸ் இல்லையா மது?" என்றவனை உணர்வற்ற பார்வை பார்த்தாள்.
"சண்டை போட சொல்றியா?" கண்ணீர் மளுக்கென்று எட்டிப் பார்த்தது. உனக்காக ஒருத்தி சாக துணிந்து இருக்க அவ கூட எப்படி மாமா நான் சண்ட போட, உன்மேல் அன்பு வைக்கும் யாரையும் என்னால் வெறுக்க முடியாது.
“அவளுக்கு என்மேல் இருப்பது அன்பு இல்ல மது. காதலித்த மனிதனை தண்டிக்க துடிக்கிறதும், காயப்படுத்த நினைக்கிறதும் உண்மையான காதல் இல்லை மது. நான் தூங்கி மூன்று நாட்கள் ஆச்சு. முடியல மது கேட்டவளுக்கு அவளையுமறியாமல் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மெளனமாக தலை குனிந்து கொண்டாள், ஆனாலும் கண்ணீர் நின்றபாடில்லை.
"எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை விட்டுக் கொடுப்பேன்னு சொல்ற?" என்றவனின் முகம் அவ்வளவு சிவந்திருந்தது.
அவள் எதுவும் பேசவில்லை. கண்களை துடைத்துக் கொண்டே இருந்தாள். அவள் தோளைத் தொட்டான்.
அவன் வயிற்றில் முகம் புதைத்து
அவனை இறுகக் கட்டிக்கொண்டு அழுதாள். மகிழன் மதுவை அணைத்தவாறு ஒன்றும் கூறாமல் நிற்க, சில நிமிடங்களில் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
"அழாதேன்னு சொல்ல மாட்டியா மாமா?" எனக் கேட்டாள்.
"பேசுறதெல்லாம் பேசிட்டு ஒன்னுமே தெரியாத பச்ச புள்ள மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு கேட்கிற பாரு. உன் மேல பயங்கர கோபமாதான் இருந்தேன். இப்படி அழறத பார்த்தா மனசு கேட்க மாட்டேங்குது. அழுது என் சட்டையை நனைக்காம எழுந்திரு முதல்ல" என்றான்.
"என்னை லவ் பண்றேன்னு சொன்னதெல்லாம் பொய்யா மது?"
"ஏன் மாமா என்னை கொல்லுற?"
"அப்புறம் எப்படிடி விட்டுக் கொடுப்ப?"
"நான் பார்க்கறது உனக்காக மட்டும் தான் மாமா" உன்னை யாராவது தப்பா பேசினா என்னால தாங்க முடியாது மாமா!
"நான் பார்க்கறது நம்ம ரெண்டு பேருக்காகவும் தான்டி." என்றவன், "நாம சண்டை போடலாம் தப்பில்ல, அடிச்சுக்கலாம், கொஞ்சிக்கலாம் என்ன வேண்ணா பண்ணலாம்... ஆனா இந்த மாதிரி முட்டாள்தனமா பேசிட்டு இருக்காத..."
அதுவரை குழம்பிப் போயிருந்த அவளது முகம் லேசாக தெளிந்தது. வர்சினிக்காக அவளால் பரிதாபப் பட முடியும். ஆனால் இவனை விட்டுக் கொடுக்கவெல்லாம் முடியாது என்று முழுமையாக மனம் உணர்ந்தது.
மகிழனை நிமிர்ந்து பார்த்தவள், "சாரி மாமா..." என்றாள் சிறு குரலில்!
அவளைப் பார்த்து முறைத்தவன், மதுவின் முகம் வெவ்வேறு உணர்வுகளை காட்டியது.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், எதுவும் பேசாமல் காருக்கு போக, அவன் பின்னால் ஓடினாள் மது. அவனது வேகத்துக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. துரத்திப் பிடிக்க வேண்டி இருந்தது.
*********
திருச்சியில் தான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே ஒரு பிரமாண்டமாண மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தான் மகிழன், "மகிழன் இணை மதுநிலா' தங்க நிற எழுத்துக்கள் அரக்கு நிற வெல்வெட் துணியில் மின்னிக் கொண்டிருந்தது. மேளமும், நாதஸ்வரமும், மங்கள இசையாய் அந்தப் பகுதியை இனிமையாக்க.., பொருள் தேடும் ஓட்டத்தில் ஊர் ஊராகப் பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் ஒரே இடத்தில் கூட, மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது மண்டபம்.
அழகாக பட்டு வேட்டி, சட்டையில் முகம் முழுக்க சிரிப்புடன், மனமேடையில் அமர்ந்திருந்தான் மகிழன். காதல் கை கூடிய மகிழ்ச்சியும். உறவுகள் கூடிநின்று சேர்த்துவைத்து வாழ்த்தும் இரட்டிப்பு இன்பமும் சேர.
மணமகள் அறையையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவளை எப்போது பார்ப்போம் என்று ஏங்கியது அவன் கண்கள்.
"எப்பு! கழுத்து சுளுக்கிடப் போகுது, கொஞ்சம் நேர உட்காருங்க, உங்க பொண்டாட்டிய யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க." காதில் முணுமுணுத்தாள் அவன் மூத்த அண்ணன் மனைவி கோகிலா.. அவரைப் பார்த்து அசடு வழிய சிரித்தான் மகிழன்.
"உங்க லவ்வு ஊருக்கே தெரிய வேண்டாம் கொழுந்தனாரே, கொஞ்சம் அடக்கி வாசிங்க, நீங்க வடிக்கிற ஜொள்ளுல மண்டபமே நனைஞ்சிடும் போல இருக்கே'...
“அத்தனை அப்பட்டமாவாத் தெரியுது ?"
"எழுதி ஒட்டாததுதான் பாக்கி."
"கல்யாண புடவைல மதுவை பாத்திங்களா மதினி ?"
"எங்க, இந்த கவிதா யாரையும் உள்ள விட மாட்டுரா, கதவு பூட்டிதான் இருக்கு. அலங்காரம் முடிய இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும்.போலா"
"இன்னுமா?'என்று மகிழன் இழுக்க,
"முகூர்த்தத்திற்கு இன்னும் நேரம் இருக்கு... ரெம்ப பறக்காதிங்க' என்று கையில் பூந்தட்டுடன் படியிரங்கி கீழே போனார்.
அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை காதில் வாங்கிய சந்திரன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே மனைவியை தேடினார்.
தாமரை... சீக்கிரம் போய் மது ரெடியான்னு பாரு... அப்பறம் எல்லாத்துக்கும் லேட் ஆகிடும்...” என்று சந்திரன் அவசரப்படுத்த, தாமரை வேகமாக மணப்பெண்ணின் அறையை நோக்கி ஓடினார்.
மணமகள் அறை வாசலில் பெண்கள் கூட்டம் நின்றிருக்க, கதவைத் தட்டி கவிதாவை அழைத்தார்.
"சித்தி இன்னும் மேக்கப் முடியல...என்றாள் கவிதா.
"சீக்கிரம் எல்லாம் ரெடி
பண்ணுங்கம்மா... முகூர்த்த நேரம் வந்துடப் போகுது... கொஞ்சமும் லேட் ஆகாம எல்லாம் சரியான நேரத்துல நடக்கணும்.
"இப்ப முடிஞ்சிரும் சித்தி'
"நீ கொஞ்சம் கதவைத் திற'
பட்டுச்சேலை கட்டிக் கொண்டு, தன்னை கண்ணாடியில் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த மது, அருகில் இருந்த தன் அக்காவைத் திரும்பிப் பார்க்க,
"நல்லாத் தாண்டி இருக்க... இன்னும் எத்தனை நேரம் கண்ணாடியையே முறைச்சு முறைச்சுப் பார்ப்ப.. சித்தி நேரம் ஆகுதுன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... சீக்கிரம் வா.. மேக்கப் போடணும் என்று கூறிக்கொண்டே கதவைத் திறந்து தாமரையை உள்ளே அழைத்தாள்.
மெல்லிய கொடி இடையில் ஒட்டியாணம் மின்ன சிறு பெண்ணாய் நினைத்த மகள் இன்று மணப்பெண்ணாய் பட்டுப்புடவையில் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள், மதுவைப் பார்த்த தாமரையின் கண்கள் மகிழ்ச்சியில் நிறைந்தது, இது அவள் அழகினால் வந்த சந்தோஷமும், பூரிப்பும் அல்ல. ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தாய்க்கும் மகளைக் கல்யாணக் கோலத்தில் பார்க்கும் போது வரும் மகிழ்ச்சி.
சற்று நேரத்திற்கெல்லாம் பெண்கள் கூட்டமாக மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள்.
அவன் கனவுகளை எல்லாம் அலங்கரித்த தேவதை, அவன் அருகே, மகிழன் உள்ளம் மகிழ்ச்சியில் குதித்தது. அருகில் அமர்ந்தவளைத் திரும்பிப் பார்த்தான்.
குங்குமநிற பட்டுத்தி இருந்தாள், பெரிய பார்டர், அலங்காரம் எளிமையாக இருந்தது. தலை நிறைய மல்லிகைப்பூ ஆனால் அந்தக் கண்கள் மட்டும் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கொஞ்சம் ஏமாற்றமாக உணர்ந்தான் மகிழன்.
மகிழன் பெரியப்பாவும், பெரியம்மாவும் தாலியைத் தொட்டு அவன் கைகளில் கொடுக்க அதை வாங்கியவன் அவள் கழுத்தருகே நிறுத்தினான். மதுவின் பார்வை சட்டென்று உயர அந்தக் கண்களோடு தன் கண்களைக் கலந்தவன். புன்னகையுடன் மது கழுத்தில் தாலியைக் கட்டினான்.
ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பந்தம் நிலைக்க வேண்டுமென கடவுளை வேண்டிக் கொண்டாள் மது. அவன் கைகள் கழுத்தில் உரச மதுவிற்கு லேசாக உடல் சிலிர்த்தது. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் போதும், மாலை மாற்றும் போதும் மகிழன் கொஞ்சம் அதிகமாக நெருக்கத்தைக் காட்டினான். அவன் குறும்பில் மது கொஞ்சம் திணறிப்போனாள்.
மஹாவை கண்களால் அழைத்த மது அவள் அருகில் வந்ததும் காதில் ஏதோ முணுமுணுத்தாள். வாய் விட்டுச் சிரித்தாள் மஹா.
"சித்தப்பா! எல்லாரும் பார்க்கிறாங்களாம். உங்களைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டாம்."
"ஏன்? அதை எங்கிட்ட அவங்க சொல்ல மாட்டாங்களாமா?" என்று மதுவைச் சீண்ட அவள் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.அவளின் கோபத்தை உள்ளுக்குள் ரசித்தவன் அமைதியாகிப் போனான். பக்கத்தில் அவள் நிற்பதே பரம சுகமாக இருந்தது.
திருமண நிகழ்வுகள் இனிதாக நிறைவான பின்னர், விருந்தினர் உபசரிப்பில் மது கொஞ்சம் இயல்பாகத் தெரிந்தாள்,
மகிழ்ச்சியை மஞ்சளாய் குலைந்து பூசியது போன்று மலர்ந்த முகமாய் நிற்கும் மகளையும், அவளுக்கு சற்றும் குறைவில்லாத அழகோடு கம்பீரமாய் நிற்கும் மகிழனையும் தம்பதிகளாக இணைத்துப் பார்த்ததில் கண்கள் மட்டுமல்லாது மனமும் நிறைந்தது தாமரைக்கும், சந்திரனுக்கும்.
நேரம் மதியம் ஒன்றைக் கடந்திருந்தது, வெகு நேரம் நின்று கொண்டே இருக்க மதுவிற்கு கால் வலித்தது.. அவள் முகத்திலேயே அதை புரிந்து கொண்ட மகிழன்.
“கால் வலிக்குதாடா?" என்றான்
"இல்லை மாமா.. நின்னுட்டே இருக்கிறதுனால ஒரு மாதிரி இருக்கு.." இந்த பட்டுசாரி வேற கசகசன்னு இருக்கு...
"இன்னும் கொஞ்ச நேரம் தான்.. அப்புறம் சாப்பிட போயிடுவோம்."
பசிக்குதா?” என்றான்.
“ம்.” என்று குழந்தையாய் உதட்டை சுழித்துப் பாவனை செய்தாள், முகம் லேசாகச் சோர்ந்திருந்தது. காலையில் பழச்சாறு குடித்தது தான்.
மணமகள் அறைக்குள் நின்ற தன் அக்காவை அழைத்தான் மகிழன்.
“அக்கா எனக்கு பசிக்குது' என்றான்.
"ஆட்கள் வர்ரது கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அப்ப நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிருங்க. சொல்லியபடியே இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் தாமரை.
உணவு முடித்து வந்த போது கூட்டம் கூடி இருந்தது. மீண்டும் விருந்தினர்கள் ஒவ்வொருவராக வாழ்த்திச் செல்ல..
மது மிகவும் தளர்ந்து விட்டாள், நேரம் ஆக ஆக 'எப்போதடா எல்லாம் முடியும்?' என்றானது மதுவுக்கு.
"அம்மா என்னால முடியலம்மா' என்று தன் தாயிடம் சிணுங்கினாள். தாமரை அவளை கோபமாக முறைத்தார்.
"அம்மா வேற ட்ரெஸ்சாவது மாத்தவா' என்றாள்.
கொஞ்சம் பொறுத்துக்க டா வீட்டுக்கு போய் விளக்கு ஏற்றாமல் முகூர்த்த புடவையை மாற்றக்கூடாது. என்று தாமரை கூறிக்கொண்டு இருக்கும் போதே... மது முகம் பிரகாசமானது,
வந்தது வேறு யாருமல்ல அவளின் கல்லூரித் தோழிகள். இவ்வளவு நேரம் சோர்வாக நின்றவள், தன் தோழிகளை கண்டதும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து அவர்களை நோக்கிப் போனாள். ஹாய் மது!” அழைத்தபடியே ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டாள் நிகிலா.
அவர்களோடு மஹாவும் வந்து இணைந்து கொண்டு தங்கள் கல்லூரி தோழிகளை மகிழனுக்கு அறிமுகப்படுத்தி வைக்க அந்த இடமே கலகலப்பாகிப் போனது.
கார்த்திகாவும், ஜானகியும் நேற்று இரவே வந்திருக்க நிகிலாவையும் மற்ற கல்லூரித் தோழிகளையும் மது இப்போது தான் பார்க்கிறாள். கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொள்ள, இளையவர்கள் கூட்டம் ஆர்ப்பரிக்க, ஒரு பெரிய கலவரத்திற்குப் பின் அந்த மணமேடை அமைதியானது. ஜானகியும், நிகிலாவும் மதுவை ஒரு வழி பண்ண, பெண்களின் கலாட்டாவில் மகிழனே மிரண்டு போனான், அவர்கள் பரிசுப் பொருட்களைக் கொடுத்துவிட்டு கீழே இறங்கிச் சென்றதும் மகிழன் மூச்சை இழுத்து விட்டான்.
திருமண சடங்குகள் முடிந்து மணமக்கள் இருவரும் மணமகன் வீடு புறப்பட்டனர். காரில் மதுவும் மகிழனும் அருகில் அமர்ந்திருக்க, மது கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தாள். மகிழன் அவளை நெருங்கி அமர்ந்தான்.
"இவ்ளோ இடம் இருக்குல்ல? அப்புறம் ஏன் இடிச்சிக்கிட்டு உட்கார்ற மாமா? கொஞ்சம் தள்ளி உட்காருங்க" என அடிக்குரலில் மது கூற,
"இவ்வளவு அழகான பொண்டாட்டிய பக்கத்துல வச்சிக்கிட்டு, தள்ளி உட்கார்ந்தா என்னை பைத்தியம்னு யாரும் சொல்ல மாட்டாங்களா?" குறும்பாக கேட்டான் மகிழன்.
“எனக்கு தலை வலிக்குது மாமா" எனக்கூறி கண்களை மூடி சீட்டில் சாய்ந்தாள்.. உண்மையிலேயே அவளுக்கு தலை வலிப்பது போல்தான் இருந்தது. அவளைப் பார்த்த மகிழன் அதற்கு மேல் வம்பு செய்யாமல், இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டான்.
வீடு வந்ததும் “மது," என மகிழன் தோளில் தட்ட... கண்களைத் திறந்த மது காரிலிருந்து இறங்கினாள்.
ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து வீட்டிற்குள் வரவேற்றனர், உள்ளே சென்றவுடன் மதுவை விளக்கேற்றச் சொல்ல, மது தீக்குச்சியை பெட்டியில் உரச, அது பற்றுவேனா என்றது. மகிழன் அவளின் கையைப் பிடித்து தீக்குச்சியை பற்ற வைத்து, விளக்கை ஏற்ற வைத்தான். சுற்றி நின்ற இளசுகள் "ஓ' வென்று கத்த, பெரியவர்கள் முகம் புன்னகையில் விரிய, மது அவனைக் கோபப்பார்வை பார்த்தாள்.
மணமக்களுக்கு பாலும் பழமும்
கொடுக்கப்பட முதலில் மதுவுக்கு கொடுத்த பின்னரே தான் அருந்தினான். இடையிடையில் மஹாவின் கேலிகளும், நிகிலா, ஜானகியின் குறும்புகளும் அனைவரையும் சிரிக்க வைத்து, மதுவை சிவக்க வைத்தது.
மகிழன் மாடிக்குப் போய்விட்டான்
பெண்கள் கூட்டமாக மதுவைச் சுற்றி அமர்ந்துகொண்டு கதை பேச, அந்த இடமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. .
இத்தனை நாள் வெயிட் பண்ணினது எதுக்குன்னு இப்போ தான் புரியுது." என்றார் சீதா
பாக்குற பொண்ணையெல்லாம் வேணாம்னு தட்டிக் கழிச்சுக்கிட்டே இருந்தாங்க உங்க ஹீரோ. இப்போதான் புரியுது, உலக அழகியைத் தேடிக்கிட்டு இருந்திருக்காங்கன்னு." அந்தப் பேச்சில் லேசாக வெட்கப் பட்டாள் மது
“அம்மாடி பொண்ணுங்களா... போதும் கதை பேசினது. மதுவுக்கு களைப்பாக இருக்கும். உங்க கதையை அப்புறமாப் பேசலாம், முதல்ல பொண்ணைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க." ஒரு அதட்டல் போட்டுவிட்டு மஹாவிடம் திரும்பினார் பார்வதி.
"மஹா... மதுவை மேல உன் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ." என்றார், மஹா மதுவைப் பார்க்கவும் அவளும் எழுந்து கொண்டாள், அலங்காரங்களைக் களைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.
************
மகிழன் அறை.
அவன் அணைப்பிற்குள் இருந்தாள் மது. அவளைப் பிரிந்திருந்த ஏக்கம், அவளால் மட்டுமே தனக்குள் தூண்டி விடக் கூடிய உணர்வுகள் என இத்தனை நாளும் தன்னைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவன் இன்று அத்தனையும் கரையுடைக்க அறைக்குள் தனிமையில் தன் காதல் மனைவியைப் பார்த்ததும், கொஞ்சம் தடுமாரித்தான் போனான் அவன் அணைத்த வேகத்தில் திணறிப்போனாள் மது.
அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன், நெற்றியில் ஒரு முத்தம் பதித்தான், காதல் நிறைந்த ஆசையோடு முதல் முத்தம்! அவள் முதுகு தண்டில் சில்லென்று ஒரு உணர்வு. தடுத்தால் அவனுக்கு மனது வலிக்குமோ என விட்டுவிட்டாள்.
ஒரு ஒற்றை நிமிடத்தை மட்டுமே தனதாக்கிக் கொண்டவன் அவளை விடுவித்த போது, அவன் மார்பிற்குள் புகுந்து கொண்டாள் மது. இத்தனை நாட்களாக இருந்த ஏக்கம், எதிர்பார்ப்பு, காதல் எல்லாம் அவளுக்குள்ளும் தேடலாக மாறியிருந்தது, அவன் மேல் அவள் வைத்த அன்பு மட்டும் சாதாரணமானதா, அவள் உயிரே அவன் தானே.
"இன்னும் கோபம் போகலையா?" என்று அவளை இறுக்கி அணைத்தான்.
அந்தக் கேள்வியில் கொஞ்ச நேரம் மௌனித்தவள், சற்றுத் தயங்கியபடியே பதில் சொன்னாள்.
“கோபம்னு நான் சொல்லலையே மாமா.”
அவளின் பதிலில் புன்னகைத்தான் மகிழன். “ஓ... அப்போ இன்னைக்கு பூரா விலகி நின்னதுக்கு காரணம் என்ன?”
அவன் கேள்வியில் அவள் தலை குனிந்தாள். தன் மனதைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறானே! மௌனமாக நின்றவளைத் தன் புறமாகத் திருப்பினான் மகிழன். அவள் முகத்தையே அவன் பார்த்திருக்க
“எம்மனசு எனக்கே புரியலை மாமா.” என்றாள்.
அவள் மனதிலிருப்பது அவள் வாயாலேயே வெளிவரட்டும் என்று அவனும் அவளையே பார்த்திருந்தான்
அன்று முழுவதும் பக்கத்திலேயே இருந்த அவள் அருகாமை ஒரு கிறக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவள் காட்டிய ஒதுக்கம் அவனுக்குப் புரிந்தது. அவளைக் காயப்படுத்தி இருப்பதும், எந்த இடத்திலும் அதற்கான காரணத்தை அவன் விளக்க முற்படவில்லை.
“என் மாமா எனக்கு மட்டும் தான்... என்னோட இடத்தில் இன்னொருத்தி வந்தது...” முடிக்காமல் நிறுத்தினாள் மது. “எனக்கு... சொல்லத் தெரியலை மாமா." அவள் தடுமாறவும் சிரித்தான் மகிழன்
தோழியிடம் இலகுவாகச் சொல்ல முடிந்ததை, மாமனிடம் சொல்ல அவள் பிரியப் படவில்லை. அந்த நினைப்பே அவளுக்குக் கசந்தது. தன்னைத் தவிர யாரும் அவனை ஆர்வமாகப் பார்ப்பது கூட அவளுக்கு பிடிக்கவில்லை.
"என் உசுருல நீ மட்டும்தான் இருக்க மது, இப்பவும்.. எப்பவும்...
'நான் இந்த விஷயத்துல ரொம்பவே பேராசைக்காரி மாமா. எனக்கு மட்டும் தான் என் மாமா.. மூச்சுமுட்ட எனக்கு உங்க காதல் வேணும்.
"மது!" அவன் குரலில் அத்தனை காதல்,
ஏத்துக்கவும் முடியாம, மனசு ஆசைப்பட்டதை நெருங்கவும் முடியாம நீ தவிக்கும் தவிப்பு எனக்கு புரியுது மது"
ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
அவன் அருகாமைக்காக ஏங்கியவள்தானே அவளும். இருந்தாலும் இப்போது மனது முரண்பட்டது. தங்கள் தாம்பத்தியம் இப்படியொரு சூழ்நிலையில் ஆரம்பிப்பதா?
"இந்த நிமிஷத்துக்காக நான் எவ்வளவு கனவு வச்சிருந்தேன் தெரியுமா மாமா?" சொல்லிவிட்டு அவள் அழ அவளை இறுக்கி அணைத்து இருந்தான்.
"புரியுது மது” சொன்னவனை மீண்டும் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
“என்ன பார்வை இது? உன் கண்கள் உயிரை அப்பிடியே உருவி எடுக்குதுடா.” தன் பேச்சில் தலைகுனிந்த பெண்ணை தன்னோடு இன்னும் சேர்த்தணைத்தவன்,
“மது, வீட்டுல நாம மட்டும் இல்லை. பெரியவங்க எல்லாம் இருக்காங்க. நமக்குள்ள எல்லாம் இயல்பா இருந்தா தான் அவங்க நிம்மதியா இருப்பாங்க. அந்தக் கண்கள் மீண்டும் அவனைச் சோதித்துப் பார்த்தது.
"மகாராணிக்கு எப்போ மனசு வருதோ, அப்போ இந்த அடிமையை ஏத்துக் கிட்டாப் போதும். அதுவரைக்கும் நான் காத்திருக்கேன்.”
“மாமா... நீங்க என்னைப் புரிஞ்சுக்கிறீங்க இல்லையா?"
“அம்மு, அதுக்காக என்னை ரெம்பவும் ஏங்கவைக்கக் கூடாதுடா." சிரித்தபடியே சொன்னவன் அவளைத் தன் அறைக்குள் அழைத்துச் சென்றான்.
“ட்ரெஸ் மாற்றிக்கொள். உன் முகம் ரொம்ப டயர்டா தெரியுது அறையை விட்டு வெளியே போய் கதவைச் சாத்தினான்.
அவன் செய்கைகள் அத்தனை இதமாக இருந்தது அவளுக்கு.
தன் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தாலும், அவன் தன் காதலை மறைக்கவுமில்லை, விட்டுக் கொடுக்கவும் இல்லையென்று அவளுக்கு நன்றாகப் புரிந்தது. கண்ணாடி முன் நின்று அவன் இதழ் ஒற்றிய நெற்றியை தடவிப் பார்த்தாள். சிரித்துக்கொண்டு ஒரு சுடிதாரை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.
***************
இரவு உணவு நேரம் வந்துவிட, விருந்திற்கு மகிழன் ஹோட்டலில் ஆர்டர் கொடுத்திருந்த உணவு வகைகளும் வந்து சேர்ந்தது. அனைவரும் உண்ண தாமரையும், மது அத்தையும் உணவு பரிமாறினர்.
மகிழன் சிறிது நேரம் ஓய்வெடுக்கவென மகிழியின் அறைக்குள் சென்றுவிட, பெண்கள் அவர்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மாலை நேரம் உறவினர்களும் கிளம்பினர்.
புறப்படும் முன் மது அழைத்து ஏகப்பட்ட அறிவுரைகள் வழங்கிவிட்டே சென்றார் கோகிலா..
மது அனைத்தும் அதிவேகத்தில் நடப்பது போன்றே இருந்தது. ஐந்து ஆண்டுகள் ஓடாத தன் வாழ்வியல் கடிகாரம் இன்று திடீரென ஒரே நாளில் அதிவேகமாக சுற்றுவது போன்றிருந்தது. சுகமான நொடிகள் மட்டும் விரைவாக கடந்திடுமோ என்னவோ!.
மாலை எழுந்து வெளியே வர, வீடே அமைதியாக இருந்தது.
மெல்ல கண்களை மூடினான் அதற்குள் அவன் பின்னே, "காபி...?" மது குரல் கேட்க, சட்டென ம்பினான். கையில் காபிக் கையில் தண்ணீர் டம்ளர் மாத்திரைகளுடன் அருகே வந்த மது, "இந்தாங்கப்பா.." என நீட்ட அமைதியாக வாங்கி இட்டுக்கொண்டார் குணசீலன்.
தந்தையின் அருகே அமர்ந்தவள், "நாளையில இருந்து நீங்களே மாத்திரை போட்டுக்கணும், டைமுக்கு சரியா சாப்பிடணும். அதிகம் வெளிய சுத்தமா வீட்டுக்கு வந்திடணும். நான் வாங்கிக் கொண்டுத்த புக்ஸ் எல்லாம் வாசிக்கணும் நான் தினமும் போன் பண்ணி விசாரிப்பேன் சரியாப்பா?" என்ற பட்டியல் வாசித்து கட்டளையிட்டாள்.
மது ஹாஸ்டல் செல்லும் போதெல்லாம் இத்தனையும் அவர் சொல்லியனுப்புவது, இன்று அத்தனையும் அவருக்கே திருப்பிச் சொன்னாள். திருமணம் முடித்த ஒரே நாளில் தன் மகள் இத்தனை பக்குவமாக மாறிவிட்டாளா! என வியந்து நோக்கினார். பிரிவை எண்ணி அவர் கண்கள் கலங்க, மெல்ல அவள் யை தடவிக் கொடுத்தார்.
முகம் மலர்ந்து சிறித்தவள், "என்னப்பா...?" என்க, "இல்லை நீயும் உடம்பை பார்த்துக்கணும். புகுந்த வீட்டுல எல்லாரையும்
பொறுமையோடு பார்த்துக்கணும், விளையாட்டுத்தனத்தை எல்லாம் விட்டுடணும், டெய்லி கால்
பண்ணனும் என்ன சரியா?" என்றார்.
மதுவின் கண்கள் லேசாக கலங்கியது..
ஏய் எதுக்குடி இப்ப அழுது வடிக்கிற.. ஐந்து வருஷமா நீ தனியா தான இருந்த இப்ப ஹாஸ்டலுக்கு பதில் மாமா வீட்டுல இருக்கப் போற.. அவ்வளவு தான்டா வித்தியாசம்.. அடிக்கடி நாங்க வரோம் நீயும் இங்க வந்து எங்களைப் பாரு.." அவர் ஆறுதல் கூற கூற மேலும் மதுவின் அழுகை அதிகமானது..
நெடுநேரம் சமாதனம் செய்த பின்பே அவள் அழுகை மட்டுப்பட்டது.. மதிய விருந்து முடிந்து, திருச்சிக்கு புறப்படும் ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது..
********************
புதிய இடத்தில் இருக்கிறோம் என்று பதட்டமோ, படபடப்போ இல்லாமல் இயல்பாக இருந்தாள் மது.
பெண்களுக்கு புகுந்த வீடு புது இடம், புது மனிதர்கள் என்ற மிரட்சியைத் தரும். ஆனால் அவளை இங்கே அதிகாரம் செய்யவோ, கேள்வி கேட்கவோ யாரும் இல்லை. இப்படி நடந்து கொள்ள வேண்டும், அப்படி செய்யக்கூடாது என்று அறிவுரைகளும் அவளுக்கு தேவைப்படவில்லை, திருமணம் முடிந்த பெண்ணின் மனதிற்கு இதைவிடப் பெரும் ஆறுதலாக என்ன இருந்துவிடப் போகிறது.
சந்திரன் உறவினர்கள், நண்பர்களை அழைத்துக்கொண்டு விளாத்திக்குளம் திரும்பிவிட. கவிதாவை துணைக்கு வைத்துக்கொண்டு. தாமரை தம்பி வீட்டிலேயே தங்கிவிட்டார்.
மது குளித்துவிட்டு காட்டன் புடவைக்கு மாறியிருந்தாள். கீழ் அறையில் தன் தாயிடம் நீண்ட நேரம் உரையாடியவள் தாய் மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துவிட்டு அவளை அணைத்து உச்சி முகர்ந்த போதுகூட அவளுக்கு இதமாகத்தான் இருந்தது. ஆனாலும் மாமன் மீது இருந்த வருத்தம் மட்டும் நீங்கவில்லை.
அவள் முகத்தில் தெரிந்த குழப்பத்தை, சின்ன பெண்ணின் பயம், பதட்டம் என்று எடுத்துக்கொண்டார் தாய்,
"அவன் பார்க்க தான்டா முரடன் மாதிரி தெரிவான், நீதான் அவன் உசுரு' என்றார் பார்வதி
"சிரித்தாள், அதற்கு மேல் வெட்கத்தில் என்ன பேசுவதென்று அவளுக்கும் தெரியவில்லை.
" சரி நீ மாடிக்கு போம்மா." என்று பார்வதி சொல்லவும் தலையாட்டியபடி மேலே வந்துவிட்டாள். கையில் பால் சொம்பு கூட இல்லை.
படியேறி மாடிக்கு வந்தாள், அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழையவும் இதமான மனம் ஒன்று சுவாசத்தில் கலந்தது.
அறை எளிமையாக இருந்தது, திரைப்படங்களில் பார்ப்பதைப் போல எதுவும் இல்லை, புது விரிப்பு விரிக்கப்பட்டு மல்லிகைப்பூவும் ரோஜா இதழ்களும் உதிரியாகத் தூவப்பட்டிருந்தது.
திருமணமானவுடன் அவள் தன்னோடு ஒன்றி விட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? அது அவனுக்கும் தெரியும்... திருமணத்திற்கு முன்பே ஒரு மாதிரியாக தன்னுடைய மனதை தயார்படுத்தியும் வைத்திருந்தான்.
ஆனால் அவையெல்லாம் அவனது மனைவியை தன்னருகில் காணும் வரை தான்... அழகுப் பதுமையாக நின்றவளைப் பார்த்த போது அவள் வேண்டும் என்று தவிக்கும் மனதை என்ன செய்து அடக்குவது என்று தெரியவில்லை.
அவனது கட்டுபாட்டை அவன் அறிவான். ஆனால் அவளை தனிமையில் பார்க்கும் போது அறிவு வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. அவளோடு முழுவதுமாக ஆழ்ந்து விட வேண்டும் என்று துடிக்கும் அவனது மனதுக்கும், தான் செய்து கொண்ட சங்கல்பம் மறந்து மகிழனுக்கு
உன்னை புடவையில் பார்க்கும் போது மனசு என்னமோ பண்ணுது?" இதுவரை அந்தக் கண்களில் தெரிந்த உறுதி போய் இப்போது குறும்பு குடியேறி இருந்தது.
அவளைப் பின்னோடு அணைத்துக் கொண்டான். ஓர் அதிர்வு அவளிடம் தெரிந்தாலும், அவனை அனுமதித்தாள். அவனை எந்த விதத்திலும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் அவளும் கவனமாக இருந்தாள்.
இன்னும் நெருங்கியவன் "ரொம்ப வாசமா இருக்க" என்று கூற,
மதுவுக்கு நாக்கு உலர்ந்தது.
"மாமா எனக்கு தூக்கம் வருது" என திரும்பி பார்க்காமலேயே மது திக்கித் திணற...
"ம்... தூங்கு, ஆனா திரும்பி என் முகத்தைப் பார்த்து சொல்லு" என்றான் மகிழன்.
இவள் திரும்பி நின்று மீண்டும் கூற,
“ம்ஹூம், நீ என் முகத்தைப் பார்க்கல" என்றான்.
மது சிரமப்பட்டு தலை நிமிர்ந்து அவனை பார்க்க,
"இப்ப சொல்லு" என்றான்.
"தூக்கம் வருது" என மெல்லிய குரலில் சிரமப்பட்டு மது சொல்ல,
அவள் கையை விட்டவன், இரு கைகளாலும் அவளை தூக்கிச் சென்று படுக்கையில் விட்டவன். அவளை அணைத்து கொண்டு படுத்தான். மகிழன் கை வளைவுக்குள் மதுவின் இடை இருந்தது.
"தூங்கு மது. குட் நைட்" அவள் நெற்றியில் முத்தமிட்டு சொன்னவன், கொஞ்ச நேரத்திலேயே தூங்கிவிட,
மதுதான் தவித்தாள், தான் சம்மதித்திருந்தால் இங்கே அழகானதொரு இல்லறம் ஆரம்பித்திருக்கும் என்று அவள் மனசாட்சி மல்லுக்கு நின்றது. எண்ணங்களின் கனம் தாங்க முடியாமல் உறங்கும் மாமனையே பார்த்தாள்.
'இப்பிடி ஒட்டிக்கிட்டே தூங்கினா எப்பிடித் தூக்கம் வருமாம்?' மனதுக்குள் சலித்துக் கொண்டவளுக்குத் தெரியாது, சற்று நேரத்திலேயே அவளும் உறங்கிப் போனது.
"மகிழன் கண் விழித்தபோதும் அவன் கையணைப்பிற்குள் தான் இருந்தாள் மது. அவள் உறக்கம் கலையாமல் மெதுவாக எழுந்தான், நேரம் நான்கு முப்பத்தைந்து காட்டியது. அவளையே பார்த்திருந்தான்.
ஒருக்களித்து அவள் படுத்திருக்க, அவள் கழுத்திலிருந்த தாலி தலையணை மேல் கிடந்தது. கலைந்திருந்த கூந்தலும், களைத்திருந்த முகமும், கழுத்துத் தாலியும் அவனை ஏதோ செய்ய, ஒரு பெருமூச்சோடு அறையை விட்டு வெளியேறினான்.
உடற்பயிற்சி முடித்து வந்த மகிழன் குளித்து விட்டு வெளியே வர நல்ல தூக்கத்தில் இருந்தாள் மது நேற்றைய திருமணம கொண்டாட்டம் இடைவிடாத நிகழ்வுகளால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து விடிந்தது கூடத் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள்.
மது.” மகிழன் அவள் கன்னத்தைத் தட்டி எழுப்ப, தன் கன்னத்தில் உணர்ந்த குளிர்ந்த கையின் ஸ்பரிசத்தில் லேசாகக் கண்களைத் திறந்தாள். எதிரில் மகிழன் நின்று கொண்டிருக்க
"ம்ப்ப்ச்ச்... தூங்க விடுங்க மாமா." என்று மீண்டும் போர்வைக்குள் சுருண்டள்,
"மது' என்று மீண்டும் அழைக்க
டயர்டா இருக்கு மாமா. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறனே" என்றாள். அந்த 'மாமா' என்ற கொஞ்சல் வார்த்தையில் ஒரு கணம் உறைந்து நின்றவன். அவள் விட்ட தூக்கத்தை தொடர, அவள் தூங்கும் அழகை இமைக்க மறந்து பார்த்திருந்தான்.
"மது! மணி எட்டாகுது. மஹா வந்து மானத்த வாங்கறதுக்குள்ள, குளிச்சிட்டு கீழபோகணும். எந்திரி..." அதட்டலாக ஆரம்பித்து கெஞ்சலாக முடிக்க,
பட்டென்று கண்விழித்தவள், எழுந்து அமர்ந்ததும் புன்னகையுடன் "குட் மார்னிங் மாமா." என்றாள், முதல் நாள் இரவு எதுவுமே நடக்காதது போல மகிழ்ச்சியாக தனக்குக் காலை வணக்கம் சொன்னவளை வியப்பாக பார்த்தான் மகிழன்.
தூக்கம் களையக் களைய இரவின் நிகழ்வுகள் நினைவில் வந்தது, முதலிரவில் ஒரு மனைவியாக தான் நடந்து கொள்ளவில்லை என்று அவள் காதல் மனது கேள்வி கேட்டது. நேற்று இரவு நடந்துகொண்டது அதிகமோ என்று இப்போது எண்ணம் வர. அவனிடம் மன்னிப்பு கேட்க வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.
"ப்ரஷ் பண்ணுற ஐடியா இல்லையா?" அவளையே பார்த்திருந்தவன் கேட்டான்.
"இதோ...” சட்டென்று எழுந்து விட்டாள். எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்கத் தயக்கமாக இருந்தது. வேகமாக குளியலறைக்குள் அவள் போக நிதானமாக நாற்காலியில் அமர்ந்தான் மகிழன்.
அவள் குளித்து முடித்துவிட்டு சுடிதாரில் வெளியே வந்தபோது கையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்தான் அவன். தலையைத் துவட்டி அதே டவலை சுற்றிக் கொண்டவள்.
"மகிழன் ஐந்து மணிக்கே உடற்பயிற்சியை முடித்துவிட்டுக் குளித்துவிட்டான். இருந்தாலும் கீழே போகவில்லை. திருமணமான அடுத்த நாளே தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்க அவன் கீழே போவது அத்தனை அழகாகத் தெரியவில்லை அவனுக்கு.
புத்தகத்தை மூடி வைத்தவன் அவளோடு கீழே இறங்கி வந்தான்.
பார்வதியும், தாமரையும் சமயலறையில் இருந்தார்கள்.
"வாடா மதுக்குட்டி! குளிச்சுட்டியா? சாமியறையில் போய் விளக்கேத்திட்டு வாம்மா! காபி கலந்து வைக்கிறேன்." பார்வதி பேத்தியை அணைத்து முத்தமிட்டார்.
விளக்கேற்றி நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு வந்தவள், சமையல் அறைக்குள் நுழைய,
"மது! தலைய நல்லா துவட்டு. இன்னும் ஈரம் சொட்டுது பாரு." தாமரை கூற,
"மதுவுக்கு நல்ல முடி. அவளால் எப்படி தனியாக துவட்ட முடியும்" நீ போய் அவளைப் பாரு தாமரை என்றார் பார்வதி.
ஆமா நான் இங்கேயே தங்கி இவளுக்கு தலை தேய்த்து விட்ட, என் புருஷனையும் பையனையும் யார் பார்க்கிறது?
"இதுக்கு தான் அம்மாச்சி எனக்கும் எங்கம்மாவுக்கும் சண்டை வரும். இவ்வளவு முடி இருந்த நான் தனியா என்ன பண்ண முடியும். நான் முடிய வெட்டப்போறேன்னு சொல்லுவேன். அவங்க உடனே கரண்டியத் தூக்கிட்டு வருவாங்க." சிரித்துக் கொண்டே அவள் கூற, மூவரும் சேர்ந்து சிரித்தார்கள்...
சமையற்கட்டில் அவள நிற்பது தெரிந்ததும். ஹாலில் இருந்து மகிழன் எட்டி எட்டி பார்க்க... மகனின் தலைத் தெரியவும் பேத்தியிடம் டீயைக் கொடுத்துவிட்டார் பார்வதி.
ஒரு அழகான சிரிப்போடு அவனிடம் தேநீரை நீட்டிய பெண்ணிடம் மகிழன் சில்மிஷம் எதுவும் செய்யவில்லை. அன்றைய நாளை சுமூகமாகவே அவனும் தொடங்கினான்.
அவள் முதல் மறுப்பு அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. வேறு எந்த விஷயத்திலாவது அவள் தன்னை மறுத்திருந்தாலும் அவன் கண்டுகொண்டிருக்க மாட்டான். தான் அத்தனை ஆசையாக நெருங்கிய பின்பும் தன்னை அவள் நிராகரித்தது மகிழனுக்கு உள்ளுக்குள் லேசாக வலித்தது.
"தேங்க்ஸ்டா. நீ சிரமப்படுத்திக்காத' என்றான்.
அவள் அவனை முறைத்தாள்.
"ஓ. இது மனைவிக்கான கடமையோ." அவன் முகத்தில் எள்ளல் புன்னகை.
எதற்கு இப்போது சிரிக்கிறார்? நான் டீ குடுத்தால் ஐயா குடிக்கமாட்டாராமா? அவள் மனம் சண்டித்தனம் பண்ணியது. சிறுபிள்ளைப் போல நடந்து கொள்கிறோமோ!? தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.
*******************
"கல்யாணத்துல கூட உம்முகம் அவ்வளவு சந்தோஷமா இருக்கலை. அம்மாக்கூட நேத்து எங்கிட்டப் பேசினாங்க. உங்களுக்குள்ள எதுவும் நடந்த மாதிரித் தெரியலைன்னு." இப்போது திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மது.
***************÷
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அவர்கள் உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை. மது மகிழனோடு இலகுவாக பழக ஆரம்பித்திருந்தாள். பேச்சு ஊடலாக தெரிந்தாலும் அவள் பேச்சில் ஒரு இணக்கமும். நான் உன் மனைவி என்ற உரிமையும் இருக்கும்.
மகிழன் அந்தப் பொழுதுகளிலெல்லாம் மகிழ்ந்து போவான். இணக்கம் காட்டுபவள் இரவில் மட்டும் தனிமையில் அவனை தவிக்க வைப்பாள். எவ்வளவு பேசினாலும் சிரித்தாலும் இருவருக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத கோடு ஒன்றைத் போடுவது போலவே உணருவான் கணவன்.
அது அவன் பிரமையா இல்லை அவள் சாமர்த்தியமா என்று சத்தியமாக மகிழனுக்குப் புரியவில்லை. எது எப்படியோ... மனைவியை நெருங்க வழி தெரியாமல் திண்டாடினான்.
நாளை மறுவீடு அழைப்பு,
தாங்கள் வசிக்கும் வீதியில் உள்ள அத்தனைப் பேரோடும் உறவு பாராட்டினாள் அம்மாவோடு வாய் ஓயாமல் பேசினாள். ஒவ்வொரு நாளும் அவரோடு பேச அவளுக்கு அவ்வளவு கதை இருந்தது,
மது கேட்டால் மஹா உயிரைக் கூடக் கொடுக்கத் தயார். அப்படி நெருங்கிய தோழிகள் ஆனார்கள் இந்த ஒரு மாதத்தில்.
ஒரு மாதத்திற்கு முன்பு மது என்றால் யாரென்றே தெரியாத அந்த வீதியில் இப்போது மதுதான் எல்லாம்.
ஹாலில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிக்கும் தன் மனைவியை தன் அலுவல் அறையிலிருந்தபடி பார்த்து ரசித்துக் கொள்வான் மகிழன்.
"இல்லைக்கா... என்னால இவ்வளவு ஸ்வீட் சாப்பிட முடியாது. எனக்கு வேணாம்."
"என்னத் தம்பி நீங்க? தாய்மாமன்... நீங்க ஸ்வீட் எடுக்காம வேற யாரு எடுக்கப்போறா?"
"என்னால சாப்பிட முடியாதுக்கா."
"முடியலைனா அங்கக் குடுக்கிறது. சரிபாதின்னு எதுக்கு இருக்கா?" அந்தப் பெண் கண்ஜாடையில் மதுவைக் காட்டவும் அங்கிருந்த பெண்கள் எல்லோரும் சிரித்தார்கள்.
"குடுக்கச் சொல்லுங்களேன் உங்கத் தம்பியை. நாங்க என்ன வேணாம்னா சொல்லிட்டோம்." சொன்னது வேறு யாருமல்ல. மதுதான். மகிழன் திகைத்துப் போனான்.
"அதான் சொல்லிட்டாங்க இல்லை... எடுத்துக்கோங்க தம்பி." அந்தப் பெண் மீண்டும் வற்புறுத்தவும் மகிழன் தட்டை எடுத்துக் கொண்டான். கண்கள் அவனது அழகான ராட்சசியையே வட்டமிட்டது.
"சாப்பிடுங்க தம்பி." அவன் ஒரு கடி கூடக் கடித்திருக்க மாட்டான். சட்டென்று வந்த மது அவன் கையிலிருந்த தட்டை வாங்கிக் கொண்டாள். இப்போது ஆச்சரியத்தையும் தாண்டி மகிழனின் கண்கள் மனைவியை ஆழம் பார்த்தது. இவை எதையும் பொருட்படுத்தாமல் கணவன் கடித்துக் கொடுத்திருந்த லட்டைச் சுவைப் பார்க்க ஆரம்பித்திருந்தாள் மது.
"ஏன்? உங்க தம்பி எச்சில் பண்ணினா நாங்க சாப்பிடமாட்டோமா என்ன?" கெத்தாகக் கேட்டுவிட்டு மது ஒரு பார்வைக் கணவனைப் பார்க்க மகிழன் வீழ்ந்தே போனான்.
என்ன பண்ணுகிறாள் இந்தப் பெண்! விளையாட்டாகப் பண்ணுகிறாளா... இல்லே உண்மையிலேயே அவள் மனம் கனிந்திருக்கிறதா? ஆனால் இன்று முழுவதும் அவள் ஒரு இணக்கமான மனநிலையில் இருப்பது போல்தான் தோன்றியது மகிழனுக்கு.
"மாது..."
வீட்டிற்குப் போன கையோடு மகிழனுக்கு ஏதோவொரு அழைப்பு வர மகிழுந்து திறப்பை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.
"இப்பத்தானே வந்தீங்க, அதுக்குள்ள போகணுமா?” மனைவியின் முகத்தில் தெரிந்த ஏக்கம் மகிழனை அங்கிருந்து நகரவிடாமல் கட்டிப் போட்டது. அவள் கண்களையே சில நொடிகள் பார்த்தபடி நின்றிருந்தான். பெண்ணும் இமைக்க மறந்து கணவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஆபீஸ்ல இருந்து போன், பணம் குறையுது." அத அர்ச்சனாவாள் பார்க்க முடியாது. நான்போய் தான் ஆகனும்
"அப்போ வர லேட்டாகுமா மாமா?''
“ஏன்... சீக்கிரமா வரணுமா?" அந்தக் கேள்விக்குள் ஆயிரம் அர்த்தங்கள். மது எதுவும் பேசவில்லை. தலையைக் குனிந்தபடி திரும்பி நடக்கப்போனாள். ஆனால் மகிழன் விடவில்லை. அவள் கையைப் பிடித்திருந்தான்.
அவர்கள் இருவரும் நின்றிருந்தது வீட்டின் வரவேற்பறை. வீட்டிற்குள் நுழையும்போதே அழைப்பு வந்ததால் மகிழன் அங்கேயே நின்று விட்டான். மதுவும் அவனுடன் தாமதிக்க பார்வதி உள்ளே போய்விட்டார்.
பெண் இப்போது படபடத்துப் போனாள். மிரண்ட விழிகள் சுற்றும்முற்றும் அவசரமாக யாரும் இருக்கிறார்களா என்று ஆராய்ந்தது. மகிழன் கண்களில் இப்போது புது ஆவல் பிறந்தது.
மனைவி கைகளை இழுத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டுமென்றே அந்தச் சின்ன மணிக்கட்டை இன்னும் இறுக்கிப் பிடித்தான். அவளின் அழகான அவஸ்தையைப் பார்க்க அவனுக்கு அத்தனை ஆனந்தமாக இருந்தது. அவள் அணிந்திருந்த வளையல்களோடு சில நொடிகள் விளையாடினான் மகிழன்.
"கைய விடுங்க... மாமா" அவள் கெஞ்சினாள். ஆனால் அவனுக்கு அது கொஞ்சலாக இருந்ததிருக்கும் போல. மறுகையால் அவன் கையைத் தன் கையிலிருந்து விலக்கியவள் கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் மாடிப் படிகளுக்குப் போனாள்.
விலகி வந்தவளுக்கு அவன் விலகிப் போவதுவும் பிடிக்கவில்லை.
படியேறியபடியே அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். திருமணமான நாளிலிருந்தே காதல் பார்வைப் பார்த்தவன். இவள் சீறிய பொழுதுகளிலெல்லாம் கூட சிந்தாமல் சிதறாமல் அனைத்தையும் தாங்கிக் கொண்டவன்... இப்போதிவள் சிணுங்கும் போதா சும்மா இருப்பான்!
அங்கேயே நின்றிருந்தான் மகிழன். தலையைக் கோதியபடி போகும் மனைவியையே பார்த்திருந்தவன் விழிகளில் அத்தனைப் போதை.
மேலே வந்த மது அறைக்குள் போகாமல் உப்பரிகை வந்தாள். அவள் அங்குதான் வருவாள் என்று அவனும் எதிர்பார்த்திருப்பான் போலும். மகிழுந்தின் கதைவைத் திறந்து வைத்துக்கொண்டு உள்ளே ஏறாமல் மேலேயே பார்த்திருந்தான்.
அழகானதொரு இரவுக்காய் அந்த இரு உள்ளங்களும் ஏங்கி நின்றன.
******************
காலையில் மது கண்விழித்த போது கணவன் அருகில் இல்லை. 'இத்தனை சீக்கிரமாக எங்கே போயிருப்பார்?'
யோசனையோடே குளித்து முடித்தவள்.
சமையல் அறை வந்தாள்.
"அம்மாச்சி?"
"வாடா. என்ன சீக்கிரம் எழுந்து வந்துட்ட, டீ வச்சி கொடுக்கட்டுமா?"
"மாமா எங்க?"
"அவன் காலையிலேயே கிளம்பிப் போய்ட்டானேம்மா!"
"போயிட்டாங்களா?"
"ஆமாண்டா. நீ அசந்து தூங்குற தொந்தரவு பண்ண வேணாம்னு என்கிட்ட சொன்னான்."
"ஓ..." பார்வதி கொடுத்த டீயை வாங்கிய மது சமையலறைக்குப் பக்கத்தில் இருந்த படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்.
உண்மையிலேயே மாமா வேலையாகப் போயிருக்கிறானா? இல்லை... தன்னைத் தவிர்க்கிறானா? யோசனை மேலிட டீ இப்போது லேசாகக் கசந்தது. நேற்று இரவு தன் அருகாமையைக் கணவன் நாடி இருந்தாலும் தான் பேசிய வார்த்தைகள் அவனைக் காயப்படுத்தி இருக்கும் என்று மதுவிற்கு இப்போது புரிந்தது. அவள் அவனை வேண்டாம் என்று எப்போதும் சொல்லவில்லையே!
கணவனை உடனேயே பார்க்க வேண்டும் போல மனம் கிடந்து தவித்தது.
போதாததற்கு அந்த அம்மா வேறு சத்தம் போடுகிறார்கள். தலையைப் பிடித்துக் கொண்டாள் மது.
"மத்தியானம் சாப்பிட வருவாங்களா அம்மாச்சி?
"ஒன்னுமே சொல்லலையேடா"
கதவை மனைவி திறக்க அதை எதிர்பார்க்காத மாதவன் திடுக்கிட்டுப் போனான். கூடவே அவள் நின்றிருந்த தோற்றம்! அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. பல்லவி இதமாகப் புன்னகைத்தவள் எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் போய் விட்டாள்.
கையில் பால் கிளாஸோடு அவர்கள் ரூமிற்கு அவள் வந்தபோது கணவனின் கண்கள் அவளைக் கேள்வியாகப் பார்த்தது. குளியலை அப்போதுதான் முடித்திருந்தான். மது அவன் கண்கள்கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அவன் பாலைக் குடித்து முடிக்கும் வரை அமைதியாக இருந்தாள்.
அவன் முன்னுச்சி மயிர் லேசாக நனைந்திருக்க தன் புடவைத் தலைப்பால் அதை உரிமையாகத் துவட்டி விட்டாள். மகிழன் அந்தச் செய்கையிலேயே முழுதாகக் காலியாகிப் போனான்.
துவட்டி முடித்தவள் அந்த முகத்தைத் தன்னருகே இழுத்து முழுவதும் முத்தம் பதித்தாள். மாதவன் கிறங்கிப் போனான். மனைவி அத்தோடு நிறுத்த விரும்பவில்லை என்று தெரிந்த போது கள்ளுண்ட வண்டாகிப் போனான்.
±+++++++++++
"என்ன நீங்க... சீரியல்ல வர்ற டயலாக் எல்லாம் சொல்றீங்க மாமா?" கிண்டல் செய்தாள் மது.
"ஓய் நான் எந்த சீரியலும் பார்க்கிறது இல்லை, நீ பார்ப்பியோ..."
"ம்ஹூம், ஆனா அம்மா பார்க்கும் போது எதேச்சையா பார்த்திருக்கேன்" என்றாள்.
"இனிமே அப்படி கூட பார்க்காத, வேணாம். எனக்கு பிடிக்காது" என்றான்.
தள்ளி நின்றவள், புருவம் சுளித்து, "உங்களுக்கு பிடிக்கலைன்னா எதுவும் நான் செய்யக் கூடாதா?" எனக் கேட்டாள்.
"சீரியல் பார்க்காதன்னு சொன்னது தப்பா?
"அதை சொல்லலை, ஆனா உங்களுக்கு பிடிக்காததால் செய்யக் கூடாதுன்னு ஏன் சொல்றீங்க?" மகிழன் முகம் இறுக்கமாக மாறியது.
"சொல்லுங்க மாமா, இது சாதாரண விஷயமா தெரியலாம், ஆனா உங்களை பத்தி எனக்கு சரியா தெரியலையோன்னு எல்லாம் யோசனை வருது" என்றாள்.
"இப்படி ரொம்ப ஆர்க்யூ செய்யாத அம்மு. நல்லது சொன்னா கேட்டுக்க" என்றான்.
"அதே மாதிரி எனக்கும் ஏதாவது பிடிக்கலைன்னா நீங்க செய்யாமல் இருப்பீங்களா மாமா?" விடாமல் கேள்வி கேட்டாள்.
"என்ன செய்யணும் இப்போ?" கோவமாக கேட்டான்.
"முதல்ல இப்படி சட்டு சட்டுன்னு கோவ படாதீங்க" என்றாள்.
"இப்ப கோவமா என்ன பேசிட்டேன் நான்?" கோவமாகவே கேட்டான்.
"மாமா ப்ளீஸ், நான் பொதுவா ஒரு விஷயம் சொன்னேன். சொல்ல வர்றதை புரிஞ்சுக்கோங்க. இது நல்லதில்ல செய்யாதன்னு சொல்றதுக்கும் எனக்கு பிடிக்கல அதனால் செய்யக்கூடாதுன்னு கண்டிஷன் மாதிரி சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. கணவன் மனைவி ரெண்டு பேருமே சமம் இல்லையா? ஒருத்தவங்க விருப்பத்துக்கு
இன்னொருத்தவங்ககிட்ட மரியாதை இருக்க வேணாமா?" மிகவும் பொறுமையாக கேட்டாள்.
மரியாதை குறைவா உன்கிட்ட ஈடக்கிட்டேன் இப்போ என் மனைவி
என்ன என்பது போல அவன் முகம் பார்த்தாள் பூவை.
"அதான் சீரியல், ஆனா நான் இருக்கும் போது பார்க்காத" என்றான்.
"அப்ப இவ்ளோ நேரம் சீரியல் பார்க்க விடுங்கன்னு கேட்டுத்தான் உங்ககிட்ட பேசினேனா?" என அயர்வாக கேட்டாள்.
அவளருகில் அமர்ந்த உதய், "உன் விருப்பத்துக்கு எப்பவும் என்கிட்ட மரியாதை இருக்கும் மது. ஆனா சில விஷயம் எனக்கு பிடிக்கலைன்னா செய்யாத" என்றான்.
மது அசையாமல் அப்படியே இருக்க, "சரிடி உனக்கு பிடிக்காததை நானும் செய்யல, என் கோவத்தை குறைக்க ட்ரை பண்றேன், போதுமா?" எனக் கேட்டான்.
++++++×××××××.
ஹாலோ'
சொல்லுடி புதுப்பொன்னு
"பர்ஸ்ட் நைட் எப்படி' போச்சு
"சீ போடி..
சீ சும்மா சொல்லுன்னா..
"அதான் இல்லையே."
"என்னது? இல்லையா?'
"ம்ஹூம்... இல்லை."
“அப்போ என்னதான்டி நடந்தது?”
"சண்டைப் போட்டேன்."
"அடக்கடவுளே! ஃபர்ஸ்ட் நைட்ல சண்டையா?!”
"ம்...என்னோட இஷ்டம் இல்லாம என்னைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு திட்டினேன்."
"ஐயையோ! இதுவும் நடந்ததோ?
கட்டாயப்படுத்தினவங்களோ?"
"இல்லைத்தான்... இருந்தாலும் எனக்கு சண்டைப் போட கொஞ்சம் ஸ்ட்ரோங்கான காரணம் வேணுமே."
"சரியான வில்லிடி நீ." கார்த்திகா சொல்ல இப்போது இரு பெண்களுமே கிளுக்கிச் சிரித்தார்கள்.
" என்ன நடந்தது?”
"சண்டையைப் போட்டுட்டு நான் தூங்கிட்டேன்."
"என்னது!? தூங்கிட்டீங்களா!? அப்ப வேற ஒன்னும் நடக்கல்லையா?"
"ஹா... ஹா... இல்லையா."
“அடச்சீ! நல்லா ஏமாத்திட்ட. நானும் பெரிசா ஒரு ரொமான்ஸ் வரப்போகுதுன்னு நினைச்சிட்டன்."
“ரொமான்ஸ் எல்லாம் ஒன்னுமே இல்லை கார்த்தி.
××××××××××÷××÷÷÷
திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியிருந்தது.
திருமணம், விருந்துகள், குலதெய்வ வழிபாடு, கறிவிருந்து என்று ஒரு மாதம் போனதே தெரியாமல் பறந்தது.
இவற்றை தவிர அவர்களின் வாழ்வில் வேறு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை.
மது தனது கணவனை யாரிடமும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. மற்றவர்கள் முன் சிரித்துப்பேசி இணக்கம் காட்டியவள், தனிமையில் நெருக்கம் காட்ட முடியாமல் தவித்தாள்.
அவன் மறுக்கவில்லை, மறக்கவில்லை.
முடியவில்லை. ஆர்வமும் இல்லை. கடமைக்கென்று அவன் செய்யும் வேலை எவ்வளவு தவறானது என்று அவனது மனசாட்சி அவனை குத்திக் காட்டிக் கொண்டே இருந்தது.
மதுவின் கோபம் அவனுக்கு நியாயமாகவே பட்டது. அம்மாவின் ஆசைக்காக என்றாலும் வர்சினியை பெண் பார்க்கப் போனது கண்டிப்பாக மன்னிக்கவே முடியாத ஒரு தவறு என்பது அவனுக்கு நன்றாக புரிந்திருந்தது.
*******
உள்ளே வந்த மகிழன், அவளை கட்டிலில் படுக்க சொன்னவன், எப்பொழுதும் போல தரையில் படுத்துக் கொண்டான்.
'எல்லாத்தையும் கண்ணை பார்த்தே புரிஞ்சி செய்வார். இப்ப மட்டும் என்னவாம்? வாயைத் திறந்து சொல்லணும்னு நினைக்கிறாரா?
மக்கு மாமா.... போடா..... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்' என மது முறுக்கிக் கொள்ள,
'கொஞ்சம் கொஞ்சமா இப்பதான் என்னை பார்க்கிறா. நான் அவசரப்பட்டு அதனால கோவத்துல விலகி போயிட்டா...... என்ன பண்றது? வேண்டாம். கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம்' என மகிழன் நினைத்துக்கொள்ள, இருவரும் ஒருவர் மனது மற்றொருவருக்கு ஆரம்பித்தாலும், தயக்கம் னும் மாய போர்வையால்
ஒரே ஒரு ஐஸ்கிரீம் வண்டி மட்டும் நிற்க, மகிழன் சென்று மதுவுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கி வந்தான். அவனுக்கும் ஒன்று வாங்கி வந்திருந்தான். தன்னுடையதை ஒரு வாய் சாப்பிட்டவள், அவனுடையதை பார்த்து “எனக்கு இதுவும் சாப்பிடணும் போல இருக்கு" என்றாள்.
"இரு வாங்கிட்டு வரேன்" என மகிழன் எழப் போக, அவனைத் தடுத்தவள் அவன் ஐஸ்கிரீம் வைத்திருந்த கையை பிடித்து, தன் வாய்க்கருகில் கொண்டு சென்று அவனது ஐஸ்கிரீமை சுவைத்தாள்.
சிறு சிரிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த மகிழன், "எனக்கு கொஞ்சம் மிச்சம் வைக்கிறியா?" எனக் கேட்டான்.
அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் பிடித்திருந்த அவனது கையை விட, மிச்சமிருந்த ஐஸ்கிரீமை மகிழன் சுவைத்தான். சில்லென்று இருந்த ஐஸ்கிரீமை சுவைத்தாலும், உடல் ஏனோ
வெம்மையை உணர்ந்தது.
உடை சற்று உலர்ந்து இருக்க இருவரும் கிளம்பினார்கள். வரும்பொழுது சிறு தயக்கத்துடன் இருந்த மது, இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் அவன் பின்னால் அமர்ந்து, அவனது
இடுப்பை சுற்றி கையைப்
போட்டுக் கொண்டாள்.
வீட்டுக்கு வந்து இரவ உணவை
"என்ன?" எனக் கேட்டாள் மது.
"ஹேய் பட்டுக்குட்டி குட்மார்னிங்" என்றான் மகிழன்.
"என்ன புதுசா பட்டுக்குட்டின்னு சொல்ற?"
"ம்.... நீ ரொம்ப சாஃப்ட் அது நேத்து நைட்டு தானே தெரிஞ்சுகிட்டேன்" எனக்கூறி மகிழன் கண்சிமிட்ட,
"அப்படியா வேற என்னவெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட?" எனக்கேட்டாள் மது.
"நீ என் செல்ல பூனைக்குட்டி, நாய்க்குட்டி....." என சொல்லிக்கொண்டிருக்க அவனை தடுத்தவள், “என்ன அனிமல்ஸ் பேரா சொல்ற?" என சந்தேகமாய் கேட்டாள்.
"பூனைதான் இப்படி பிராண்டி வைக்கும்" என தன் தோளில் இருந்த காயத்தை காட்ட, அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்பதை கணித்த மது, அவன் வாயை தன் கையால் மூடி, "பேசாத எனக்கு தூக்கம் வருது" என கண்களை மூடிக்கொண்டாள்.
"ம்ஹூம்.... அப்படியா? எங்க என்னை பார்த்து சொல்லு" என மகிழன் சிரித்துக்கொண்டே கேட்க, கண்களைத் திறக்காமலே மதுவும் சிரித்தாள்.
உணவை முடித்துக்கொண்டு நீண்ட நேரம் ஹாலில் இருந்தவன், தாமதமாகவே அறைக்கு வந்தான். படுக்கச் செல்லாமல், மதுவையும் கண்டுகொள்ளாமல், ஒரு பைலை எடுத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டான்.
அவனுக்கு அருகில் வந்த மது, குரலை செரும, நிமிர்ந்து பார்த்தவன் கண்டுகொள்ளாமல் மீண்டும் பைலில் மூழ்கினான்.
"மாமா" என மெல்ல அழைத்தாள் .
பதில் ஏதும் வராததால், மீண்டும் அவளே, "ஏன் மாமா இவ்வளவு நேரம்?" எனக்கேட்டாள்.
"கொஞ்சம் வேலைடா" என அவளை நிமிர்ந்து பார்க்காமலேயே பதிலளித்தான் மகிழன்.
"ஏன் என்னை அவாய்ட் பண்ணுரீங்க? என குரல் உடைந்து மது கேட்க அவளை நிமிர்ந்து பார்த்தான்.
கண்களிலிருந்து எப்போது வேண்டுமென்றாலும் கண்ணீர் கரையுடைக்க காத்திருந்தது.
"இரு நான் முகம் கழுவிட்டு வரேன்" என்று அவள் குளியலறை சென்று திரும்ப,
இவன் மீண்டும் பைலில் ஆழ்ந்திருந்தான்.
"என்ன திரும்ப வந்து இங்க உட்கார்ந்துட்ட?" எனக் கேட்டாள் மது.
"நாளைக்கு சைன் பண்ண வேண்டிய அக்ரிமெண்ட் பார்த்துட்டு வந்துடுறேன். நீ கு" என்றான் மகிழன்.
"என்ன பண்ற மாமா?" எனக்கேட்டாள்.
"உன் மனசுல என்மேல் நம்பிக்கை வர்ற வரைக்கும், நான் இங்கேயே படுத்துக்கிறேன்” என்றான்.
"நீ பெருசு பண்ற மாமா"
"நான் பெருசு பண்றேன்னா?" என கோபமாகக் கேட்டான் மகிழன்.?"
"நான் என்ன சொன்னாலும் நீ உன் எண்ணத்தை மாத்திக்க போறது இல்லை. உன்கிட்ட இத பத்தி பேசுறதே வேஸ்ட்" என்றவன் கீழேயே படுத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டான். நடு இரவில் கண் விழித்த போத, மது
அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள். இவன் அவனுடன் கீழேயே அசையவும் அவளும் உறக்கம் கலைந்து கண் திறந்தாள்.
அவள் கையை தன் மீதிருந்து பிரித்தெடுத்தவன் "மேலே போய் படு" என்றான்.
அவள், அவன் சொல்வதை சட்டை செய்யாமல் மீண்டும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு உறங்க முற்பட்டாள்.
"மது..... ப்ளீஸ் என்ன படுத்தாதே" என்றான் மகிழன்.
"என்ன படுத்துறேன்?" என கண்களை திறக்காமலேயே கேட்டாள் மது.
"நீ இப்படி படுத்தா எப்படி தூக்கம் வரும்?'
எனக்கு இப்ப எல்லாம் தனியாக படுத்தால் தூக்கம் வரல.
மது அந்த நொடி உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது. தான் காட்டிய அன்பும் காதலும் பொய்த்து போன உணர்வு. தான் ஏமாற்றப்பட்டதாகவே உணர்ந்தாள். ஏமாற்றத்தை விடப் பெரிய வலி வேறேது?
தன்னை விரும்புவதாக தேடி வந்து திருமணம் செய்தவன், அன்றைய நெருக்கம் அவனுக்கு நினைவில் இருக்க வேண்டும் அதில் தன் நேசத்தை உணர்ந்து தன் மீது அவனும் நேசம் கொண்டதாக எண்ணியிருந்தாள். தானோ நடக்க இருந்த திருமணத்தையே நிறுத்திவிட, அவனோ வேறு பெண்ணனோடு திருமணம் வரை சென்றுள்ளான்.
வருணாவிற்காக என வந்து கேட்டிருந்தாள் கூட அவள் மீது கொண்ட நட்போடும் அவன் மீது கொண்ட காதலோடும்
ஏற்றுக்கொண்டிருப்பாள், ஆனால் நேசம் என்று சொல்லி அவளுள் பல எதிர்பார்ப்புகளை விதைத்தது இன்று மொத்தமாக ஏமாற வைத்து விட்டானே என நினைக்கும் போது இதயம் வெடித்துவிடும் அளவிற்கு வலித்து. இத்தனை மாதங்களில் தன்னை நெருங்காதிருந்ததிற்கு வருணா நலமடைய காத்திருக்கிறான், அதன்பின்னே தங்கள் வாழ்க்கை குறித்து யோசிப்பான் என்றே எண்ணியிருக்க அவனுக்கோ தன் மீது ஈர்ப்பில்லை.
அவன் வாழ்வில் வருணாவிற்கு பிறகு அவள் என்ற போதும் ஏற்றுக்கொள்ள முடித்தது ஆனால் வருணாவிற்காக அவள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்த போதும் வருணா அழைக்கத் தவிர்க்க மனமின்றி கிளம்பி வந்துவிட்டாள்.
மது திரும்பி வந்ததிலிருந்து அவளிடம் காணும் மாறுதல்கள் ஏனென்று தெரியாது மகிழனை வதைத்தது. ஒரே அறையில் இருந்த போதும் காதல் இல்லாத ஒரு விலகளை உணரச் செய்தாள். அறைக்குள் மட்டுமல்ல வெளியிலும் அவள் தேவைகளை பார்த்து செய்தவள் இன்று விலகி விலகிச் சென்றாள். கடமையே என்று அவள் பரிமாறும் உணவு தொண்டை தாண்டி இறங்க மறுத்தது. மது அவனிடம் அதிகம் பேசுவதில்லை தான் ஆனால் இப்போது முற்றிலும் மௌனமாகி விட்டாள். அதிக நேரங்கள் அவன் தாயுடன் இருந்தாள்.
************
மாலையில அவள் அத்தை சொல்லிச் சென்ற அறிவுரைகள் எல்லாம் ஒரு நொடியில் நினைவில் வர, கால்கள் தான் நடக்கிறதே தவிர இதயம் விண்வெளியில் பயணித்துக் கொண்டிருந்தது. தன்னறை தான் ஆனால் உள்ளே செல்வதற்கு சிறு தயக்கம்!
கதவைத் தட்டிவிட்டு உள்ளே வர, மது புத்தகம் ஒன்றை வெகு தீவிரமாக வாசித்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தான் ரிஷி. சில நொடிகள் கடந்த பின்னும் அவன் நிமிர்ந்து பாராது போக, அவள் மனம் வாடியது.
லக்கேஜ் பேக்கை எடுத்தவள் தனது உடைகள், உடமைகளை அடுக்கத் தொடங்கினாள். ஓசை எழும்படி அனைத்தையும் தட் தட்டென்று எடுத்து வைக்க, அதில் கவனம் கலைந்தவன் நிமிர்ந்துப் பார்த்தான்.
“ஹே மது எப்போ வந்த? நான் கவனிக்கவே இல்லை" என்றவாறு ரிஷி புத்தகைத்தை மூடி வைத்துவிட்டு எழ, "இப்போ தான் வந்தேன்" என்றவள் தன் வேலையை கவனிப்பது போலே திரும்பிக் ண்டாள்.
எண்ணங்களோடே மாடி ஏறி வந்தவன், தோட்டத்தில் நின்ற தன் மனைவியைப் பார்த்து விட்டு அங்கே சென்றான். வீடே அமைதியாக இருந்தது.
கடல் வண்ணத்தில் ஒரு பட்டுப்புடவை உடுத்தி இருந்தாள். மெல்லிய ஊதா வண்ண பார்டரும், அதே நிறத்தில் ப்ளவுஸும் கனகச்சிதமாகப் பொருந்தி இருந்தது. ஆபரணங்கள் எதையும் களையாமல், கூந்தலை மட்டும் அவிழ்த்து விட்டிருந்தாள். இடையைத் தழுவி நின்ற அந்த மெல்லிய ஒட்டியாணம் அபியின் பொறாமையை தூண்டி விட்டது.
சமையல் முழுவதையும் பார்வதியே பார்த்துக் கொள்வார். நாட்கள் போக போக, மதுவுக்கு அந்த வாழ்க்கை பழகிப் போனது.
அவன் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்பதையே கொஞ்ச நாட்கள் கழிந்த பின் தான் உணர்ந்தாள்.
காலையில் அவனது முதல் வேலை வீட்டுக்கு அருகிலிருந்த ஜிம்முக்கு போவதுதான் என்பதையும் தாமதமாகவே தெரிந்து கொண்டாள். மது எழ ஏழாகிவிடும். எழுந்து, கொஞ்சம் யோகா செய்துவிட்டு கையில் காபியோடு தோட்டத்தை சுற்றி வரும் போதுதான் மகிழன் ஜிம்மிலிருந்து வருவான்.
ஒரு மனைவியாக அவனுக்கு தன்னை கொடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு நாளாக நாளாக வலியாக மாறியது, அவனிடம் அவள் பேச யோசித்ததெல்லாம் கூட நடந்தது.
ஆனால் அவன் அப்படி விடாமல், ஜிம்மிலிருந்து வந்த கையோடு,
"குட் மார்னிங் மதுக்குட்டி..” என்று எப்போதும் போல ஆரம்பித்து,
"நல்லா தூக்கம் போல என்று கண்ணாடித்துக் கேட்க. முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.
என்னடா அமைதியா இருக்க?" என்று கேட்க,
"ஒண்ணுமில்ல மாமா.." என்பதையே அத்தனை தயக்கத்தோடு தான் கூறினாள்.
"கேசுவலா இருடா..." என்று அவளது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றான்.
உள்ளே சென்ற மகிழனையே பார்த்துக் கொண்டு நின்றாள் மது. இவரால் எப்படி இவ்வளவு எளிதாக எடுத்துக்க முடியுது?
காலையில் கொஞ்சம் பேச்சு, இரவு அவன் வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் பேச்சு. ஏழரை மணிக்கு அவன் வந்தானென்றால்,
அந்த அடமும் பிடிவாதமும் கோபமும் சில நேரங்களில் மகிழனால் சமாளிக்க முடியாத அளவுக்குப் போகும்.
ஆனால் மகிழனுக்கும் மதுவுக்குமான திருமண உறவில் எந்த முன்னேற்றமும் இல்லாதிருந்தது... இருவரும் நல்ல தோழமையோடு இருந்தனர், இணைந்து வெளியே செல்வது, விருந்துக்கு போவது என்று ஜோடியாக சேர்ந்தே வலம் வந்தாலும், கணவன் மனைவிக்கான நெருக்கம் இல்லை.
மகிழன் கலகலப்பாக இருப்பது போல வெளிப்பார்வைக்கு தெரிந்தாலும் உள்ளுக்குள் அவனது ஏமாற்றமும் வலியும் யாருமே உணராத வண்ணம் மிகத்திறமையாக மறைத்து வந்திருந்தான்...
சொல்லி இருந்தால் நிச்சயமாக அவள் புரிந்து கொண்டிருப்பாள். இருந்தாலும் அவனுக்குச் சொல்லப் பிடிக்கவில்லை.
பேசிப் புரியவைத்து, சமாதானப்படுத்தி தன் தாம்பத்ய வாழ்கையை தொடங்க அவனுக்கு விருப்பமில்லை.
“ம்ம்ம்... சொல்லுங்க மாமா என்ன சொல்லி உங்களை நியாயப்படுத்தி கொள்ள முடியும்? முடியாதல்லவா..."
உடைந்த குரலில் கேட்டு கொண்டிருந்தவளை கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டே இருந்தவன்...
அவனோடு வாழ மனதின் குழப்பங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவனைப் பிடித்தது. பைத்தியக்காரத்தனமாய்ப் பிடித்தது. கணவனை அந்தளவுக்கு நேசித்தாள் மது. அவனும் அவளை அப்படி நேசிக்கிறானா என்பது தான் அவளது குழப்பத்துக்கு முக்கிய காரணம்.
திருமணத்துக்கு முன்பும், பின்பும் அவன் மட்டும் தான் அவள் இதய நாயகன். ஆனால் அவன் அப்படி இல்லையே. இன்னொரு பெண்ணை நிச்சயம் செய்ய பார்த்திருக்கிறான். அப்படி இருக்கும்போது அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பு எப்படித் தூய்மையானதாக இருக்க முடியும். இருவருக்கும் இடையில் இருக்கும் வெறுப்பு மட்டுமல்ல அதீத காதலும் கூட வலியை ஏற்படுத்தும்.
மனக்குழப்பங்களை மனதிலேயே போட்டு மறைத்து வைத்திருந்தாள்.
மாமன் மனதில் தான் மட்டும் தான் இருக்கிறோமா? என்ற கேள்வி ஒருபுறமும் “ நான் மட்டும் தான் இருக்க வேண்டும் " என்ற தீராத எண்ணம் ஒருபுறமும் “ஒரு வேளை அப்படி இல்லாவிட்டால் “ என்ற பயமும் சேர அவள் மிகவும் அலைப்பாய்ந்த மனதுடனே சுற்றினாள்.
பல நாட்கள் இரவில் மகிழன் வரும் முன்பே மது உறங்கிவிடுவாள்
அவள் கோபமாக இருப்பதை உணர்ந்தவன், அவளை விடுவித்தான்.எழுந்து சென்று பால்கனி கதவருகே நின்றவன்,கைகளைக் கட்டிக் கொண்டு மனைவியை ஆழமாய்ப் பார்த்தான்.
கண்களில் கலக்கம் சூழ, உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. முகமெல்லாம் கோபத்தில் சிவந்திருந்தது. எதுவாகினும் பேசி தீர்த்து விட முடிவு செய்து,
“உனக்கு என்னை என்ன கேட்கனும்னாலும் கேளு மது,
தயவுசெய்து மனசுல போட்டு குழப்பிக்காத.என்னை திட்டனும்னு தோணினாலும் திட்டிக்கோ. அடிக்கனுமா அடிச்சிக்கோ.ஆனா இப்படி இருக்காத..நீ நீயா இரு.இப்படி அமைதியா இருந்து என்னைப் படுத்தி எடுக்காதடி. எதுனாலும் பேசுடா..” என அமைதியாக ஆரமபித்தன் "எதுவா இருந்தாலும் நீ நேருக்கு நேரா கேளு. நான் உன்னோட கணவன்.
“அது எப்படி உங்களால எதுவும் நடக்காத மாதிரி எங்கிட்ட நடந்துக்க முடியுது. அதுவும் இப்படி இழையுறீங்க கட்டிப்பிடித்து
ஹர்ஷா மிகவும் எதார்த்தவாதி. கிடைப்பது வைத்து மகிழ்ச்சியடையவே அவனது அன்னை போதித்திருந்தார். ஆகையால் தான் பூமிஜா இல்லையென்றாலும் அவனால் இயல்பாக ரவீணாவை ஏற்க முடிந்தது.இதை அவளிடம் சொன்னால் கண்டிப்பாக தாங்க மாட்டாள். கோபம் கொள்ளுவாள்.ஆனால் அவன் மனைவி பேசுவதை நினைத்து அவனால் கோப்பட முடியவில்லை.மாறாக சிரிப்புதான் வந்தது.அவனுக்கென்ன பூமிஜாவைப் பார்த்தவுடன் மனதில் பட்டாம்பூச்சி பறந்ததா என்ன?
அவள் முகம் பார்க்க அதுவோ யோசனையில் இருக்க,
“உனக்கு ஒரு வாரம் டைம். தட்ஸ் இட்...இப்போ நான் தூங்குறேன்..நீ நல்லா யோசி..என்னோட விளக்கத்தை நான் சொல்லிட்டேன்.நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்.இதுக்கு மேல எங்கிட்ட சொல்ல ஒன்னுமில்லை.இனிமே சொல்லனும்னா பொய் தான் சொல்லனும்..குட் நைட்” என்றவன் மெத்தையில் போர்த்திக் கொண்டு படுத்து விட்டான்.
நடு ஜாமத்தில் கண்விழித்த அபி, தன்னருகில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்தபடி இருந்தான். அவள் நிலையை நினைத்த போது கொஞ்சம் வேதனையாக இருந்தது. தடாலடியாக நடந்த நிகழ்வுகள் அவளை எத்தனை தூரம் பாதித்திருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. வீட்டை விட்டு, வீட்டு மனிதர்களை விட்டு திடீரென்று இன்னொரு வாழ்க்கைக்குள் தள்ளிவிட்டால், பாவம் அவளும் தான் என்ன செய்வாள்?
அவள் இழந்த அத்தனையையும் தன்னொருவனால் ஈடுகட்ட முடிந்தும், அவள் தயக்கத்திற்கு மதிப்பளித்தே விலகி நின்றான். ஆனால் அந்த இடைவெளி அதிகமாவதை அவன் விரும்பவில்லை. முடிந்தளவு தன் காதலை, தன் தேடலை அவளுக்கு உணர்த்த நினைத்தான்.
“எங்கிட்ட எதையாவது சொல்ல முடியாமால் உன்னை நீயே கஷ்டப்படுத்துற?" அவளிடமிருந்து மெதுவாக விடுபட்டு அந்தக் கண்களை இமைக்காமல் பார்த்தான் மகிழன்.
"எதுவும் இல்லை மாமா, எந்த விஷயமாவது என்னோட மாமாவை காயப்படுத்தினால் அது உங்க வரைக்கும் வர வேணாம்னு நினைக்குறேன், சில விஷயங்கள் உங்க காது வரைக்கும் வர தகுதி இல்லாம போகுதே, அதை நான் என்ன பண்ண?"
அயர்ந்து தூங்கும் தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தான் அபி. நேற்றைய இரவு கண்முன் நிழலாடியது. அவன் ஆசைகள் அனைத்திற்கும் மறுப்புச் சொல்லாமல் அடிபணிந்திருந்தாள். அத்தனை சுலபத்தில் தன் மனையாள் தன்னோடு கை கோர்ப்பாள் என்று அபி எதிர்பார்த்திருக்கவில்லை. சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான்.
அந்தப் பெண்ணின் மேல் தனக்குக் காதல் இருப்பது போல, அவளுக்கும் தன்பால் ஒரு ஈடுபாடு உண்டென்று அபிக்குத் தெரியும். அந்த ஈடுபாடு காதலாக மலரு முன்னமே அவளைக் கைப்பிடித்தது தான் அவளின் ஆதங்கம். அந்த ஆதங்கத்தை நிவர்த்தி செய்ய, தான் ரொம்பவே போராட வேண்டி இருக்கும் என்று அபி கவலைப் பட்டிருந்தான்.
ஆனால், அவன் கவலை அனாவசியம் என்று சொல்லாமல் சொல்லி விட்டாள் கீதாஞ்சலி. 'அவளின் மேல் தனக்கு இத்தனை பித்தா?' என்று நேற்று வரை அபியும் அறிந்திருக்கவில்லை.
அன்றைக்கு இரவு உணவின்போது அத்தனைப் பேரும் டைனிங் டேபிளில் கூடி இருந்தார்கள். அன்றைய பொழுது முழுவதும் அக்கா தம்பியிடம் பேசவில்லை. மகிழனுக்கு தன் அக்காவின் கோபம் புரிந்தாலும் எதுவும் பேசாமல் அமைதி காத்தான். இப்போது எது பேசினாலும் தேவையில்லாத மனஸ்தாபமே விளையும்.
பார்வதியும் அமைதியாக இருந்தார், அதை கண்ட மகிழன், "நாளைக்கு நாங்க திருச்சி போறோம்..." என்றும் அறிவிக்க,
"இதெல்லாம் உனக்கே நல்லாருக்காடா தம்பி?" என்று கேட்டார் தாமரை
"இதுல என்னக்கா நல்லா இல்ல?"
மறுவீட்டு அழைப்பு முடிஞ்சதும் உடனே கிளம்பி போன இதென்ன உனக்கு பிடிக்காத சம்மந்தி வீடா?" சொந்த பந்தம் எல்லாம் என்ன நினைப்பார்கள்.
"சொந்தங்களை எல்லாம் அழைத்து கறிவிருந்து போடணும்... குலதெய்வ கோவிலுக்கு போய் பொங்க வைக்கோனும்... அழைப்பு விடுத்த பங்காளிங்க வீட்டுக்கு எல்லாம் நீங்க விருந்துக்கு போவணும்.. தாமரை புலம்பினார்
"ஐயோ.. இதெல்லாம் முடிய ஒரு வாராத்துக்கு மேல ஆகுமே?"
"ஒரு வாரத்துல எப்படி தம்பி முடியும்? ஒரு பத்து நாள் வீட்ல இருந்து மதுவ அங்கயிங்க கூட்டிட்டு போப்பா..." என்று அவர் பொறுமையாக எடுத்துக் கூறுவதாக நினைத்துக் கொள்ள,
அதுவுமில்லாமல் மது எடுக்கும் முடிவு தான் தன் முடிவு என்கிறானே... அவளுக்கு இதில் என்ன முடிவெடுக்க தெரியும் என்ற குழப்பம் அந்த இருவருக்கும்.
விதி விட்ட வழி... என்று பெருமூச்சு விட்டவர்கள், அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை.
பத்து நாட்களில் அனைத்து விசேஷங்களையும் முடித்துக் கொண்டு பதினோராவது நாள், மதுவையும் அழைத்துக் கொண்டு திருச்சி சென்று விட்டான், உடன் வர இருந்தவர்களையும் மறுத்து விட்டு!
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்த நிலையில் மது சூழ்நிலையோடு பொருந்திக் கொள்ள துவங்கினாள்.
நாட்கள் போக போக, அவளுக்கு அந்த வாழ்க்கை பழகிப் போனது.
அவன் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுவதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்பதையே கொஞ்ச நாட்கள் கழிந்த பின் தான் உணர்ந்தாள்.
காலையில் அவனது முதல் வேலை வீட்டுக்கு அருகிலிருந்த ஜிம்முக்கு போவதுதான் என்பதையும் தாமதமாக தான் தெரிந்து கொண்டாள்.
சுற்றிலும் தோட்டத்தோடு கூடிய அழகான வீடு. மது எழ ஏழாகி விடும். எழுந்து, கொஞ்சம் யோகா செய்துவிட்டு கையில் காபியோடு தோட்டத்தை சுற்றி வரும் போதுதான் பார்த்தி ஜிம்மிலிருந்து வருவான்.
ஆரம்பத்தில் அவள் பேச யோசித்ததெல்லாம் கூட நடந்தது.
ஆனால் அவன் அப்படி விடாமல், ஜிம்மிலிருந்து வந்த கையோடு,
"குட் மார்னிங் மதுக்குட்டி..." என்று எப்போதும் போல ஆரம்பித்து,
"நல்லா தூக்கம் வந்துச்சா? மாத்திரை ஒழுங்கா சாப்ட்றியா? கிளாஸ்லாம் எப்படி போகுது?" என்று வரிசையாக கேட்பான். முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தது. வாய்ப்பூட்டு திறவாமல் சண்டித்தனம் செய்தது.
அதற்கும், "மது... இது நீயா? ஒரு செக்கண்ட்க்கு நூறு வார்த்தை பேசுவ... இப்ப என்னடா இப்படி அமைதியா இருக்க?" என்று அதற்கும் கிண்டலாக கேட்க,
"ஒண்ணுமில்ல மாமா..." என்பதையே அத்தனை தயக்கத்தோடு தான் கூறினாள்.
அவன் எகிறியது எல்லாம் தாயிடமும் அவனது தமக்கையிடமும் மட்டும் தான். அவளிடம் ரொம்பவும் பார்த்து பார்த்துத்தான் பேசுகிறான் என்பதும் அவளுக்கு புரிந்தது.
"கேசுவலா இருடா..." என்று அவளது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு வீட்டுக்குள்ளே சென்றான்.
உள்ளே சென்ற மகிழனையே பார்த்துக் கொண்டு நின்றாள் மது.
காலையில் கொஞ்சம் பேச்சு, இரவு அவன் வீட்டிற்கு வந்ததும் கொஞ்சம் பேச்சு. ஏழரை மணிக்கு அவன் வந்தானென்றால்,
"ம்ம்.. இன்னைக்கு என்ன மேடம் நடந்தது?" இரவுணவை எடுத்துக் கொண்டு சோபாவில் அவளருகே அமர்ந்து, அன்று நடந்த அத்தனையும் ஒப்பிக்க செய்து விடுவான்.
"கொஞ்சம் டயர்ட்டா இருந்துது மது... அதான் வந்துட்டேன்..." என்று கொட்டாவி விட்டவனை பார்க்கும் போது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
தேவையா இவருக்கு? எதற்காக ஓடியோடி இப்படி உழைக்கிறார்? தன்னால் தானா? அவளது மனதில் எப்போதும் தோன்றும் கேள்வி.
மேஜை மேல் ஹாட்பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள், அதை விடுத்து, அவனருகில் வந்து, "உடம்பு சரியில்லையா?" என்று கேட்டபடி அவனது நெற்றியில் கை வைத்துப் பார்க்க, அவளது கையை விலக்கி விட்டான்!
"ஒண்ணுமில்ல மது... ஜஸ்ட் கொஞ்சம் டயர்ட்... அவ்வளவுதான்..." என்று கூற, அவனை முறைத்துப் பார்த்தாள் மது!
"ஏன்? இப்ப நான் தொட்டுப் பாக்க கூடாதா?" அவளது கையை விலக்கிய அவனது செய்கையை கண்டு அவளுக்கு கோபமாக இருந்தது.
புன்னகைத்தான்.
"நீ கவலப் படற அளவுக்கு எல்லாம் பெரிய விஷயமில்ல... போய் டிபன் எடுத்து வை மது... பசிக்குது..." என்று அவளை அனுப்ப முயல, அவனை முறைத்தபடியே மேஜையை நோக்கிப் போனாள்.
"ஏன்? நான் தொட்டுப் பார்த்தா என்ன? காய்ச்சலா இருக்கான்னு தான பாக்கறேன். ரொம்ப பண்ணாதீங்க மாமா..." தொம் தொம் மென்று பாத்திரத்தை வைத்தபடியே கத்த,
‘அடப்பாவி... என்னது?' ஜெர்க்கானது அவனுக்கு! பேசாமல் புன்னகையோடு மேல் பார்வையாக அவளை பார்த்தபடி, இன்னொரு கண்ணை ஸ்க்ரீனில் வைத்திருக்க, அவளது எரிச்சல் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
"கத்திட்டு இருக்க நான் என்ன லூசா?"
"அது எனக்கு எப்படி தெரியும் மதுக்குட்டி?" கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கூற, கரண்டியை எடுத்துக் கொண்டு அவன் முன்னால் வந்து நின்றாள் காளி தேவியாக!
"அடியே... நான் ஒழுங்கா தான இருக்கேன்?" என்று வலியில் கத்த,
"லொள்ளு பேச மாட்டேன்னு சொல்லுங்க..." இன்னும் கொஞ்சம் சேர்த்து ஆட்ட, சட்டென, மதுவின் கையை இறுக்கமாக வளைத்துப் பிடித்தவன், முதுகொடு இழுத்து அணைத்தபடி அவளது கைகளை சிறை செய்தான்.
ஒரே நொடியில் நிகழ்ந்து விட்ட இந்த நிகழ்வில் அதிர்ந்தாள் மது!
வம்பிழுப்பதும், வழக்காடுவதும்
திருமணத்துக்கு பின் எப்போதும் நிகழும்
நிகழ்வென்றாலும் இந்த நெருக்கம் புதிது.
அதிர்ந்து விழித்தவளின் கண்களை பார்த்தவன், அவளது கைகளை விட்டுவிடாமல்,
“இப்ப என்ன சொல்ல வர்ற?" என்று கேட்க, உடல் நடுங்க எச்சிலை விழுங்கினாள் மது.
"இ... இல்ல... எ... என்ன சொல்ல?" திணற, அவளது அந்த திணறலை ரசித்துப் பார்த்தான்.
"என்னமோ சொல்லிட்டு இருந்த?" அவளை
"என்னமோ சொல்லிட்டு இருந்த?" அவளை விடாமல் கேள்வி கேட்க, அவன் என்ன கேட்கிறான் என்பதே மறந்து போனது மதுவுக்கு!
“என்ன?” என்று சத்தமாக யோசித்தாள். எதற்காக அவனிடம் கத்திக் கொண்டிருந்தோம் என்பதே மறந்து போய் இருந்தது.
"என்ன... என்ன?" வேண்டுமென்றே தான் அவளிடம் வம்படித்துக் கொண்டிருந்தான். அவனது கேலி புரியவும், தன்னை சுதாரித்துக் கொண்டு,
"ஒண்ணுமில்ல..." என்று உதட்டை வளைக்க,
"ஒண்ணுமில்லாமயா இவ்வளவு நேரம் கத்தின?" என்று புன்னகையோடு சற்று நிறுத்தியவன், "பொண்டாட்டி..." என்று முடிக்க,
"அடடா... அதிசயம் தான்.." இப்போது கேலி செய்வது அவளது முறையாயிற்று, அதுவும் அவனின் கைவளைவில் நின்று கொண்டு தான்.
“என்ன அதிசயம்?"
“இல்ல... என்னை உங்க பொண்டாட்டின்னுலாம் ஞாபகம் வெச்சு இருக்கீங்கல்ல.. பெரிய விஷயம் தான் மாமா..." உண்மையில் அவளுக்கு சற்று வருத்தம் தான். அவனது மனைவியாக கடமையை செய்ய வேண்டும் என்ற உறுத்தல் சில நாட்களாக அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் அவளது தாயும் கூட!
அவருக்கு மகள் குடும்பம் நடத்தும் அழகை பார்த்து கன்னாபின்னாவென கோபம்! கோபம் தாளாமல் மகளை தனிமையில் கடியோ கடியென்று கடிந்து வைத்தார்
"என்ன மது... உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா?" எடுத்த எடுப்பிலேயே அவர் இப்படி கேட்கவும், முறைத்தாள் மது.
இதெல்லாம் உனக்கே நல்லாவா இருக்கு?"
"ம்மா.. சொல்றதை தெளிவா சொல்லும்மா..."
"நீயென்ன சின்ன பிள்ளையா மது?"
"ஷப்பா... முடில..." அலுத்துக் கொண்டாள் அவள்.
"உங்க ரெண்டு பேருக்குள்ளும் ஒன்னுமே இல்லையா டி ?" கோபமாக அன்னை கேட்க, மது பதில் கூறத் தெரியாமல் விழித்தாள். “என்ன மது... பதிலே பேச மாட்டேங்கிற?" அதற்கும் இடி வாங்கினாள்.
உண்மையில் பார்த்திபனுடனான இந்த வாழ்க்கை இதுவரை அவளுக்கு எளிதாக இருந்தது ஆனால் சில நாட்களாக உறுத்தல்! எரிச்சலில் இருந்தவளுக்கு தாயின் குத்தல் மொழிகளை கேட்டு இன்னமும் எரிச்சலாக இருந்தது.
"இப்ப என்ன பண்ணனுங்கற?"
"நான் என்ன சொல்றது? யாரோ எப்படியோ போறாங்க, இப்படியே தத்தி மாதிரி இருந்து உன்னோட வாழ்க்கைய வீணாக்காத மது. அதை தான் நான் சொல்ல முடியும்.."
ரொம்பவுமே எரிச்சலாக இருந்தது.
"சரிம்மா எதுவும் கேக்கல... நீயும் இப்படியே இரு... அவனும் இப்படியே இருக்கட்டும்... ரொம்ப அழகா விளங்கிரும் குடும்பம்..."
அவர் கடுப்படித்தது இன்னமும் அவளை மிரட்டிக் கொண்டிருந்தது! அவனை நெருங்க எது தன்னை தடுக்கிறது என்பது புரியவில்லை.
"அதனால தான் வெப்பன்ஸ தூக்கிட்டியா?" என்று சிரித்தபடி கேட்டவன், அவளை தன்னிலிருந்து பிரித்தபடி,
"சாப்ட்டுட்டு போய் சீக்கிரம் படுடி.. லேட்டாகுது..." என்று தட்டை நோக்கிப் போக, அவனை எரிச்சலாக பார்த்தாள்.
“அது எனக்கு தெரியும்...” கடுகடுவென்று கூறியவள், அதே கடுப்பில் இரவு டிபனை முடித்து விட்டு அறையை தஞ்சமடைந்தாள்..
தங்தங்கென்று அதிர்ந்து நடந்தபடி சென்ற அவனது மனைவியை பார்க்கையில் அவனுக்குள் ஏதோவொரு சொல்ல முடியாத உணர்வு. அதிலும் அவனது கைவளைவிற்குள் நின்றவளை பார்த்தபோது அந்த உணர்வு உச்சத்தை எட்டியிருந்தது.
*************
"அப்ப எல்லாம் உன்னை ரொம்ப தேடும் மது. மனசும் உடம்பும் உனக்காக தவிக்கும். உன்னை நேர்ல பாத்த உடனே எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா. வாழ்க்கையிலே அப்படி நான் சந்தோசமா இருந்ததே இல்லை டி. உன்னை பாக்க அப்படி துடிச்சேன். நீ எங்க இருக்கன்னு கூட எனக்கு தெரியாது. அவ்வளவு பெரிய திருச்சியில் நான் எப்படி தேடுவேன். கடைசி வர உன்னை பாக்க முடியாது, உன்னோட நினைப்புல வாழனும் தான் முடிவு பண்ணி வச்சிருந்தேன்.
உன்னை பாத்ததும் என் கண்ணையே என்னால நம்ப முடியலை தெரியுமா", என்றான்.
"மஹாவுக்கு எப்படி தெரியும் மாமா?"
"ஹ்ம்ம் ஒரு தடவை என்னை அறியாமலே சொல்லிருக்கேன் போல? அவ தான் அன்னைக்கு ஹோட்டளுக்கு உன்னை பாக்க பிளான் பண்ணி கூட்டிட்டு வந்தா"
“மஹா சரியான வாலு மாமா, "
"ஹ்ம்ம் ஆமா நிறைய பண்ணுவா. உன் போட்டோவெல்லாம் சுட்டுட்டு வருவா"
"அவளுக்கு இருக்குற ஆசை கூட உங்களுக்கு இல்லை போங்க"
"என்னோட ஆசையோட அளவை என் கண்ணு உனக்கு சொல்லலையா?
தெரியுது தெரியுது திருட்டுத்தனமாக பார்க்கிறது
நினைவு இல்லையாடி”, என்று கேட்டவனின் உதடுகள் அவள் கழுத்தில் ஊர்வலம் போனது. அவன் தொடுகையில் சிலிர்த்தது அவள் தேகம்.
"இப்படி எல்லாம் உன்னை நெருங்கி இருக்கணும்னு தோணும் டி. ஆனா நீ என்ன மன நிலைல இருக்கன்னு தெரியாது, அதனால தான் விலகியே இருந்தேன்", என்று சொல்லி கொண்டிருந்தவனை அவளும் இறுக்கி அணைத்து கொண்டாள்.
அவள் மேனியில் பதிந்த அவனுடைய கை எல்லை மீற ஆரம்பித்த போது "அத சொன்ன மகிழனின் வாயை விரலால் மூடினாள் மது.
அவள் கையை விலக்கி விட்டு "அன்னைக்கு வேற மாதிரி இருந்த. ஆனா இப்ப எல்லாமே வேற மாதிரி இருக்க்..", என்று சொன்னவனின் உதடுகள் அவள் உதடுகளால் சிறை பட்டது.
அதில் அவன் வேகமும் கூடியது. மொத்தமாக அவளை ஆக்கிரமித்து விட்டு தான் விலகினான். களைப்புடன் அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் நெற்றியில் முத்தமிட்டான் மகிழன்.
“நீங்க மட்டும் என்னவாம்? பெரிய மீசை எல்லாம் வச்சு, அழகா கம்பீரமா மாறிட்டிங்க. சரியான முரடு ", என்றாள் மது.
அவனை பார்த்து முறைத்தவள் "இன்னும் அதிகமா டீல் பண்ணா தாங்காது பாஸ். அப்புறம் என்னை மறுபடியும் பாத்த அப்புறம் நான் தான்னு கண்டு பிடிச்சிடீங்களா?", என்று கேட்டாள்.
"அது எப்படி மது கண்டு பிடிக்காம பேன். உருவம் மாறலாம். ஆனா உன் முகம் எப்படி மறக்கும். அப்ப
சாரிடா மது என்னால ரொம்ப கஷ்ட பட்டிருப்பல்ல. உன் வாழ்க்கையையே கெடுத்துட்டேன். என்னால நீ தான் அத்தை மாமா கிட்ட அசிங்க பட்டிருப்ப.?"
"இல்லை, அழுதுட்டே இருப்பேன். செத்துரலாம்னு இருக்கும். அம்மா கொஞ்ச நாள் ஆறுதலா இருந்தாங்க. அம்மாக்கு என் மனசு தெரியும் இத்தனை வருசம் நான் தைரியமாக இருக்க காரணம் அம்மா தான். "ஒரு நிமிடம் மாமா' என்று எழுந்து சென்றவள் நிலைமாடம் திறந்து ஒரு பேனாவை எடுத்து வந்தாள்.
"இந்த பேனா நினைவு இருக்க மாமா
மகிழன் இல்லை என்று உதட்டை சுளித்தான்.
நான் டென்த் படிக்கும் போது நீங்க வாங்கி கொடுத்தது. உங்க மேல ஆசை வந்தபின் வாங்கித்தந்த முதல் கிப்ட், அது நீங்க என் கூடவே இருக்குற மாதிரி இருக்கும்" உங்களுக்கு எதுவுமே நினைவு இல்லையா மாமா..
அவள் சிணுங்கி, செல்லம் கொஞ்சி ஆசை ஆசையாக சொல்லும் காதல் கதையை அப்பாவியாய் கேட்டு ரசித்த அந்த காதல் கள்வன்.அவளை இறுக்கி அணைத்து அவள் முகமெல்லாம் முத்தத்தை பதித்தவன்" மேலும் முன்னேற...சற்றென்று அவன் மூக்கை கடித்து வைத்தாள் அவள். அவனுக்கு வலித்துவிட சட்டென்று முகம் மாறியவன், பின் சிரித்து கொண்டே "ஏய் லூசு வாலிக்குதுடி" என்றான்.
ஏன் மாமா சின்ன வயசுல நடந்தது எதுவுமே உனக்கு நினைப்பு இல்லையா? வீட்ல தங்குறது, நாம சண்டை போட்டது, நான் முதன் முதலாக உங்களுக்கு டீ போட்டுத் தந்தது, அம்மாவுக்கு சமையலில் புதுசா நீங்க ஏதோ ரெசிப்பி சொல்லி கொடுத்தது.
அந்த தருணம் அழகானது மது, அதை என்னால எப்படி மறக்க முடியும். மறக்க கூடிய நாட்களா அது.
உங்க கையெழுத்து குண்டு குண்ட அழகா இருக்குன்னு நான் சொன்னதும். என்னையும் அதே போல எழுத வச்சது. இப்பவும் நீங்க சொல்லி தந்த எழுத்து வடிவம் தான் மாமா.
கலீல் ஜிப்ரான் "முறிந்த சிறகுகள்' புத்தகம் ஞாபகம் இருக்க
****************
அவர்கள் அறையை விட்டு சென்றதும், மனைவியை ஆரத்தழுவிக் கொண்டான். எதிர்பாராத மகிழன் இந்த செயல் முதலில் தடுமாற்றம் தந்தாலும், பின் ஒருவாறு சமாளித்து நின்றாள் மதுநிலா.
"ஐ வில் மிஸ் யூ அம்மு.. மிஸ் யூ ஆல்", என்றான்.
காரில் ஏறும் கடைசி நொடி, மதுவின் கையை இறுக்கிப் பிடித்தான், "சீக்கிரம் வந்திடுறேன்”, என்று சொல்லி விடை பெற, அந்த நொடி.. அவளது மகிழன் அணைப்பையும், முத்தத்தையும் மதுவின் அனைத்து செல்களும் கேட்டது, மறுக்க முடியாத அந்த தவிப்பு அவளுக்கு மட்டுமே தெரிந்த வலி.
நாளை மதுவை அழைத்துச் செல்ல தாமரையும், சந்திரனும் வருகிறார்கள். ஆடி அழைப்பை மகிழன் விரும்ப வில்லை,
"அம்மா மதுவை அனுப்பனுமா" என்றான் தாயிடம்..
"சும்மா இரு தம்பி. எல்லத்திலும் விளையாட்டு கூடாது, உங்க பெரியாம்மாவுக்கு யாரு பதில் சொல்றது? நாளைக்கு அவங்க எல்லாம் வந்ததும் நாம அனுப்பித்தான் ஆகணும்"
"நானும் கூட போகலாமா?
பார்வதி முறைத்தார்...
"அப்போ ஒரு வாரம் கழிச்சுப் போகலாமா."
சும்மா இருக்க விடுடா என்னப் படுத்தாத எதுன்னாலும் உன் அக்காவிடம் கேட்டுக்க சொன்னவர் சமையல் அறைக்குள் நகர்ந்து விட்டார்.
மறுநாள் காலையில் சந்திரனும், தாமரையும் வந்துவிட்டார்கள்.
மகிழன் கடைக்கும் போகாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, தாய் அவனைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார். எப்போதும் காலையில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருப்பவன். இன்று சம்மந்தமே இல்லாமல் மேலேயும் கீழேயும் நடக்க.
"மகி கால் வலிக்க போகுது ஒரு இடத்தில் உட்கார் என்றார்.
"அம்மா' என்றான் கோபமாக
"இங்கயே இரு... போகாதேன்னு சொல்லலாம் தானே இவருக்கு என்னை விட்டுப் பிரியறதுல கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா?" என்று மனதிற்குள் குறைப்பட்டுக் கொண்டே, மது தாயுடன் புறப்படத் தயாரானாள்.
மது ஏதாவது சொல்வாள் என்பது போல மகிழன் அவளைப் பார்க்க, அவளோ அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். "அம்மா வீட்டுக்கு போறதுனால நம்மளைக் கண்டுக்க மாட்டேங்கறா பாரேன்...” மகிழன் தன் பங்கிற்கு சலித்துக் கொண்டவன்,
"மது.. ஒருநிமிஷம் மேலே வா..." என்று அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றான்.
அவளை தழுவிக் கொண்டவன் சிறிது நேரம் அமைதியாகவே நின்று, பின் அவளது கழுத்து வளைவு, கன்னம், நெற்றி என்று இதழ்களைப் பதித்துக் கொண்டே வந்தவன், “உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்? நீ இல்லாம இந்த வீட்டுல எப்படி இருக்கறது... இந்த ரூம் கூட என்னக்கு வெறுப்பா இருக்குமே... நீ இல்லாம தனியா இருக்கறது கொடுமை " வெளியில் அதை சொல்லாமல், மனதினில் மட்டுமே கவலையுடன் நினைத்துக் கொண்டு நின்றான்.
"ஒழுங்கா ரெஸ்ட் எடுத்துட்டு நல்லா சாப்பிடு மது... நான் தினமும் போன் பன்றேன்.." அவளிடம் சொல்ல,
"அது மட்டும் போதுமா மாமா... நான் உங்க கூடவே இருக்க வேண்டாமா? என்னை அனுப்பிட்டு நீங்க இங்க என்ன செய்வீங்க? உங்களால தனியா இருக்க முடியுமான்னு யோசிக்கத் தோணலையா? போகாதேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன்.." மது மனதில் மறுகிக் கொண்டே, அவனது அணைப்பில் நின்றிருந்தாள்.
என்னடா மது.. என்னாச்சு?" மகிழன் கேட்க, தலையை மட்டும் அசைத்தவள், அப்படியே நிற்க,
"அம்மா வீட்டுக்குப் போய் ஜாலியா இருக்கப் போற..." அவன் கிண்டலாகச் சொல்லவும், அவள் எதிர்ப்பார்த்த பதில் வராத கடுப்பில்,
"ஹ்ம்ம்... இனிமே நான் தனியா இருக்கேன்னு ஓடி ஓடி வர வேண்டாம். லேட்டா வந்தாலும் உங்களுக்கு ஒண்ணும் இல்ல... கடையை நல்லா பார்த்துக்கோங்க.” ஒருமாதிரிக் குரலில் சொல்லிவிட்டு, அவனிடம் இருந்து விலகி நடந்தவளைப் பார்த்து புன்னகைத்தவன்,
“அதை நான் பார்த்துக்கறேன்... நீ உடம்பைப் பார்த்துக்கோ.." மீண்டும் சொல்லிவிட்டு, அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
அம்மாவின் இழுப்புக்கு அவர் பின்னோடு போனவள் மகிழன்வை திரும்பிப் பார்த்தாள்.
பொம்மையைப் பறிகொடுத்த குழந்தையைப் போல மனைவியையே பார்த்திருந்தான் மகிழன்.
அவனிடம் மௌனமாய் தலையாட்டி விடைபெற்றவள் திரும்பித் திரும்பி மகிழனை பார்த்துக்கொண்டே சென்றாள், அவளின் அந்த பிரத்தியேக பார்வைகளை படம்பிடித்து தன் இதயத்தின் நான்கு அறைகளிலும் மாட்டிக்கொண்டான்..
************
தன் பெற்றோர்களுடன் தன் பிறந்த வீட்டிற்கு வந்த மது தன் பெட்டியை கொண்டு போய் அவள் அறையில் வைக்க, அவளுடைய அறையே புதிதாக இருந்தது அவளுக்கு...
இங்குதான் 23 வருடங்களாக வாழ்ந்திருக்கிறாள், ஆனால் திருமணம் ஆகி, இந்த 3 மாதத்தில் தான் வளர்ந்த தன் அறையே அந்நியமாக தெரியும் அளவுக்கு கணவன் மேல் வைத்திருந்த அன்பும் காதலும் அவளை மாற்றியிருந்தது,
அறைக்குள் வந்ததும்.. என்னவோ இன்றுதான் தன்னை புதிதாய்ப் பார்ப்பதுபோல் கண்ணாடியில் பார்த்திருந்தாள். அரைமணிநேரம் கடந்து.. ஆசையாக மகிழனை அலைபேசியில் அழைத்தாள்.
மகிழன் அழைப்பை ஏற்க..
'மாமா..." என்றாள்.
'சொல்லு டா..?" என்றான்
'ம்ம்.. எனக்கு உங்களைப்
பார்க்கனும்.."
'மது... என்ன..? என்ன சொன்ன மது..? ஏண்டி என்னை இப்படிப் படுத்தற...? நான் இப்பதான் இங்க வந்தேன். அங்க இருக்கும்போது ஒத்த வார்தை ஆசையா பேசல.. இப்போ மாமாவா..? என அங்கலாய்த்து.. 'சரி.. வீடியோ கால்ல வரியா..?" என்றான்.
'ம்ம்.." என்று கனெக்ட் செய்தாள். அவன் முகத்தைப் பார்த்ததுமே அழுகை வந்தது மதுக்கு.
'ஏய் எதுக்கு அழற..?" என்றான் கண்கள் மின்ன.. கண்களில் நீர் வந்தாலும்.. சிரித்துக்கொண்டே 'நீங்க ஏன் என்கிட்ட எதுவுமே பேசல?" என்றாள்.
'ஓ..ஹோ.. தெரிஞ்சிடுச்சா..? அப்போ.. எனக்காக நீ பேசலை. நான் உன் மாமாமகன்.. அதுக்காகத்தான் பேசற அப்படித்தான..?" என்றான் கோபமாக.
‘நேத்தே உங்களை கெஞ்சலாக. அந்தபக்கம் பதில் இல்லாமல் போக.. 'ஹலோ.. மாமா.. மாமா.." என்றழைத்து தன் அலைபேசியை ஆராய, அவன் அழைப்பை துண்டித்து இருந்தான்.. அழுகை முட்டிக்கொண்டு வந்தது மதுவுக்கு.
அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள்...
மகள் வந்தது சந்திரனுக்கும், தாமரைக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..
நீண்ட நாள்கள் கழித்து வந்திருக்கும் தங்கள் மகளை நல்லபடியா கவனிச்சுக்கணும். அவளுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து தரணும் என்று தன் மனைவிக்கு கட்டளை இட்ட சந்திரன், ஆடையை மாற்றிக் கொண்டு, தன் மகளுக்கு பிடித்ததை மதிய சமையலுக்கு வங்கி வர கடைத்தெருவுக்கு புறப்பட்டார்.
தாமரை வீட்டை எல்லாம் ஒரு முறை பெருக்கி ஒழுங்கு செய்து வைத்து விட்டு, தன் மகளைக் காண மாடியேறி அவள் அறைக்குள் வந்தார்.... உள்ளே தன் மகளின் கோலத்தை கண்டதும் அதிர்ந்தார்....
கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவள் கன்னத்தில் கண்ணீர் வழிந்திருக்க,
கண்களில் இன்னும் இரண்டு துளி
கண்ணீர் தேங்கி நின்றது...அதை கண்ட தாமரைக்கு உள்ளுக்குள் பிசைந்தது...
"என்னாச்சு இந்த பொண்ணுக்கு? எப்பவும் பட்டாம் பூச்சியாக பறந்து மலர்ந்து சிரிப்பவள் இப்படி சுருண்டு படுத்து விட்டாளே.. அதோடு அழுகை வேறு... என்னாச்சு? “ என்று அவசரமாக யோசித்தவருக்கு அப்பொழுதுதான் புரிந்தது....
தன் தம்பிக்கும், பொண்ணுக்குமான ஒதுக்கம்...தம்பி அழைத்து வராமல் அவள் தனியாக வந்த பொழுதே அவருக்கு ஏதோ சந்தேகமாக இருந்தது...
வீட்டிற்கு வந்த பொழுதும் எப்பவும் தன் கணவனை கண்டால் வரும் அந்த ஒளி தன் பெண்ணிடத்தில் மிஸ்ஸிங்... அவள் தன் கணவன் பக்கமே திரும்பவில்லை...
அவனுமே இவள் பக்கம் திரும்பாமல், அதுவும் அவளை தவிர்ப்பதற்காகவே அவசரமாக கிளம்பி சென்றதை போல இருந்தது...
எதுவானாலும் கணவன் மனைவி பிரச்சனை அவர்களே சரி செய்து கொள்ளட்டும்.. நாம் எதுவும் தலையிடக் கூடாது என்று முடிவு செய்தவர்
"மதுக்குட்டி...." என்று அழைத்தவாறு அவள் அருகில் சென்றார்...
தன் அன்னையின் குரலை கேட்டதும், அவசரமாக தன் கண்ணை துடைத்து கொண்டவள், மெதுவாக எழுந்து அமர்ந்தாள் வரவழைத்த புன்னகையுடன் ....
"என்னாச்சுடா? ஏன் வந்ததும் படுத்துகிட்ட?" என்றவாறு தன் வேதனையை மறைத்து கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தார்.....
"ஹ்ம்ம்ம் கொஞ்சம் டயர்டா இருந்தது மா.. .அதோடு என் பெட் ஐ பார்த்ததும் அப்படியே படுத்துக்கணும் போல இருநந்தது.. அதான்... " என்று சமாளித்தாள்....
"மா... உன் மடில கொஞ்ச நேரம் படுத்துக்கவா? “ என்றாள் குழந்தையாக
"என்னடி இது? பெர்மிசன் எல்லாம் கேட்டுகிட்டிருக்க? வாடா மா.." என்க
மதுவும் தன் அன்னையின் மடியில் தலை வைத்து அவர் இடுப்பை கட்டி கொண்டாள்...
எவ்வளவுதான் பிள்ளைகள் வளர்ந்தாலும் அன்னை மடி தரும் சுகமே தனிதான்...மது அந்த சுகத்தை கண் மூடி அனுபவிக்க, தாமரையும் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்து மறு கையால் அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்....அந்தச் சுகத்தில் கண்ணை மூடியவள் அப்படியே உறங்கிப் போனாள்....
தாமரை
" இவள் மனக்குறை எதுவானாலும் சீக்கிரம் தீர்த்து வச்சுடு முருகா என் பொண்ணு எப்பவும் போல சிரிச்சுகிட்டே இருக்கணும்..." என்று தன் விருப்ப தெய்வமான திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டே, ஒரு தலையணையை எடுத்து அவள் தலையை தூக்கி வைத்து அவளை நேராக படுக்க வைத்து அறை கதவை மெல்ல சாத்திவிட்டு வெளி வந்தார்....
சந்திரன் திரும்பி வந்திருக்க, அவரிடம் மது உறங்குவதாக சொல்லி விட்டு சமையலை ஆரம்பித்தார்...
**************
அவளுக்கே இந்த மது மிகவும் புதிதாக தெரிந்தாள். இரண்டு நாட்களில் இத்தனை மாற்றம் வந்து விடுமா? அவரை பார்க்காமல் என்னால் இனிமேல் இருக்கவே முடியாதா
தினம் போனில் பேசிக்கொண்டு இருந்தாலும் பிரிவு மதுவை வதைத்தது.
மகிழனுக்கும் முதலிரண்டு நாட்கள் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் நாட்கள் ஒவ்வொன்றாக கழிய, அவனது நினைவெல்லாம் அவளாகினாள். இத்தனை தவிப்பதற்கு பேசாமல் அனுப்பாமல் இருந்திருக்கலாமே என்று கூட தோன்றியது. ஆனால் எப்படி அனுப்பாமல் விட முடியும்?
நாள் தவறாமல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளோடு பேசி விடுவான் மகிழன். இன்று என்ன நடந்தது என்று அவனாலும் கேட்காமல் இருக்க முடியாது, அவளாலும் சொல்லாமல் இருக்க முடியாது.
அவள் பிரிவை உணரக் கூடாது என்று என்ன வேலையிருந்தாலும் அழைத்து விடுவான். அவன் அழைக்கவில்லை என்றால், மது அழைத்து விடுவாள். வேலை இருக்கும் பட்சத்தில் கூட இரண்டு நிமிடமாவது அவன் பேசாமல் வைத்ததில்லை.
மது! இது உனக்கே ஓவராக தெரியலையா? வருஷக் கணக்குல எங்களையெல்லாம் விட்டுட்டு ஹாஸ்டல்ல போய் உக்கார்ந்து படிச்சியே? அப்பல்லாம் இப்படியொரு வார்த்தை இந்த அம்மாவைப் பார்த்துச் சொல்லி இருக்கியா?'
வந்ததில் இருந்து மது ஒழுங்காக உண்பது இல்லை. முன்பைவிட மெலிந்தும்விட்டாள்,
தாமரைக்கு மதுவை சமாளிப்பதே பெரிய வேலையாக இருந்தது. ஆரம்பத்தில் செல்லம் கொஞ்சி கொஞ்சி ஊட்டிவிட கொஞ்சம் சாப்பிட்டவள். இப்போது அதுவும் இல்லை, கோபத்தில் தாமரை இன்று அதிகமாகவே திட்டிவிட்டார், உடனே அவனுக்கு அழைத்தவள்
"என்னை ஏன் மாமா உங்க அக்கா கூட அனுப்புனீங்க?" என்று எடுத்தவுடன் கேட்க, மறுபுறம் அவனுக்கு புரியவே இல்லை.
"ஏய் மது? என்னாச்சு?" என்று சற்று பதட்டத்தோடு கேட்க,
"எப்பப் பார்த்தாலும் திட்டிக்கிட்டே இருக்காங்க..." என்று குழந்தையாய் சிணுங்கினாள்.
“அப்படி என்ன உங்கம்மா திட்டினாங்க?" புன்னகையோடு அவன் கேட்க,
"எங்கம்மான்னு சொல்லாதீங்க... உங்கக்கா..." ரோஷத்தோடு அவள் கூறியதை கேட்டவனுக்கு இன்னுமே சிரிப்பாக இருந்தது.
"சரி..." என்று ஒத்துக்கொண்டவன், புன்னகையோடு, "எங்கக்கா என்ன சொன்னாங்க?" என்று கேட்க,
அவனது கேலியான கேள்வி அவளை இன்னமும் எரிச்சல்படுத்த, ""மாமா..." பல்லைக் கடித்தாள் மது.
"ஓகே ஓகே... என்னாச்சுடா? அதை சொல்லு..." என்று சிரிப்பை குறைத்துக் கொண்டு அவன் கேட்க,
"நான் தத்தியாம்.. எல்லாரையும் கஷ்டப்படுத்துறேனாம், உங்க லைஃப்பையும் கெடுக்கறேனாம்...நான் என்ன மாமா பண்ணேன்? சாப்பிட முடியல அது ஒரு குற்றமா?
"ஒழுங்க சாப்பிடலனா எப்படி மதுக்குட்டி இந்த மாமனை சமாளிப்ப?" அவனது குரலில் குறும்பு மீண்டிருந்தது.
"மாமா.." சிணுங்கினாள் மது. அந்த குரல் அவனை வசியப்படுத்தியது! என்னன்னவோ செய்ய தோன்றியது.
"சரிடா... எங்கக்காவ கூப்பிடு... என் பொண்டாட்டிய எதுக்கு திட்டினான்னு கேக்கறேன்..."
"இதோ கூப்பிடறேன்... நல்லா திட்டி விடுங்க... நீங்க திட்ற திட்டுல அவங்க இனிமேல் என்னை சாப்பிட கூப்பிட கூடாதாக்கும்... சொல்லிட்டேன்..."
ரொம்பவும் தீவிரமான குரலில் அவள் கூற, மகிழனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அப்போதிருந்த உல்லாசமான மனநிலை அவனை என்னவோ செய்தது!
“அம்மான்னு கூட பாக்காம நீ இப்படி எல்லாம் படுத்தக் கூடாது டா..." என்று அவன் சிரிக்க,
"அவங்க மட்டும் என்னை பொண்ணா நினைக்காறாங்களா? அவங்க தம்பி லைஃப்பை நான் என்னவோ கெடுத்துட்டு இருக்க மாதிரி பேசறாங்க..."
சீரியஸான தொனியிலேயே அவள் கூற, அடக்கமாட்டாமல் அவன் சிரித்தான்.
"சரி சரி... எங்கக்காவ கூப்பிடு... இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்..." அவனும் அவளைப் போலவே கூற, செல்பேசியை எடுத்துக் கொண்டு தங் தங்கென்று நடந்து வந்தவள், தாமரையிடம் பேசியை நீட்டப் போனவள், அவசரமாக ஸ்பீக்கரை ஆன் செய்துவிட்டு,
"உன் தம்பிக்கிட்ட பேசு..." விறைப்பாக கூறினாள்.
"போட்டுக் கொடுத்துட்டியா?" என்றபடியே பேசியை வாங்கிய தாமரை, ஸ்பீக்கரை ஆஃப் செய்யப் போக,
"ஸ்பீக்கர்ல பேசு... மாமா உன்னை திட்டறதை நானும் கேக்கணும்..." என்று தாமரையின் கையை தட்டி விட்டாள் மது.
"உன்னோட ரவுசு பெருசா இருக்குடி..." என்று நொடித்த தாமரை, பேசியை காதுக்கு கொடுத்து,
"சொல்லு மகி..." என்று கூற,
"என் பொண்டாட்டிய என்னக்கா சொன்ன?" என்று எடுத்ததும் அவன் கேட்ட கேள்வியில் உண்மையில் இனிமையாக அதிர்ந்தார் தாமரை.
"உன் பொண்டாட்டிய நான் என்ன சொல்லப் போறேன்?" என்று மெல்லிய சிரிப்போடு அவர் கேட்க,
"அப்புறம் ஏன் அப்படி அழறா?"
"ஏன்டா தம்பி... அவ அழுகறதுக்கு நான் என்னடா பண்ண முடியும்?"
"அழற மாதிரி என்னக்க சொன்ன?"
"என் பொண்ணை நான் எதுவுமே சொல்லக் கூடாதா?" பெற்ற பெண்ணை கணவனோடு இணக்கமாக இரு என்று சொன்னது ஒரு குற்றமா? ஆனால் அதுவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. இருவருக்கும் எல்லாம் சரியானால் போதுமே!.
"உன் பொண்ணை என்ன வேண்ணா சொல்லிக்க, ஆனா என் பொண்டாட்டிய எல்லாம் திட்டக் கூடாது. இதுக்காகத்தான் அவளை உன்கூட அனுப்பி வைத்தேனா?" என்று லேசான சிரிப்போடு சொல்ல,
"மாமா... சிரிக்காம திட்டுங்க..." அருகில் அமர்ந்து கொண்டு பேசியில் தன் காதையும் வைத்திருந்த மது குரல் கொடுக்க.
"வந்து இருக்கு கச்சேரி... எப்படி என் பொண்டாட்டிய திட்டுவன்னு கேக்கறேன் மதுக்குட்டி... டோன்ட் வொர்ரி... உன் நாத்தனாரை வீட்டை விட்டு தொரத்தறதுதான் அடுத்த டார்கெட்... ஓகே வா?" என்றான் சிரித்தபடி!
"ஹேய்யியியி..." என்று எழுந்து நின்று குத்தாட்டம் போட்டவளை பார்த்து தலையிலடித்துக் கொண்ட தாமரை,
"எப்பா சாமி... நல்ல தம்பி... அவனுக்கு இப்படியொரு பொண்டாட்டி... எப்படியோ போங்க..." என்று அவனிடம் சலித்துக் கொண்டு, அந்த கதையை கணவரிடம் கூறப் போனார்.
****************
இரண்டு வாரங்கள் கடந்திருந்த நிலையில், மதுவின் எடை குறைந்து மெலிந்து இருந்தாள். ஒழுங்காக சாப்பிடுவதும் இல்லை தூங்குவதும் இல்லை, சந்திரன் பிடிவாதமாக அவளை மருத்துவரிடம் அழைத்து வந்தார்.
"டாக்டர் இவ சாப்பிடவே மாட்டேன்கிற...ஏன் இப்படி இருக்கான்னே தெரியலையே..." தாமரை குறிப்பிட,
மருத்துவர் மதுவை கூர்ந்து கவனித்தார். சிறுவயதில் இருந்தே அவளை பார்ப்பவர். பழைய உற்சாகம் அவளிடம் இல்லை.
“என்னாச்சு மது? நீ ஸ்ட்ராங்கான பொண்ணாச்சே, இப்ப என்ன ஆச்சு உன் உடம்புக்கு. மனசுல எதையாவது நினைச்சு குழம்பிட்டு இருக்கீயா? " என்று டாக்டர் கேட்க
"அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்.." அவருக்கு பதில் சொன்னவள், அதற்கு மேல் தலையைக் குனிந்து அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
"ஏன் மது? சரியா சாப்பிடாம இருக்கியாம்?" மருத்துவர் கேட்க,
"பசிக்கவே இல்ல டாக்டர்'
என்றாள் மது
"சரிம்மா... முதல்ல நல்ல சாப்பிடு.." என்றபடி மருந்துகளை எழுதிக் கொடுக்க, அவரிடம் இருந்து விடைப்பெற்று கிளம்பியவர்களைப் பார்த்து,
"தாமரை கொஞ்சம் உங்ககிட்ட பேசணும்... நீங்க மட்டும் இருங்க" என்று டாக்டர் அவளைத் தேக்கவும், மது தாயை கேள்வியாக பார்த்தாள், தாமரை நிற்கவும், மதுவை அழைத்துக் கொண்டு சந்திரன் வெளியே வந்துவிட்டார்
“என்ன டாக்டர்? ஏதாவது பிரச்சனையா?” தாமரை கவலையுடன் கேட்க,
மருத்துவர் சிரித்துக் கொண்டே "அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல... அவ கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கற மாதிரி இருக்கு, மனசு ஏதோ சரி இல்லன்னு நினைக்கிறேன், புருஷன் கூட எதுவும் பிரச்சனையா?
அப்படி எல்லாம் இல்லை டாக்டர், ரெண்டும் போன் ல எப்போதும் பேசிக்கிட்டே தான் இருக்கும். என் தம்பிக்கு மது மேல அப்படி ஒரு பாசம்.
எதைப்பத்தியாவது யோசிச்சு குழப்பிக்கறாங்களோன்னு தோணுது எதுக்கும் தன்மையா மனசுவிட்டுப் பேசிப் பாருங்க! டாக்டர் சொல்லவும், தலையசைத்து கேட்டுக் கொண்டு வெளியே வந்தவர், யோசனையுடன் மதுவைப் பார்த்தார்.
“டாக்டர் என்ன சொல்றாங்க தாமரை?” கவலையுடன் சந்திரன் கேட்க,
ஒண்ணும் இல்லங்க... அப்போ சொன்னதையே தான் சொன்னாங்க." உங்க பொண்ணு ஒழுங்க சாப்பிட்ட எல்லாம் சரியாகிவிடும்.
நாட்கள் ஓடிச் செல்ல, ஒரு ஞாயிற்றுக் கிழமையில் மதிய உணவருந்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தாள்
மது எப்பொழுதும் பகலில் உறங்க மாட்டாள். இரவு மகிழனின் நினைவுகளால் சரியாக
உறங்காமல், இன்று பகலிலேயே உறங்கினாள்.
உறக்கம் கலைந்து கண்களைத் திறக்க பக்கத்தில் மகிழன் சிரித்துக்கொண்டே
படுத்திருந்தான். கனவோ என நினைத்து அவன் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க,
“என்னை பார்த்துட்டு ஆசையா வந்து கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுப்பன்னு பார்த்தா, இப்படி கிள்ளுறியே?" என மகிழன் கேட்டதுதான் தாமதம், அவனை அணைத்துக் கொண்டாள் மது
"என்ன திடீர்னு,' எனக்கேட்டாள்.
"திடீர்னு வந்தா ஸ்பெஷலா ஏதாவது கிடைக்கும்னு தான்" என்றான் மகிழன்.
"ரொம்ப மிஸ் பண்ணிட்டேன் உங்களை” என மது கூற,
"எவ்ளோ மிஸ் பண்ணின? சொல்லு கேட்போம்" என்றான் மகிழன்.
"ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணினேன்" என்றாள் மது.
"அதுதான் எவ்வளவுன்னு சொல்லு" என்றான் மகிழன்.
அவனிடம் இருந்து விலகியவள்,
"அதான் சொல்றேன்ல்ல ரொம்ப சொல்லுன்னா வேற என்ன சொல்ல?" என பாவமாய் கேட்டாள்.
“பின்ன எவ்வளவு நாள் கழிச்சு வந்திருக்கேன், சும்மா கட்டிப்பிடிச்சுக்கிட்டு, மிஸ் பண்ணிட்டேன் மிஸ்
பண்ணிட்டேன்னு சொன்னா...? நான் சொல்லவா உன்னை எவ்ளோ மிஸ் பண்ணினேன்னு" என கேட்ட மகிழன் அவளுக்கு காதலின் பாஷையில் புரியவைக்க, புரிந்துகொண்ட மது மகிழன்
பாணியிலேயே அவனை எவ்வளவு மிஸ் பண்ணினாள் என சொல்ல ஆரம்பித்தாள்.
மகிழன் அணைப்பில் இருந்த
மது "ஐயோ எல்லோரும் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க?" என பதறிப்போய்
படுக்கையிலிருந்து எழுந்திருக்க, அவளை பிடித்து இழுத்து தன் மேலே போட்டுகொண்டவன்,
"இன்னைக்கு நான் வர்றது உனக்குதான் தெரியாது. மத்த எல்லோருக்கும் தெரியும். அக்கா, மாமா, சஞ்சீவ் எல்லோரும் பெரியம்மாவ பார்க்க ஊருக்கு போயிட்டாங்க. நைட்டு தான் வருவாங்க" என்றான்.
"எனக்கு தெரியவே இல்லை" என்றாள் மது.
"நீ நல்லா தூங்கிட்டு இருந்த" என்றவன், “உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணினேன்னு சொன்னேனே, உனக்கு
புரிஞ்சுதா?" என கேட்டான்.
****************
*****************
அன்றைக்குப் மது வெகுவாகச் சலித்துப் போனாள். வேலைகள் எதுவும் ஓடமாட்டேன் என்றது.வெளியே சிறிது நேரம் நடந்துவிட்டு வந்தவள். குளித்து விட்டு யமுனா வீட்டுக்கு வந்தாள், காலை எட்டு மணி மஹா நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். யமுனா சமையலில் இருக்க
"அத்தை நான் இந்த வெங்காயத்தை வெட்டவா' என்று அங்கே இருந்த கத்தியை எடுக்க..
"அதெல்லாம் எதுவும் வேண்டாம் டா.. அத்தை பார்த்துக்குவேன்' உனக்கு டீ போட்டு தரவா? என்று யமுனா முடிக்கும் முன்
"அம்மா டீ" என்று தூக்கம் களையாமல் வந்து நின்றாள் மஹா, சமையல் அறையில் மதுவை பார்த்ததும், "ஹாய் செல்லம்' என்று அவளை கட்டிப்பிடித்தாள். யமுனா கரண்டியால் இரண்டு அடிபோட்டு குளிக்க விரட்ட, மதுவையும் இழுத்துக்கொண்டு தான் அறைக்குள் ஓடினாள்.
குளித்து முடித்து வந்த மஹாவுடன் உணவு மேசையில் இருந்தாள் மது, உடன் மஹாவின் தம்பி கௌதம். மஹா சேலையில் இருந்தாள், வடிவமைப்பு மது. அவர்கள் இருவரின் கவனமும் உணவில் இருக்க, மதுவின் எண்ணம் முழுவதும் மாமான். சாப்பாட்டில் மனம் ருசிக்கவில்லை.
அம்மா இது அக்காவுக்கு ஆறாவது தோசை என்றான் கௌதம்
தம்பியை எட்டி அடித்தவள் ம்மா இதோட நாளுதாம்மா என்றாள்.
தன்னை சுற்றி நடக்கும் எதிலுமே கவனம் இல்லாமல் இரண்டு தோசையை பிய்த்து போட்டு விளையாடிக் கொண்டிருந்த மதுவையே பார்த்துக்கொண்டு இருந்த யமுனா..
"மது என்னடா... சாப்பிடு' என்றார்.
"அத்தை எனக்கு பசியே இல்லை' இதை வீட்டுக்கு எடுத்துட்டு போய் லேட்டா சாப்பிடாட்ட... யமுனாவிற்கு அவள் ஏக்கம் புரிந்தது. திருமணமத்திற்கு பிறகு முதல் முறையாக கணவனை பிரிந்திருக்கிறாள். மனது ஒருநிலையில் இல்லை.
"சரிடா' என்று தட்டை வாங்கி தோசைகளை டிபன் பாக்சில் போட்டு அவள் கையில் கொடுத்தார். இரண்டு குடும்பத்திலும் உணவை வீணாக்குவது யாருக்கும் பிடிக்காது.
வீட்டுக்கு வந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. டீவி பார்க்கும் பழக்கமும் இல்லாததால் தனிமை மிகவும் படுத்தியது.
'அம்மாவோடு பேசலாம்' என்று கைபேசியை எடுத்து தாமரையை அழைத்தாள். தாமதிக்காமல் அவரும் அழைப்பை ஏற்றார்.
"மது...என்ன செய்ற?"
"இருக்கேன்." விரக்தியாக சுரத்தேயில்லாமல் மகளிடம் இருந்துவந்த பதில் தாய்க்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.
"என்னாச்சு மது?" என்றார் அவசரமாக.
"ஒன்னுமில்லை ம்மா."
“அப்ப ஏன் வாய்ஸ் டல்லடிக்குது? உடம்புக்கு முடியலையா என்ன?"
“அதெல்லாம் ஒன்னுமில்லை." அந்தக் குரலில் அத்தனை சலிப்பு.
"நீ முதல்ல வீடியோ கால் பண்ணு"
உன்னை நான் பார்க்கணும்" அம்மா கட்டளைப் போடவும் பெண் பணிந்தது. திரையில் தாமரைவின் முகத்தைப் பார்த்ததும் மதுவின் கண்கள் கலங்கிப் போனது.
"மது, என்னாச்சுடா? எதுக்கு இப்போ கண் கலங்குற?" மகி எங்கடி? தாய் அங்கே பதற கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடி
"மாமா என்னை தனியா விட்டுட்டு போய்ட்டார்" என்றாள் குழந்தையாய்
"என்னடி சொல்ற?" தாமரை பதறினார்.
"நான் நல்ல தூங்கிட்டேன்மா, என்னை எழுப்பி கூட சொல்லாம, காலையிலேயே உன் தம்பி பாண்டிச்சேரி போய்ட்டாங்க,
"ஏன் உன்கிட்ட சொல்லலையா?
"நைட்டு சொன்ன மட்டும் போதுமா?" மகளின் குரல் தம்பியை குறை சொல்லவும் தாமரை இப்போது நிதானித்தார்.
"போன் பண்ணிப் பேசேன்."
"கூப்பிட்டுட்டேன், எடுக்கலா, சைலண்ட்ல போட்டிருக்காங்க..
"ஓ.." மகளின் பிரச்சனை என்னவென்று புரிய இப்போது தாமரை மனதுக்குள் சிரித்துக் கொண்டார்.
"தனியாக விட்டுட்டு போயிருக்கான், எப்பிடியும் இன்னைக்கு நைட்டுக்குள்ள வந்திருவான்டா?"
"ம்... ம்.... போம்மா" ஏதோ தாமரைதான் அவள் கணவனை பாண்டிச்சேரிக்கு அனுப்பியது போல சலித்துக் கொண்டாள் மது.
"என்னடா? பச்ச புள்ள மாதிரி அழுதுட்டு இருக்க"
"ம்ப்ச்..."
"நீ ஏதாவது சாப்பிட்டியா மது?"
"தோசை சாப்பிட்டேன்."
"மதியம் என்ன பண்ணப் போறே?"
"நீங்க ஏம்மா தொண தொணக்கிறீங்க? இப்ப நான் சமையல் பண்ணி இங்க யாரு சாப்பிடப் போறா?" அம்மாவின் மேல் சட்டென்று பாய்ந்தாள் பெண்.
"அதற்கு மேல் பொறுக்க முடியாமல் குலுங்கி அழுத பெண்ணை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தாமரை அமைதியாக இருந்தார். மகள் அழுவது கவலையாக இருந்தாலும் அம்மாவின் மனது நிறைந்து போனது. தம்பி தன் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்கிறான் என்பது அவருக்கு ஏற்கனவே தெரியும். ஆனால்... எத்தனை அன்னியோன்யம் அவர்களுக்குள் இருந்தால் இந்தச் சிறு பிரிவிற்கு மகள் இவ்வளவு வேதனைப்படுவாள்!
"எங்கடி போய்டான் அவன்?" இந்த இருக்கு பாண்டிச்சேரி' தாய் பேச்சை மாற்றவும் பெண்ணும் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"அம்மா இனி நீ மாமாவை அவன் இவன்னு பேசக்கூடாது" அது என்ன ஒரு மாப்பிள்ளையை மரியாதை இல்லாமல் பேசுறது.
"ஏண்டி... நீ கட்டுறதுக்கு முன்னாடியே அவன் எனக்கு தம்பி டி, இப்ப என்ன புதுசா ரூல்ஸ் எல்லாம் போடுற..
அப்பாவே இப்ப எல்லாம் வாங்க, போங்கன்னு மரியாதையா பேசுறார், நீ என்ன அவன், இவன்னு
"சொல்லுவடி...சொல்லுவ' சரி எதுக்கு பாண்டிச்சேரி பேனான். சித்தியை அழைச்சிட்டு வரவா..
"இல்லம்மா அவர் பிசினஸ் சம்மந்தப்பட்ட முக்கியமான யாரையோ பார்க்கனும் போல"
"அதானே... இல்லைன்னா உன்னைத் தனியா விட்டுட்டுப் போயிருக்க மாட்டானே.
"அப்பவும் நீயும் கூடவா மது ன்னு கூப்பிட்டாங்க." சிரித்தாள் பெண்.
"போயிருக்கலாமே மது."
"போன உடனே திரும்பனும், அதுக்கு இங்கேயே இருக்கலாமுன்னு நினைச்சேன், "மாமா இப்பிடிப் போனதே இல்லையா? அதான்... கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு." சிரித்தபடி அன்னையிடம் அசடு வழிந்தாள் பெண்.
"புரியுது மது."
"என்னை எந்த வேலையும் பெருசாப் பண்ண விடமாட்டாங்க, காலையில் எனக்கும் சேர்த்து அவங்களே டீ போடுவாங்க தெரியுமா?."
"ம்... ரெம்ப தாண்டி" இப்போது அம்மா சிரித்தார்.
"அம்மாச்சி பாண்டிச்சேரி போன பின்னாடி எல்லா வேலையிலும் மாமா எனக்கு ஹெல்ப் பண்ணுவார்.. அம்மா மாமா சூப்பரா சமைப்பார் மா!
"உன்கிட்ட மாட்டிக்கிட்டு பாவம்டி என் தம்பி. பெருமூச்சு விட்டார் தாமரை.
"தம்பி பாவம்னா நீ வந்து சமையல் பண்ணு'
"ஆமாண்டி உன்னை கட்டிக்கொடுத்து சமையல் வேலையும் நான் வந்து பார்த்து தர்றேன். அவனை ரெம்ப படுத்தாத மது. பாவம்டி அவன், சின்ன வயதில் இருந்தே தனிய கஷ்டப்பட்டு வளர்ந்தவன்...
என் மாமாவை நான் நல்ல பார்த்துக்குவேன், நீ அப்பாவை பார்த்துக்க.. நேத்து போன் பேசும் போது இருமிக்கிட்டே இருந்தார்.
"சரி மது, அம்மா சமையலை பார்க்கணும், நீ தனியா இருப்பேன்னு எப்பிடியும் சீக்கிரமாத்தான் வரப் பார்ப்பான், "கவலைப்படாதே... மாமா வந்திருவாங்க."
"சரிம்மா?' 'மது அழைப்பை துண்டித்து விட்டு படியேறி தாங்கள் அறைக்குள் வந்தாள்.
அம்மாவிடம் பேசிய பிறகு மனது கொஞ்சம் லேசானது போல இருந்தது. ஆனால் இப்போது லேசாக வெட்கம் வந்தது. எதற்குக் காரணமே இல்லாமல் இப்போது அம்மாவிடம் எரிந்து விழுந்தோம்?! அம்மா என்ன நினைத்திருப்பார்கள்! ஒரு நிமிடம் முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள். சிரிப்பு வந்தது. வாய்விட்டுச் சிரித்தாள். பின் தங்கள் அறையில் இருந்த மகிழன் புகைப்படத்தை எடுத்து மார்போடு அணைத்து கொண்டாள்.
"எல்லாம் உங்களால வந்தது மாமா! என்னைப் பைத்தியகாரி மாதிரி வேலை பார்க்க வெக்கிறீங்க!" "இன்னைக்கு வீட்டுக்கு வாங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு! ஒரு போன் கூட பண்ணலை!" அவன் புகைப்படத்தோடு கொஞ்சி கொஞ்சி பேசியபடியே படுத்திருந்தாள்
பகலுணவைச் சமைத்து கேரியரில் போட்டு எடுத்து வந்திருந்தார் யமுனா. காலையில் மது கொண்டு வந்த டிபன் பாக்ஸ் காலியாகி இருந்ததை பார்த்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார். .
"மது சாப்பிடலாமா' எனக்கு பசிக்குது
"அத்தை நான் லேட்டா சாப்பிடுறேன்' தயங்கி தயங்கி சொன்னாள்.
"உனக்கு பிடித்த மட்டன் பிரியாணிடா'
வா உட்காரு,
"அத்தை இப்பதான் தோசை சாப்பிட்டேன்' நெளிந்தாள் பெண்.
உனக்காக அத்தை ஆட்டோ பிடித்து மார்க்கெட் போய் மட்டன் வாங்கியாந்து பார்த்து பார்த்து சமைத்திருக்கேன், வா நான் ஊட்டி விடுறேன் ரெண்டு வாய் சாப்பிடுடா..
ஆனால் மகிழன் அத்தனைச் சீக்கிரத்தில் அன்றைக்கு வீடு வந்து சேரவில்லை. பிற்பகல் நான்கு மணி போல போன் பண்ணினான்.
"மாமா."
"மது வர கொஞ்சம் லேட்டாகும் போல இருக்குடா."
"சாப்பிட்டீங்களா?"
"நீ சாப்பிட்டியா மது?"
"ம்ம்' அத்தை பிரியாணி பண்ணி தந்தங்க, "மட்டன் பிரியாணி சூப்பரா இருந்துச்சு."
"நல்ல சாப்பிடியா'
"ம்ப்ச்' நீங்க இல்லாம என்னால சாப்பிட முடியல மாமா." அத்தை தான் ரெண்டு வாய் ஊட்டி விட்டாங்க..
“அடிதான் வாங்கப் போறே, முதல்ல ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடு மது, ஏழு மணிக்குள் நான் வந்திடுவேன், பயப்பிடாதே ."
"ம்...." அத்தோடு மகிழன் பேச்சை முடித்துவிட்டான். சாப்பிடவும் பிடிக்காமல் தூக்கமும் வராமல் மது திண்டாடிப் போனாள். மகிழன் மேல் அவளுக்கு அளவுகடந்த காதல் இருந்தது உண்மைதான். ஆனால்... ஒரு பொழுது அவனைப் பார்க்காவிட்டால் தான் இத்தனைத் தூரம் வேதனைப்படுவோம் என்பது அவளுக்கு அன்றைக்குத்தான் புரிந்தது. ஐந்து வருடங்கள் அவனை மனதில் மட்டும் சுமந்து வாழ்ந்தவளால், இன்று அரைநாள் பிரிவை தங்க முடியவில்லை.
மகிழன் வீடு வந்து சேர்ந்த போது இரவு எட்டு மணி தாண்டி இருந்தது. மாடியிலிருந்து வீதியையே பார்த்திருந்த மது அவன் கார் வருவதை தூரத்தில் வரும் போதே பார்த்துவிட்டாள். இது நேரம் வரை சோர்ந்து போய் கிடந்தவளுக்கு, அவனைப் பார்த்த கணம் அனைத்தும் மறந்து போனது. எங்கிருந்து தான் அந்த வேகம் வந்ததோ வீதிக்கே ஓடிவந்து விட்டாள்
காரை உள்ளே பார்க் பண்ணுவதற்காகத் திருப்பிய மகிழன்
மனைவியைப் பார்த்து விட்டு சட்டென்று காரிலிருந்து இறங்கினான். அவனிடம் காட்டாற்று வெள்ளம் போல ஓடி வந்த பெண் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டது. மகிழன் ஒரு புன்னகையோடு மனைவியை இறுக்கிக் கொண்டான். அன்றைக்கு முழுவதும் அவளைப் பாராதது அவனுக்குமே எதையோ இழந்தது போலதான் இருந்தது.
"ஏய் அம்மு...” அவன் எதையோ பேச ஆரம்பித்த போதும் அவள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. அவனை அணைத்தபடி அப்படியே நின்றிருந்தாள்.
"மது நாம ரோட்டில நிக்கிறோம்" அவன் சொல்லிய பிறகே உணர்ந்தவள் மெதுவாக விலகி உள்ளே போனாள். மகிழன் காரை ஷெட்டில் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்தான். பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது.
"மாமா, சாப்பிடுறீங்களா?"
"இல்லைடா, குளிச்சிட்டு வந்திடுறேன்." வாடிப் போய் நின்றிருந்த மனைவியின் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு மாடிக்குப் போய்விட்டான் கணவன். சற்று நேரத்தில் குளித்து முடித்து விட்டு மகிழன் கீழே வந்த போது டைனிங் டேபிளில் அனைத்தும் தயாராக இருந்தது.
"சாப்பிடுங்க மாமா."
"நீயும் உட்காரு மது."
"ம்ஹூம்... நீங்க முதல்ல சாப்பிடுங்க." சொல்லிவிட்டு அவனுக்கு அருகில் நின்றபடியே பரிமாறியது பெண். முதலில் மகிழன் அதைக் கவனிக்கவில்லை. பாதி சாப்பாடு தீரும் போதுதான் அதை உணர்ந்தான். மனைவியின் இடது கை அவன் தோளை லேசாக உரசிய படி இருந்தது. அன்றைக்கு ஏனோப் புடவைக் கட்டி இருந்தாள். மகிழன் வலது புறமாகத் தன் தலையைத் திருப்பிய போது சேலை மறைக்காத அந்தச் சிறுத்த இடை அவன் கண்ணைக் கவர்ந்தது.
இவை எதையும் கவனிக்காமல் அவன் அருகாமை ஒன்றே போதும் என்பது போல அவனை உரசிக்கொண்டு நின்றிருந்தாள் மது. மகிழன் புன்னகைத்தான்.
"மது..."
"ம்... என்ன வேணும் மாமா, இன்னும் கொஞ்சம் பிரியாணி போடவா?"
"ம்ஹூம்... நீயும் வந்து உட்கார்ந்து சாப்பிடு." மனைவியை இன்னொரு நாற்காலியில் உட்கார வைத்தவன் அவளுக்குப் பரிமாறினான்.
“சாப்பிடு, இன்னைக்கு என்ன ஆச்சுதுன்னா...” என்று பேச ஆரம்பித்து அவள் உண்டு முடிக்கும் வரை அவள் கவனம் அங்கே இங்கே சிதறாமல் பார்த்துக் கொண்டான்.
"ஐயையோ! போதும்."
"இன்னும் கொஞ்சம் சாப்பிடு. அவள் இன்றைக்கு முழுவதும் பெரிதாக எதுவும் உண்டிருக்க மாட்டாள் என்று தெரிந்திருந்ததால் மகிழன் அவள் ப்ளேட்டை இன்னும் கொஞ்சம் நிரப்பினான்.
"போதும் போதும், இதுக்கு மேல முடியாது." சட்டென்று எழுந்துவிட்ட மது இருவரது ப்ளேட்டையும் எடுத்துக்கொண்டு சின்க்கிற்கு நகர்ந்து விட்டாள். அவள் கை கழுவி முடிக்கும் நேரம் மகிழனும் பின்னோடு வந்து அவளை உரசியபடி தன் கையைக் கழுவினான்.
கை கழுவி முடித்துவிட்டு டேப்பை மூடியவன் அவள் சேலைத் தலைப்பால் அவன் கையைத் துடைத்துக் கொண்டான். மறந்தும் அவளை விட்டு இம்மியளவும் நகரவில்லை. மது இப்போது அவளாகவே அவனை நோக்கித் திரும்பினாள். மகிழன் பெண்ணை அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
"மாமா" அவள் உயிரிலிருந்து வந்த வார்த்தை அது. தாபத்தையும் மோகத்தையும் சம விகிதத்தில் கலந்து வந்தது. மகிழன் கண்கள் இப்போது பளபளத்தது, கைகள் பரபரத்தது. ஆனாலும் அமைதியாகவே நின்றிருந்தான். மனைவியின் தொடுகைக்காகக் காத்திருந்தான்.
மது காலதாமதம் செய்யவில்லை. அவன் கழுத்தை வளைத்துத் தன்னை நோக்கி இழுத்தவள் அந்தச் சிவந்த இதழ்களில் முத்தம் வைத்தாள்.
மென்மையான தன் மனைவியின்
முரட்டுத்தனமான முதல் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தபடி அப்படியே நின்றிருந்தான் மகிழன். ஒரு சில நிமிடங்கள் அந்த சுகத்தில் திளைத்திருந்த பெண் அதற்கு மேல் தாங்க மாட்டாது தொய்ந்து போனது. அவள் கால்கள் துவள ஆரம்பிக்கும் போது மனைவியைக் கைகளில் அள்ளிக் கொண்டான் மகிழன். மாடிக்குப் போகும் வரைப் பொறுத்திருக்க முடியாமல் அவன் உதடுகள் இப்போது மனைவியின் கழுத்து வளைவில் புதைந்தன.
"ஆக... என்னோட ரோஸ் பெட்டலுக்குள்ளயும் ஒரு சுனாமி இருக்கு! அந்த சுனாமி என்னையே சுருட்டப் பார்க்குதே!" குறும்பாகச் சொன்னவன் மனைவியை முழுதாகச் சுருட்டித் தனக்குள் புதைத்தான்.
அன்று அவர்கள் இருவரும் தூங்க நெடுநேரம் ஆனது!
இடையில் விழிப்பு வந்த மது அவனை பார்த்தாள்.
"என்ன மாமா தூக்கம் வரலையா?"
"சும்மா பழைய விஷயங்களை ம் நினைச்சு பாத்துட்டு இருந்தேன் மது.
"கொஞ்ச நாள் இந்த தோள்ல சாய மாட்டோமான்னு ஏங்கிருக்கேன் டா. ஆனா இப்ப இந்த தோளே எனக்கு தான் சொந்தமா ஆகிட்டு", என்று சிரித்து கொண்டே அவன் நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அவன் நெஞ்சிலே சாய்ந்து உறங்கி போனாள் மது.
காலையில் கண் விழித்தான் மகிழன். அவன் கைகளுக்குள் புகுந்து அவன் இடுப்பில் கை போட்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருந்தாள் மது.
தன்னை கட்டி கொண்டு சிறு குழந்தை போல் தூங்கும் மதுவை ரசித்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
"பல்லு விளக்காம முத்தம் கொடுக்காத மாமா", என்று கண்களை மூடி கொண்டே சொன்னாள் மது.
"கள்ளி முழிச்சிட்டு தான் இருக்கியா? அப்புறம் என்ன சொன்ன பல்லு விளக்காமலா? நைட் நடு ராத்திரில என் உதட்டை கடிச்சு வைக்கும் போது தெரியலையோ பல்லு விளக்கலைனு"
"சி போடா, அது நைட்"
"செல்ல குட்டி"
"எங்கயாவது வெளிய போகலாமா?"
"ஹ்ம் போகலாமே எங்க? பேமிலி டூர் போகலாமா?"
"சரி சரி. அழுவாத போகலாம். நீ பேக்டரி போகலையா?"
"நாளைக்கு போய்க்கிறேன் டா"
"ஹ்ம் சரி. நான் குளிச்சிட்டு வரேன்"
"நான் முதுகு தேச்சி விட வரவா?"
"எதுக்கு? ஒரு மணி நேரம் பாத்ரூம் குள்ளேயே கிடக்கவா? கொன்னுருவேன். இங்கயே இருங்க"
"சரிங்க மகாராணி. போங்க"
அவள் போகும் போது அவனுக்கு போன் வந்தது. எடுத்து பார்த்தவன் லும் உயர்த்தினான்.
அந்த பக்கம் சொன்ன பதிலில் முகம்
சிரிப்புடன் தன் அறைக்கு சென்றான் மகிழன். அப்போது தான் குளித்து முடித்து துண்டை கட்டி கொண்டு வெளியே வந்தாள் மது.
அவளை பார்த்து எப்போதும் போல் இப்பவும் மயங்கியவன் “அப்படியே செம பிகர் டி", என்று சொல்லி அவளிடம் ஒரு கொட்டு வாங்கி கொண்டு குளிக்க சென்றான்.
அவன் குளித்து முடித்து வெளியே வரும் போது புடவை கட்டி கொண்டிருந்தாள் மது.
"வெளிய போறோம்னு சொன்னேன்ல டி? சேலை கட்டுற?", என்று கேட்ட படியே அவளை பின்னால் வந்து அணைத்தான் மகிழன்.
அவன் தலையில் இருந்த நீர் துளிகள் அவள் கழுத்திலும், காதிலும் பட்டு அவளுக்கு சிலிர்ப்பை தந்தது.
"சும்மா இரு மாமா கூசுது"
"மாட்டேன்", என்றவனின் உதடுகள் ள் காதில் பயணித்தது.
"அடங்க மாட்டியா மாமா நீ?"
“நீ தான் அடக்கேன்"
"அடங்கிட்டு தான் மறுவேளை பாப்ப. சரி நான் சேலை கட்டினா பிடிக்கும்னு சொல்லுவன்னு தான் கட்டினேன். வேண்டாமா?"
"இருக்கட்டும் இருக்கட்டும், அப்ப தான் கை அங்க அங்க பிரியா சுத்தும்" என்றவனின் கைகள் அவள் வெற்றிடையில் பதிந்தது"
அவன் தொடுகையில் மயங்கி நின்றாள் மது.
அவளிடம் இருந்து விலகிய மகிழன்
“உனக்கு பொறுப்பே இல்லை டி. கிளம்பனும்னு சொல்றேன்.
நீ அசையாம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க?", என்று கேட்டு சிரித்தான்.
“நானா டா ஆரம்பிச்சேன். பன்னி ", ஆ படியே அவன் கன்னத்தை கடித்து வைத்தாள்.
சேலைல வேற கும்முன்னு இருக்க? வெளியே எல்லாம் வேண்டாம். ரூம்கு போவோமா?"
**********
“ஆமா ஆமா... நீ தான் என்னை அடப்பாவியாக்கற..."
"இன்னும் வேற என்ன கம்ப்ளைன்ட் சொல்வ?" அவனது முடியை பிடித்து மாவாட்டியப்படியே அவள் கேட்க,
"நீ தான்டி சாரி கட்டிட்டு வந்து என்னை மயக்கிட்ட..."
"அது எல்லாரும் கட்றதுதானடா?"
"எல்லாரும் கட்றதும் நீ கட்றதும் ஒண்ணா?
"சாரில உன்னை பார்க்கும் போதே எனக்கு ஜிவ்வுன்னு இருக்கு. அப்படியே உன்னை என்னென்னமோ பண்ணனும்ன்னு தோணுது."
"தோணுமே..." என்றவள், அவனது முடியை பிடித்து இன்னும் கொஞ்சம் மாவாட்ட,
"அதுவும் அந்த பூவோட வாசமும் உன்னோட வாசமும் சேர்ந்து என்னை என்னென்னமோ பண்ணுதே... என்னதான்டி பண்ண சொல்ற? சாமியாராட்டம் இருக்க முடியலையே.. என்று அவன் கூறிய தொனியில் சிரித்தவள், வெட்கத்துடன் அவனது தலைமுடியை விட்டுவிட்டு அருகில் படுத்துக் கொண்டாள்.
அவளருகில் நன்றாக சாய்ந்து படுத்தவன், "மது.." என்றழைத்தான்.
"அடேய்... நீ எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு கொண்டு போறன்னு எனக்கு தெரியும்..."
"விட்டா செய்வடி. அதுக்கு முன்னாடி உன்னை கண்டம் பண்ணிடறேன் இரு..." என்றவன், வேண்டுமென்றே அவளை சீண்ட,
“எப்பா சாமி... நான் எஸ்கேப்..." என்று எழுந்து தப்பிக்க முயன்றவளை இழுக்க, அவள் பூவாக அவன் மேலேயே விழுந்தாள்.
"ஷப்பா..." என்று வேண்டுமென்றே முகத்தை சுளித்தவன், "பாக்கத்தான்டி ஸ்லிம்மா இருக்க. செம வெயிட்டு..." என்று கூற,
“அப்படீன்னா, வெய்ட் கம்மியா ஒரு பொண்ண பாத்து கரெக்ட் பண்ணிக்கங்க மாமா.." என்றவள், எழ பார்க்க,
"உன்னை கரெக்ட் பண்ணவே பத்து வருடம் ஆகிப்போச்சு, இதுக்கு மேல இன்னொருத்திய நான் கரெக்ட் பண்ணி.... என்றவனின் குறும்பில், அவள் பித்தாகி தான் போனாள்.
"எதே... அடப்பாவி..." என்றவளது உதடுகள் அவன் வசம் சென்றது. வன்மையாக பியைத்து உண்டுவிட்டு, போனால் போகிறதென அவளது அதரங்களை திருப்பி தந்தவனை பார்த்து முறைத்தவள், "சரியான ராட்சசன்..." வலித்த உதடுகளை கையால் தடவிக் கொடுக்க,
"நான் வேண்ணா ஒத்கடம் கொடுக்கட்டா?"
தாய்வீட்டில் இருந்த பத்து நாட்களும் இன்பமாய் கரைந்தது மதுவுக்கு. வாழ்க்கை அழகானதாக சென்றது இருவருக்கும்.
மகிழன் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்திக் கொண்டான். ஆறு நபர்கள் வேலை செய்த இடத்தில் இப்போது இருபது பேர் வேலை பார்க்கிறார்கள். மது நேரம் போகலை என்றால் அவனுடன் அலுவலம் வருவாள். நானும் வேலை செய்கிறேன் என்று ஒரு வேலைக்கு இரு வேலை ஆக்குவாள்.
“அம்மா தாயே நீ வீட்டிலே இரு", என்று கெஞ்சுவான் மகிழன்.
அப்போது ஒரு நாள் காலை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, “மகிழன் கேசவன் மாமாவோட பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்காங்களாம் டா", என்று ஆரம்பித்தாள் சந்திரிகா.
அணு அவர்களுக்கு பரிமாறி கொண்டிருந்தாள்.
அவன் எதுவுமே சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்தான்.
"என்ன டா நான் சொல்லிட்டே இருக்கேன். நீ அமைதியா இருக்க?"
"அவங்க பொண்ணுக்கு கல்யாணம்
வச்சா நான் என்ன மா செய்ய முடியும்? வச்சிட்டு போட்டும்"
அவளுக்கு உங்க அப்பா தான் டா தாய் மாமா"
"அதுக்கு?"
"என்ன அதுக்கு? நாம தான சீர் செய்யணும்"
"என்ன மா விளையாடுறீங்களா?
"சரி பா. அவங்க எப்படி வேணாலும்
இருக்கட்டும். ஆனா கடமைன்னு ஒன்னு இருக்கே"
"என்னால எல்லாம் செய்ய முடியாது"
"இப்படி சொன்னா எப்படி மகிழன்? நீ மது கூட போற. சீர் செஞ்சிட்டு வந்துருங்க. தப்பை நினைச்சு வருந்துறவங்களை மேலும் கஷ்ட படுத்த கூடாது பா"
“நான் போக மாட்டேன்"
"நீ போய் தான் ஆகணும்"
"சே இந்த வீட்ல நிம்மதியா ஒரு சாப்பாடு கூட சாப்பிட முடியலை", என்ற படியே தட்டை விசிறி அடித்தான் அர்ஜுன்.
அடுத்த நொடி அவன் கன்னத்தில் இடி என இறங்கியது அணுவின் கரம்.
அதிர்ச்சியாக அவளை பார்த்தார்கள் அனைவரும்.
"என்ன நினைச்சிட்டு இருக்க? அத்தை
வாய்ட்டு தான பேசிட்டு இருக்காங்க. உனக்கு மட்டும் என்ன? மரியாதை இல்லாம எழுந்து போற? தட்டை வீசுற? கொன்னுருவேன். உக்காரு டா. பார்வதி வேற தட்டை எடுத்துட்டு வா. அத்தை நாங்க அந்த கல்யாணத்துக்கு போறோம். உங்க பிள்ளை தாய் மாமன் மகனா சீர் செய்வாரு. ஆனா நீங்களும் எங்க கூட வரீங்க. இந்த பேச்சு அவ்வளவு தான்", என்று முடித்து விட்டாள் அணு.
“அம்மா”, என்று கத்தினான் அர்ஜுன்.
"என்கிட்ட என்ன பாயுற? சின்ன பையனா இருந்தா நான் ஒன்னு இப்படி விட்டுருப்பேன். எனக்கு பதிலா அணுவே செஞ்சிட்டா"
"ஆள் வச்சி அடிக்கிறீங்களா?"
"ஆமா டா. பொண்டாட்டியை கட்டி வச்சு உன்னை அடிக்க விடுறேன்"
"பெத்த பிள்ளையை அடிக்கிறா. நீங்க ஆனந்தமா வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க?"
“இந்த வீட்ல என்னை தவிர எல்லாரும் அவ கிட்ட அடி வாங்கியாச்சு. என் வயசுக்காக என்னை விட்டு வச்சிருக்கா. உனக்கும் விழாம இருந்தது. இப்ப அதுவும் நடந்துடுச்சு. தப்பு செஞ்சா விழ தான் செய்யும் வாங்கிக்கோ"
அம்மாவையும், அணுவையும் பார்த்து முறைத்து கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
“எழுந்து போய் இன்னொரு அடி யாரு வாங்குறது?", என்று நினைத்து கொண்டே பேசாமல் சாப்பிட்டு முடித்து விட்டு சென்றான் அர்ஜுன்.
அதன் பின் முறைத்து கொண்டு திரிந்தவனை சமாதான படுத்தி சிரிக்க வைத்தாள் அணு.
சந்திரிகா மனமும் நிறைந்தது. அடிக்கடி சந்திரிகா வாயில் இருந்து வரும் வார்த்தை இது தான். "அணு தான் இந்த குடும்பத்தோட ஆணிவேர்"
வ தேவனை தங்களுடன் இருக்க ஜுனும், சந்திரிக்காவும் கேட்டு விட்டார்கள்.
வாசு தேவனை தங்களுடன் இருக்க அர்ஜுனும், சந்திரிக்காவும் கேட்டு விட்டார்கள்.
ஆனால் அவர் “என் மனைவி வாசனை அந்த வீட்டில் இருக்கிறதா நான் நம்புறேன். அங்கேயே இருக்கேன். தினமும் வந்து உங்களை எல்லாம் பாத்துட்டு போறேனே? அப்பறம் என்ன?", என்று சொல்லி விட்டார்.
"நான் தான் சொன்னேன்ல? அப்பா சம்மதிக்க மாட்டாங்கன்னு. அம்மா வேலை பாத்த சமையல் அறைக்கே என்னை விட மாட்டாங்க. பின்ன அந்த வீட்டை விட்டு வருவாங்களா?", என்றாள் அணு.
இதை எல்லாம் நினைத்து பார்த்து கொண்டே படுத்திருந்தான் அர்ஜுன்.
**************÷*
"என்ன தனியா சிரிக்கிறீங்க? என்கிட்ட சொல்லுங்க, நானும் சேர்ந்து சிரிக்கிறேன்" என்றாள் மது.
"காலையிலேயே கண்ண திறக்கும்போது, மனசுக்கு புடிச்ச பொண்ணு கண்ணு முன்னாடி உட்கார்ந்திருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?" எனக் கேட்டான் மகிழன்.
"எப்படி இருக்கும்?"
"சும்மா ஜிவ்வுவுவுன்னுனுனு... இருக்கும்" என்றான் மகிழன்.
"போதும் எழுந்திரிங்க" என்றாள் மது.
+×++++×××××
குடித்துவிட்டு கோப்பையை கீழே வைக்க, மதுவின் மடியில் படுத்து கண்களை மூடிக் கொண்டான் மகிழன்.
மதுவுக்கு குறுகுறுப்பாக இருந்தது. முதலில் தயங்கியவள் பின் மெல்ல அவன் தலையை வருடிக் கொடுக்க ஆரம்பித்தாள். சுகமாக உறங்கிவிட்டான் மகிழன். அவனையே பார்த்து ரசித்திருந்தாள் மது.
உயரத்திற்கு ஏற்ற உடலுடன், நல்ல உடல் கட்டுடன் சற்று கடுமையானவன் என்று மற்றவர்கள் நனைப்பது போன்ற தோற்றம்தான் மகிழன். ஆனால் உள்ளம் குழந்தை போன்றது என எண்ணிக் கொண்டாள்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளும் உட்கார்ந்த வாக்கிலேயே உறங்கி விட்டாள். இடி இடிக்கும் சத்தம் கேட்டு தான்
இருவரும் கண் விழித்தனர்.
"ஐயோ... துணி காயுது மழை வரும் போலிருக்கே" என பதறி
வெளியே சென்றான், மகிழன் எழுந்து இருவரும் எடுத்துக்
வெளியே சென்றாள். துணியை
கொண்டிருக்க மழை சடசடவென
பெய்ய ஆரம்பித்தது.
துணிகளுடன் இருவரும் உள்ளே
வர, இருவருமே முழுவதும் நனைந்திருந்தனர். மழை வேகமாக பொழிய ஆரம்பித்தது. துணியை ஓரமாக வைத்துவிட்டு கதவை அடைத்தான் மகிழன். ஜன்னலின் வழியாகவும் சாரல் அடிக்க அதையும் சாத்தினாள் மது.
உடையை மாற்றவென குளியலறை சொல்லப்போனாள் மது. ஆனால் செல்ல முடியவில்லை. மகிழன் மதுவைப் போக விடாமல் அவள் கையை பிடித்திருந்தான்.
"என்ன மாமா?" என திரும்பி பார்த்த மது அவன் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்தாள். மதுவின் நெஞ்சம் தடதடவென ரயில் வண்டியாய் சத்தமிட்டது. ஈரமான உடையால் குளிரில் அவள் உடல் லேசாக நடுங்கியது.
மதுவை நெருங்கிவந்த மகிழன், நடுங்கிய அவளை அணைத்துப் பிடிக்க,
"இதெல்லாம் இப்ப வேண்டாம்னு
சொன்னீங்கதானே" என மெதுவாக கேட்டாள்.
"இப்ப வேணும்னு தோணுதே" என்றான் மகிழன்.
"வேண்டாம்" என மது கூறினாலும், அவளும் அவனின் நெருக்கத்தில் மயங்கித்தான் போயிருந்தாள். மகிழன் மதுவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.
வெளியே மழை பொழிய, மகிழன், மதுவின் ஆசை மேகங்களும் காதல் மழையாக பொழிய ஆரம்பித்தது.
மழை விட்டிருந்தது. மகிழன் க
முகத்தில் விழுந்திருந்த முடிகளை ஒதுக்கி விட்டவன், அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
"பசிக்குது மாமா" என்றாள் மது
மகிழன் தேங்காய் சட்னி செய்ய, நங்கை தோசை ஊற்ற ஆரம்பித்தாள். உணவருந்தி விட்டு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் உறங்கச் செல்ல இருவருக்கும் வாழ்க்கையே வண்ணமயமாகத்தான் தெரிந்தது.
அடுத்த நாள் காலையில் நேரம் தத்தே எழுந்ததால், அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள்
***************
மகிழன் தேநீர் கலந்து தர, கால்நீட்டி கீழே அமர்ந்தவள் வாங்கி குடிக்க ஆரம்பித்தாள். மகிழன் தேநீருக்கு மது அடிமையாகி இருந்தாள்.
இத்தனை நாட்களாக இந்த வாழ்க்கை சரியாக அமையுமா என்ற சந்தேகம் அவனை வாட்டிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த பிரிவு அவனது மனதை அவனுக்கே வெளிச்சம் போட்டு காட்டியது.
எப்படி என்று தெரியவில்லை. ஆனால் மது அவனது மனதுக்குள் நீக்கமற நிறைந்திருந்தாள்.
மனைவி என்பதற்காக கடமைக்காக அவளோடு அவனால் குடும்பம் நடத்திவிட முடியாது. அன்பு வேண்டும்... அனுசரணை வேண்டும்... பாசம் வேண்டும்... ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மேல் ஆசையும் காதலும் மோகமும் வேண்டும்!
அவள் இல்லாமல் நானில்லை என அவனும் உணர வேண்டும். அவன் இல்லாமல் அவளில்லை என்று அவளும் உணர வேண்டும்.
இந்த ஆறுமாதத்தில், மது ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த குடும்ப வாழ்க்கை என்று எத்தனையோ முறை உடன்பிறந்தவளிடமும், பெற்றவளிடமும் தயங்கியபடியே மென்மையாக கூறி முடித்திருக்கிறான்.
அதை தாண்டி இருவருமே வர நினைத்ததில்லை.
அப்படி இருக்கும் போது அவனாக எப்படி அழைத்து போக முடியும்?
தயக்கம் அவனை எல்லை தாண்ட விடவில்லை. வயது வித்தியாசம் சற்று குறைவாக இருந்திருந்தால் அவனது அணுகுமுறை கண்டிப்பாக வேறாகத்தான் இருந்திருக்கும். ஆனால் அந்த வயது வித்தியாசம், சிறுவயதில் இருந்தே குழந்தையாக பார்த்தவளை மென்மையாகவே அவனால் அணுக முடிகிறது.
என்னதான் காதல் என்று அவளை திருமணம் செய்து இருந்தாலும் , அவனால், அதை கடந்து வர முடியவில்லை. எட்டு வயது வித்தியாசம் என்பதும், மது அவனது தமக்கையின் மகள் என்பதும் தான் அவனுக்கு மிகப்பெரிய தடைக் கல்லாக இருந்தது.
இவையெல்லாம் அவனாக கற்பித்துக் கொண்ட காரணங்கள் தான் என்பதை, அவன் இந்த இருபது நாள் பிரிவில் புரிந்து கொண்டான்.
ஒவ்வொரு நாளும் அவனது தவிப்பும், துடிப்பும் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதற்காகவே வேலைகளை விரைவாக முடித்துவிட்டு பறந்து வந்திருந்தான்.விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் நேரம் கூட நீண்டதாக தோன்றியது.
எதிர்கொண்டு வரவேற்ற தாயும் தமக்கையும் அவனது கண்களுக்கு படவில்லை. உண்மையிலேயே!
அந்த மௌனம் அத்தனை அழகாக இருந்தது இருவருக்குமே! அதை உடைக்க இருவருமே பிரியப்படவில்லை.
வெற்றிடையில் அவன் கை பதிக்க, அவளது கால்கள் தள்ளாடியது. அவளது நடுக்கத்தை குறைப்பதாக நினைத்து அவளது இடையை இறுக்கி அணைத்து அவனோடு சேர்க்க, அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டாள் மது.
"ஏய் பொண்டாட்டி..." மதுவின் காதில் மகிழன் கிசுகிசுக்க, அவளது உடல் கூசி சிலிர்த்தது.
"ஹும்ம்..." அவளது குரலில் மயக்கம்.
"சாரில செமயா இருக்க..." அதே கிசுகிசுப்புதான். அவளுக்குத்தான் சிலிர்ப்பு தாள முடியாமல் அவஸ்தையாக இருந்தது.
"பிடிச்சிருக்கா?" கண்களை மூடியவாறே பின்னோடு அவனோடு இழைந்தபடியே அவள் கேட்க,
"ரொம்ப..." என்று அவன் இறுக்கிக் கொண்டான்.
"அப்புறம் ஏன் என்னை விரட்டி விட்டீங்க?"
“இப்படி நின்னுட்டு கேட்டிருந்தா நான் போயிருப்பேனா?"
"ஐ மிஸ்ட் யூ மாமூ.." கொஞ்சலாக அவள் கூற, அவளை திருப்பி அவனை பார்த்தவாறு நிறுத்தி, அவளது கண்களை பார்த்தான்.
"உங்கம்மா ரொம்ப திட்டிட்டாங்களா மது?" அவளது தோளில் கைபோட்டு தன்னை நோக்கி இழுத்தபடி மகிழன் கேட்க,
"ஹும்ம்... அவங்களுக்கு என்ன? எப்ப பார்த்தாலும் என்னை திட்டனும்..." உதட்டை சுளித்தபடி அவள் கூற, அந்த உதட்டை விரல்களால் பற்றியவன், அதை இழுத்துப் பிடித்து,
"ரொம்ப சுளிக்காதடீ..." என்று கூற,
"இஸ்ஸ்ஸ்ஸ்... வலிக்குது மாமூ.." சிணுங்கினாள் மது.
"வலிக்கறதுக்கு தான்டீ இழுக்கறது..." என்று மீண்டும் அவளது உதட்டில் கைவைக்கப் போக, பட்டென்று அவனது கையை தட்டி விட்டாள்.
"ரவுடி..." என்றவள், “ரொம்ப போராடிச்சுது மாமூ... அதோட உங்கக்காவோட நொச்சு வேற... இனிமே நான் லீவ்ல இருந்தா என்னையும் கூட்டிட்டு போங்க..." சலுகையாய் அவனது தோளில் சாய்ந்து கொள்ள, அவளை சுவரோடு சேர்த்து நிறுத்தினான் மகிழன்.
"அக்காவோட மிரட்டல் தாங்காம நம்ம பக்கம் வந்துட்ட போல இருக்கு..." சின்ன சிரிப்போடு அவன் கேட்க, அவனது கேள்வி எதற்கு என்பதை புரிந்து கொள்ளாமல்,
"ஹும்ம்.... அதோட நானும் ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன் மாமூ..." சிறிய குரலில் கிசுகிசுப்பாக அவள் கூற, அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் மகிழன்.
"கில்டியாவா? ஏன்?" அவனது புன்னகை மாறவில்லை. ஆனால் நெருக்கம் சற்று குறைந்து விட்டதோ என்று மதுவுக்கு தோன்றியது.
"இப்படியெல்லாம் யோசிக்குதா உன்னோட குட்டி மூளை?" அவளது தலையில் தட்டிச் சிரித்தான் மகிழன்.
"மாமூ..." சிணுங்கினாள்.
"என்னடீ?” அவளை வேண்டுமென்றே கலாய்க்கும் குரலில் அவனும் பதிலுக்கு இழுக்க,
“கிண்டல் பண்ணாதீங்க மாமூ...
"வேற என்னதான்டீ பண்றது? அதையும் நீயே சொல்லிடேன்..." விஷமச் சிரிப்போடு அவன் கேட்க, அவளது முகம் வெட்கத்தில் சிவந்தது. ஆனால் இதுவரை அவனிடம் இது போன்று பேசாததால் இவ்வளவெல்லாம் பேசுவானா என்ற வியப்பு வேறு!
"மாமூ..." மீண்டும் அவள் சிணுங்க, அந்த வெட்கமும்,கூச்சமும் சிணுங்கலும் அவனை வேறொரு உலகதிற்கு கூட்டிச் சென்றது. தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டவன், அவளது தோளில் கைபோட்டுக் கொண்டு,
"உங்க அம்மா திட்றாங்க, ஆட்டுக்குட்டி திட்றாங்கன்னு எல்லாம் அவசரப்படாத மது... நமக்கு எவ்வளவோ டைம் இருக்கு..."
“அதெல்லாம் அப்படியொன்னுமில்ல..." ரோஷமாக அவள் கூற, அவளை இன்னும் நெருக்கமாக தன்னோடு இழுத்துக் கொண்டான்.
"எப்படியொன்னுமில்ல?" அவனது விஷமம் புரிந்து அவனிடமிருந்து தள்ளி நிற்க முயல, அவளால் முடியவில்லை. உடும்புப் பிடியென பிடித்திருந்தான். இரும்பு பிடிக்கும் கையல்லவா!
"ஹும்ம்..."
"அப்படீன்னா உனக்கு நான் ஓகே வா?" விடாமல் அவன் கேட்க,
"ஏன் இப்படி கேக்கறீங்க?" உண்மையில் அவளுக்கு புரியவில்லை.
"சும்மா சொல்லுங்க பொண்டாட்டி மேடம்..." தன் முன்னே கொண்டு வந்தவன், அவளது தோளில் கை போட்டபடி கேட்க, அவனது மீசையை பிடித்து இழுத்தவள்,
"ஓகே தான்..." என்று கிசுகிசுப்பாக கூறினாள்.
“ஏன்?” அவளை விட்டுவிட மாட்டேன் என்று உறுதி எடுத்திருப்பான் போல... அவனை முறைத்தாள்.
"அடியே வலிக்குதுடீ..." என்று அவன் உதட்டை தேய்த்துக் கொள்ள,
"வலிக்கறதுக்கு தான்டா இழுக்கறது.." என்று அவனைப் போலவே சிரித்தபடியே கூறியவளின் இதழ்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், அதை வன்மையாக கொய்தான்.
அத்தனை வன்மை... சற்றும் மென்மையில்லாத வன்மை... முதலில் அவனிடமிருந்து விடுபட முயன்றவள், பின் அதை கைவிட்டு அவனோடு ஒன்றினாள். அவன் முரடன் தான். ஆனால் அவளுக்கு அந்த முரட்டுதனம் மிகப் பிடித்திருந்தது.
அவள் ஒன்ற, வன்மையை கைவிட்டவன் மென்மைமையாக அவளது இதழை ஒற்றி எடுக்க, அதுவரை கண்களை மூடி அவனுக்குள் ஆழ்ந்திருந்தவளுக்கு அந்த மெல்லிய இதழொற்றல் ஏதேதோ கதை சொன்னது.
"ஏய் பொண்டாட்டி..” இன்னமும் அவன் மேல் மயக்கமாக சாய்ந்திருந்தவளை கிசுகிசுப்பாக அழைத்தான் மகிழன்.
"ஹும்ம்..." பேச முடியவில்லை அவளால்.
"வெளிய போலாமா?” அவளிடம் அனுமதி வேண்டினான் அவள் கணவன்.
"ம்ஹூம்..."
"ஏய்... ஒரு வார்த்தை கூட ஒழுங்கா பேசாம ரூமுக்கு வந்துட்டேன்...
"ம்ஹூம்..." அவள் இன்னும் சிணுங்க, மீண்டும் அவளது இதழ்களை மென்று தின்று விட வேண்டும் என்பது போல பேரவா எழுந்தது.
"கூச்சமா இருக்கு மாமூ..."
"சரி அப்படீன்னா என்ன பண்ணலாம்?" குறும்பாக அவன் கேட்க,
"ச்சசீ..." அவனை தள்ளி விட்டு போக முயல, அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான் மகிழன்.
கலைந்து, கலைத்து, களைத்து சலிக்கும் வரை இரவு நீண்டது!
போகும் போது குழப்பத்துடன் போன மகிழன், சந்தோசத்துடன் திரும்பி வந்ததை பார்த்து அர்ச்சனா சிரித்துக் கொண்டாள்
"என்ன அண்ணா முகம் எல்லாம் பிரகாசமா இருக்கு? ?", என்று கேட்டாள் அர்ச்சனா
“அதெல்லாம் இல்லை மா. சும்மா தான்", என்று சிரித்தான் மகிழன்.
"நம்பிட்டேன் அண்ணா", என்று சிரித்து கொண்டே தன் வேலையை பார்க்கச் சென்றாள்.
அவனுடைய சீட்டில் அமர்ந்த மகிழனுக்கு, அவனை அறியாமலே சிரிப்பு வந்தது.
மதுவை நினைத்தாலே அவன் முகம் தன்னால் மலரும் விந்தை, எப்பவும் போல இப்பவும் அறியாமல் இருந்தான் மகிழன்.
"இவளை நினைச்சா ஆபிசே லூசு பட்டம் கட்டிரும். வேலையை பாப்போம்", என்று நினைத்து தன்னுடைய கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தவனின் கண் முன்னே புகைப்படத்தில் சிரித்தாள் மது.
“ஏண்டி என்னை வேலையே பாக்க விட மாட்டியா? கிட்ட தட்ட ஒரு மாசம் உன்னை பாக்காம தவிச்சிருக்கேன். எப்பவும் என்னை கொல்றது தான் உன் வேலையா? அழகு ராட்சசி. எப்படி எல்லாரையும் மயக்கி வச்சிருக்க. இந்த கண்ணு தான் கண்ணம்மா அப்படியே கொக்கி போட்டு இழுக்குது", என்று வாய் விட்டு புலம்பும் போதே அவனுடைய போன் அடித்தது.
அதன் பின் வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான் மகிழன்.
இருட்டின பின்னர் கூட வீட்டுக்கு போக இந்த ஒரு மாதமாக தயங்கியவன் ஆறு மணிக்கே சந்தோசத்துடன் வீட்டுக்கு கிளம்பினான்.
************
கார்டனில் பார்வதி அமர்ந்திருந்தார் அவள் அருகே மது அமர்ந்து பக்கத்து வீட்டு ஒரு வயது குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தாள்.
அவனை அறியாமலே அவன் கால்கள் அவர்கள் பக்கம் சென்றது.
"உங்க பேபி வந்தாச்சு அத்தை", என்று பார்வதி காதை கடித்தாள் மது. அவள் சிரிக்கும் போது அவளை பார்த்து கொண்டே அருகில் அமர்ந்தான் மகிழன்.
"என்ன மா செய்றீங்க?", என்று மதுவை பார்த்து கொண்டே பார்வதி கேட்டான் மகிழன்.
"டேய் உங்க ரெண்டு பேரோட அலப்பறை தாங்க முடியலை. வேற எங்கேயாச்சு போய் லவ் பண்ணுங்களேன் டா. நீ அவளை பாத்துட்டே என்கிட்டே கேக்குற? அவ உன்னை ஆசையா பாத்துட்டே முறைக்கிறா? இதெல்லாம் என்னால வேடிக்கை பாக்க முடியலை", என்றாள் பார்வதி.
"அத்தை நாங்க ஒன்னும் லவ் பண்ணலை. சண்டை போட்டிருக்கோம்", என்று சொன்னாள் மது
"ஆமா ஆமா, நம்பிட்டோம். சரி நந்து பாப்பாவை கொடு. நான் அவ வீட்டுக்கு போய்ட்டு அவளை விட்டுட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்"
"போறது சரி. அங்க போய் திருட்டு தனமா இனிப்பு வாங்கி
சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு மக்கு சொல்லிட்டேன்", என்றாள்
மது.
"என்னை கவனிக்கிறதே இவளுக்கு வேலை. கொஞ்சம் இவனையும் கவனி. கொஞ்ச நாள் இவன் ஒழுங்காவே சாப்பிடுறது இல்லை போல", என்று சொல்லி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு போனாள் பார்வதி.
அவள் போன பிறகு இருவரும் அமைதியாய் இருந்தார்கள்.
மெதுவாக அவளை ஒட்டி அமர்ந்தான் மகிழன்.
அவனை முறைத்து கொண்டே விலகி அமர்ந்தாள் மது.
மறுபடியும் அவளை நெருங்கி அமர்ந்தவன் "இன்னும் தள்ளி போனேன்னு வை மடியில் தூக்கி வச்சிக்குவேன்", என்றான்.
அவன் சொன்னதை செய்வான் என்பதால் அப்படியே அமர்ந்திருந்தாள்.
இத்தனை நாளுக்கு பிறகு கிடைத்த
நெருக்கத்தை இருவருமே மனதுக்குள்ளே விரும்பினர்.
"என் மேல கோபம் போயிருச்சா அணு மா?", என்று கேட்டான் மகிழன்.
"நீயே கண்டு பிடி மகிழன்", என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பி கொண்டாள் மது.
"அதான் நீ மகிழன்னு கூப்பிடுறதுலே தெரியுதே. கோபம் போகலைனு. இல்லைன்னா இந்நேரம் என்னென்னெமோ கிடைச்சிருக்குமே. சாரி டா. அன்னைக்கு என்ன செய்யன்னு தெரியாம தான் அப்படி நடந்துருச்சு. மன்னிச்சுக்கோயேன்"
"மன்னிக்க முடியல போடா"
"ப்ளீஸ் டி செல்லம்ல?", என்ற படியே அவள் கையை பிடித்தான். அதை தட்டி விட்ட மது முறைத்தாள் அவனை. கோபத்தில் மறுபடியும் சொதப்பினான் மகிழன்
"அப்ப எதுக்கு டி வந்த? உங்க அப்பா வீட்ல இருந்துருக்க வேண்டியது தான? கண்ணு முன்னாடி வந்து என்னை வெறுப்பேத்துறியா?''
"அப்பா தான் இங்க போக சொல்லி திட்டிட்டார். அப்புறம் நான் உன்னை என்ன வெறுப்பேத்துனேன்?"
"என்ன வெறுப்பேத்துனியா? அப்படியே சாகடிக்கிற. இப்ப தோட்டத்துல இருக்கோம்னு அறிவுக்கு தோணுனா கூட அப்படியே உன் உதட்டை இழுத்து வச்சு கிஸ் அடிக்கணும்னு தோணுது. உடம்பு முழுவதும் கடிச்சு வைக்கணும்னு வெறி வருது. அடிக்கிறதுக்காகவாது என்னை தொட மாட்டியான்னு ஒவ்வொரு செல்லும் ஏங்குது. ஆபிஸ்ல உக்கார முடியாம ஓடி வந்துருக்கேன் தெரியுமா? ஆனா நீ என்னை மன்னிக்கலை. அப்ப எதுக்கு இங்க வந்த?"
"செஞ்ச தப்பையும் மறந்துட்டு என்னை குறை சொல்ற? மதியம் யாரும் எதுக்கு வந்தேன்னு என் பொண்டாட்டியை கேக்க கூடாதுனு சொல்லிட்டு இப்ப நீயே கேக்குற. போடா என்கிட்டே பேசாதே", என்று கண் கலங்கி விட்டு எழுந்து போனாள் மது.
"ஐயோ கூட கொஞ்சம் சொதப்பிட்டோமே", என்று தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் மகிழன்.
"எவ்வளவு நாள் தான் மேடம் கோபமா இருக்காங்கன்னு பாப்போம். இவளை பத்தி தெரியாதா?", என்று நினைத்து கொண்டு வீட்டுக்குள் சென்றான்.
அங்கே மேகலாவும், பிரியாவும் அமர்ந்திருந்தார்கள்.
"மதுவை எங்க காணும்?", என்று அவன் கண்கள் தேடியது.
"இந்தாங்க அத்தை டிக்கெட். ட்ரைன்ல கிடைக்கல. பஸ்ல தான் டிருக்கேன். பஸ் ஒன்பது மணிக்கு தான்", என்று சொல்லி
என்று கேட்டாள் சந்திரிகா.
"உங்களுக்கு தான் தெரியுமே அத்தை. அவர் என்னை திட்டவே மாட்டார்ன்னு. நேத்து, நீங்க என்ன போட்டு கொடுத்தீங்களோ தெரியலை. வீட்டுக்கு வந்தார். என்னைக்கு உன்னோட வீட்டுக்கு போக போறன்னு கோபமா கேட்டார். என்னோட வீட்ல தான இருக்கேன் பா. எங்க போக சொல்றன்னு கேட்டேன். என்ன நக்கலா? என்கிட்டே அடி சொன்னேனா? சப்புன்னு அடிச்சிட்டார். நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ கிண்டல் பன்றியா? அங்கே வேற பொண்ணை கூட்டிட்டு வந்து மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க அர்ஜுனோட அத்தை வந்திருக்காங்களாம். நீ இங்க இருந்து அவன் போட்டோவை வச்சி கொஞ்சிட்டு இருக்க, அப்படின்னு திட்டினார்"
வாங்காதேன்னு சொன்னார். நீ கோப பட்டா சிரிப்பு சிரிப்பா வருதுன்னு
"என்னது அடிச்சாரா? நான் சும்மா தான கோபமா பேச சொன்னேன்"
நீங்க சொன்ன ஐடியா தானா? உங்களை அப்பறம் வச்சிக்கிறேன்.
"அது நீங்க சொன்ன ஐடியா தானா? உங்களை அப்பறம் வச்சிக்கிறேன். அப்புறம் என்ன? என்னை அடிச்சிட்டல்ல பா? இரு என் புருஷன் கிட்ட சொல்லி கொடுத்து உன்னை அடிக்க வைக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு ஆமா, அவன் தினமும் இங்க வந்துட்டு தான் போறான். பெரிய இவ மாதிரி அவன் கிட்ட மூஞ்ச தூக்கிட்டு இருக்க? இதுல அவனை வச்சு என்னை அடிக்க வைக்க போறியா? அப்படின்னு சொன்னார்"
"நீ என்ன சொன்ன?"
"என் புருஷனை அவன், இவன்னு சொன்னா நானே உன்னை அடிப்பேன் பான்னு சொன்னேன். தலைல அடிச்சிட்டு இப்ப நீ தான் பாப்பா, சிரிப்பு காட்டுறேன்னு சொல்லிட்டு அடிச்சது வலிச்சதான்னு சமாதான படுத்துனாரு"
"உடனே கிளம்பனும்னு முடிவு செஞ்சிட்டியா?"
“ஆமா, பின்ன அதுக்கு மேல அங்க க்க முடியுமா? அது மட்டும் லாம எனக்கு வேற நீங்க
"ஆமா, பின்ன அதுக்கு மேல அங்க
இருக்க முடியுமா? அது மட்டும் இல்லாம எனக்கு வேற நீங்க கண்ணுக்குள்ளயே இருந்தீங்களா? அதான் வந்துட்டேன்"
"யாரு? நான் உன் கண்ணுக்குள்ளே இருந்தேனா? நம்புற மாதிரி சொல்லணும் டா மது"
"ஹிஹி கண்டு பிடிச்சிடீங்களா? நீங்க வேற, உங்க பையன் வேறயா சொல்லுங்க?"
"சமாளிக்கிறதுல உன்னை மிஞ்ச முடியுமா? எப்படியோ நீ வந்தியே. இப்ப
தான் வீடு, வீடு மாதிரி இருக்கு. சரி இந்த சந்தோசத்தை கொண்டாடணுமே? அதனால் கொஞ்சம் சுவீட் கொடேன்"
"காரியத்துல கண்ணா இருப்பீங்களே. ஒண்ணே ஒன்னு தான் தருவேன். சாப்டுட்டு, காலைல நான் கொடுக்குற ஜூஸையும் குடிப்பேன்னு சொன்னா தரேன்"
பா அது கசக்குமே"
"அப்பகா மாட்டேன்"
அவன் சிரிப்பை பார்த்தவள், உதடுகளை சுளித்து அவனை முறைத்தாள்.
"அவளை சைட் அடிக்கிறேனாம். அதுக்கு முறைக்கிறா", என்று நினைத்தவன் ஒரு உல்லாசமான சிரிப்பை கொடுத்தான்.
"இப்ப எதுக்கு ஈ ன்னு இளிச்சிட்டு இருக்க? போய் குளிச்சிட்டு வா. சாப்பிடலாம்", என்றாள் மது.
"ஏய் குட்டி பாப்பா, நீங்க இன்னும் சாப்பிடலையா செல்லம்?", என்று கேட்டான் மகிழன்.
“இந்த கொஞ்சிற வேலை எல்லாம் வச்சிக்கிட்ட, பல்லை தட்டி கையில் கொடுத்துருவேன். நான் சாப்பிட்டேன். உனக்காக வெயிட் பண்ணலை. சாப்பாடு போடணும்னு தான் இருக்கேன்"
“ஏய் ரவுடி", என்று சொல்லி கொண்டே அவளை தன் கை அணைப்பில் கொண்டு வந்தான் அர்ஜுன்.
"விடு டா"
"முடியாது", என்ற படியே அணைப்பை இறுக்கினான்.
"நடு ஹாலில் நின்னுட்டு என்ன வேலை பண்ற? விடு. யாராவது பாக்க போறாங்க"
"அப்ப பெட் ரூம்ல வச்சு என்ன செஞ்சாலும் பரவால்லயா? அது மட்டும் இல்லாம இந்நேரத்துல யார் வருவா? ப்ளீஸ் டி பொண்டாட்டி. ரொம்ப நாள் ஆச்சு. இன்னைக்கு ஏமாத்திராத. கோபத்தை மறந்துருங்க செல்லம் ப்ளீஸ்"
“அதெல்லாம் அப்புறம். முதலில் போய் குளிச்சிட்டு வா"
யு டார்லிங். இதோ அஞ்சே நிமிசத்தில் வந்துறேன்", என்று துள்ளி குதித்து ஓடியவன் குளித்து விட்டு ஒரு டி ஷர்ட்டையும், ஒரு முக்கால் பேண்டையும் போட்டு கொண்டு விசில் அடித்து கொண்டே வந்தான்.
அவன் வேகத்தையும், அவன் செய்கையையும் ரசித்தவள் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு, அவனுக்கு சாப்பாடை எடுத்து வைத்தாள்.
"இட்லி தான் பார்வதி செஞ்சிருக்கா. கொஞ்சம் இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நாளைக்கு உனக்கு பிடிச்ச மாதிரி செஞ்சி தரேன்", என்ற படியே அவன் தட்டில் மூணு இட்லியை வைத்தாள் அணு.
இட்லி யா?", என்று சோகமாக சொன்னான் மகிழன்.
"டேய் உனக்கு பிடிச்ச ரெட் சட்னி தான் வச்சிருக்கா. ஒழுங்கா தின்னு"
"இத்தனை நாள் பட்டினி போட்டுட்ட. இன்னைக்கு விருந்தே இருக்கும்னு பாத்தா இப்படி சொதப்புறியே அணு டார்லிங்", என்று கொஞ்சினான் அர்ஜுன்.
"படுத்தாம தின்னு தொலையேன் டா"
"அப்ப ஊட்டி விடு. அப்ப தான் சாப்பிடுவேன். இல்லைனா வேண்டாம்"
"நீ அடங்க மாட்டியா மகிழன்?"
“நீ தான் அடக்கேன்"
"விவகாரமா பேசாத. எதுக்கு எடுத்தாலும் டபுள் மீனிங். அடி வாங்க போற. இந்தா சாப்பிடு", என்று சொல்லி கொண்டே அவனுக்கு ஊட்டி விட்டாள் மது.
சிரித்து கொண்டே அதை வாங்கியவன், அவள் விரலையும் சேர்த்து சுவைத்தான்.
"ஒழுங்கா இட்லியை மட்டும் சாப்பிடாம என்ன வம்பு பண்றான்", என்று மனதினுள் திட்டி தீர்த்தவள் அடுத்த வாயை ஊட்டினாள். அவனிடம் கேட்டால், இப்படியா செஞ்சேன்னு இன்னொரு தடவை செஞ்சி காமிப்பான் என்று நினைத்து கொண்டு அமைதியாக இருந்தாள்.
அப்படியே வம்பு செய்து கொண்டு சாப்பிட்டவன் அவளுக்கு ஒரு வாயை மறந்து போய் ஊட்டி விட்டு விட்டான்.
அவன் அப்படி செய்வான் என்று எதிர்பாராமல், அதை விட அவன் மட்டுமே சாப்பிடும் காரமான சிவப்பு சட்டினி, அவள் உதட்டில் பட்டு எரிந்தது. ஆ என்று கத்தி கொண்டே அவன் ஊட்டிய இட்லியை விழுங்கியவள், தண்ணீர் டம்ளரை எடுத்து குடித்தாள்.
அப்பவும் காரம் குறையாததால் இஸ் என்று சத்தம் கொடுத்து ண்டிருந்தாள் அணுராதா.
அப்பவும் காரம் குறையாததால் இஸ் இஸ் என்று சத்தம் கொடுத்து
கொண்டிருந்தாள் அணுராதா.
தன்னுடைய மடத்தனத்தை நொந்து கொண்டு "சாரி டா. மறந்துட்டேன். ஆசைல கொடுத்துட்டேன். ரொம்ப உறைக்கிதா? இந்தா இந்த சுவீட்டை சாப்பிடு", என்ற படியே அருகில் இருந்த ஜாங்கிரியை பிய்த்து அவளுக்கு ஊட்டினான்.
அதிகமான காரத்தில் கண்கள் கலங்கி கொண்டே அந்த ஜாங்கிரியை விழுங்கினாள்.
அவள் கண்ணீரை பொறுக்காதவன், அவளை நெருங்கி அவள் உதடுகளை சிறை செய்தான்.
இத்தனை நாள் விலகி இருந்த ஏக்கம் தீர அவன் கொடுத்த முத்தத்தில் காரத்தையே மறந்தாள் அணு.
அவளுடைய மறுப்பை எதிர்பார்த்தவன் அது நடக்காததால் ஆனந்தமாக முத்தத்தை கொடர்ந்தான்.
"அம்மா எப்ப வேணும்னாலும் வெளியே வரலாம்", என்று அறிவு தாமதமாக வந்து அவளை விட்டவன் "இப்ப பரவால்லயா?", என்று கேட்டான்.
"கூட கொஞ்சம் தான் உறைக்கிது", என்று முனங்கியவள் கையை கழுவ போனாள்.
"சே அதிர்ச்சில நான் சாப்பிட்டதையே மறந்துட்டேனே. சீக்கிரம் அவ வரதுக்குள்ளே பிரஸ் பண்ணனும்?", என்ற படியே அறைக்கு ஓடி போனான் மகிழன்.
வேகமாக அறைக்குள் வந்தவன் குளியல் அறைக்குள் ஓடி போய் பல்லை விளக்கி விட்டு, "அப்பாடி இனி அவளுக்கு உறைக்காது. எப்படி தான் இவ்வளவு சாஃப்டா இருக்காளோ தெரியலை. கொஞ்சம் காரம் அதிகமா சாப்பிட முடியலை. கொஞ்சம் அழுத்தி பிடிச்சா அப்படியே சிவந்து போறா. இந்த மாமனார், இப்படி வளத்து வச்சிருக்காரு. அடியே இன்னைக்கு நீ காலி. ரொம்ப ஏங்கி போய் இருக்கேன். இன்னைக்கு என்ன ஆக போறியோ?", என்று நினைத்து கொண்டே கட்டிலில் கால் நீட்டி சாய்ந்து அமர்ந்தான் மகிழன்.
ஒரு கால் மணி நேரம் ஆன பின்னரும் அவள் வந்த பாடு இல்லை.
"இன்னும் என்ன செய்றா? சீக்கிரம் வாயேன் டி செல்லம்", என்று வாய் விட்டு புலம்பி கொண்டே இருந்தான்.
அப்படியும் வந்த பாடு இல்லை. மணி பத்தை தாண்டவும் தான் அவனுக்கு புரிந்தது. அவள் கொண்டுள்ள
கோபத்தை நினைத்து பார்த்தான். “போச்சு, இன்னும் இதை
இவ மறக்கலையா? என்னைக்கு
மலை இறங்குவான்னு தெரியலையே.
ஆனாலும் என்ன தான் கோபமா
இருந்தாலும், மேடம் இந்நேரம் வந்துருக்கணுமே", என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. "வந்துட்டா", என்று துள்ளி குதித்தது மகிழன் மனம்.
கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி அவனை பார்த்த மது, “என்னை தேடுவேன்னு தெரியும் மாமா. அதான் இங்க வர மாட்டேன், பக்கத்துக்கு ரூம்ல இருக்கேன்னு சொல்றதுக்கு தான் வந்தேன். குட் நைட்", என்று சொல்லி விட்டு பூட்டி விட்டு சென்று விட்டாள்.
அவள் போன பின்னர் வாய் விட்டே சிரித்தவன், “கோபா இருக்குறவ, வந்து சொல்லிட்டு போறா? இன்னைக்கு சிவ ராத்திரி தான். என்ன அலும்பு பண்ண போறாளோ? எப்படியும் தூங்க விட மாட்டா. அதுக்கு நாளைக்கு முடிக்க வேண்டிய ஆபிஸ் வேலையாவது பாப்போம்", என்று நினைத்து தன்னுடைய லேப்டாப்பை எடுத்து வைத்து வேலை செய்ய ஆரம்பித்தான்.
பக்கத்து அறைக்குள் வந்த மது, கதவை சாத்தினாள். “அங்க போனா, என்னை மயக்கிருவான். நான்தான் அவன் மேல கோபமா இருக்கேன்ல? அதனால இன்னைக்கு ஒரு நாளாவது இங்கதான் படுக்கணும்", என்று நினைத்து அந்த கட்டிலில் அமர்ந்தாள்.
அந்த அறையில் பேன் இல்லாமல் வெறும் ஏ. சி மட்டும் தான் உண்டு.
மதுவுக்கு சிறு வயதில் இருந்தே பேன் சத்தம் இருந்தால் தான் அவளுக்கு தூக்கமே வரும். அப்படி அந்த இரைச்சல் இல்லாமல் இருந்தால், அந்த அமைதி அவளுக்கு பயத்தை கொடுக்கும். இது புரிந்ததால், மகிழன் அவனுடைய அறைக்கு ஏ.சி இருந்தாலும் பேன் மாட்டி விட்டான்.
இப்ப அந்த சத்தம் இல்லாமல், அந்த அமைதி அவளை அச்சுறுத்தியது.
தூக்கமும் வந்த பாடு இல்லை. "லைட் அமைச்சா செத்தே போவேன். பேசாம அவன் ரூமுக்கே போயிருவோமா?", என்று நினைத்து கொண்டு வெளியே வந்தாள். அவன் அறை கதவை திறந்து, உள்ளே போனாள்.
"தனியா தூக்கம் வரலையா மது? இங்க வந்துறேன்", என்றான் மகிழன்.
"பாத்தியா மயக்குறான்", என்று நினைத்து கொண்டு "நான் ஒன்னும் இங்க தூங்க வரலை", என்றாள்.
அவள் எதற்கு வந்திருப்பாள் என்று அவனுக்கு புரிந்தது. இது எப்போதும் நடப்பது தானே. இப்படி சண்டை போட்டிருந்தாலும், போடாமல் இருந்தாலும் மகிழன் போட்டிருக்கும் சட்டையோ, டீ சர்ட்டோ தான் மதுவின் இரவு உடை. அது புரிந்தும் வேண்டும் என்றே அங்கு மடித்து அயன் பண்ணி வைத்திருந்த சட்டையை அவளுக்கு எடுத்து கொடுத்தான்.
"என்னது இது?", என்று கேட்டு அவனை முறைத்தாள் மது.
"என் சட்டை தான வேணும் உனக்கு? அதான் கொடுத்தேன்"
“அது வேண்டாம். அது துவைச்சது. நீ போட்டிருக்கிறது தான் வேணும்"
"எதுக்கு?"
"தெரிஞ்சிகிட்டே வம்பு இழுக்கிறான் பாரு. உன் வாசனை எனக்கு வேணும். அதுக்கு தான் டா கேக்குறேன். அதை சொன்னா நீ ரொம்ப பண்ணுவ", என்று நினைத்து கொண்டு “இப்ப தர போறியா, இல்லையா?", என்று கேட்டாள்.
"யாராவது, நாங்க போடுற சண்டையை பாத்தா காரி துப்பிருவாங்க", என்று நினைத்து கொண்டு போட்டிருந்த டீ சர்ட்டை கழட்டி கையில் கொடுத்தான்.
அவன் வெற்று உடம்பை ஒரு பார்வை பார்த்து விட்டு, கூச்சத்துடன் தலையை திருப்பி விட்டு வெளியே சென்று விட்டாள்.
"இப்ப மறுபடியும் வருவா", என்று நினைத்து கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தான்.
அறைக்குள் போனவள் "அவன் இல்லாமல் கண்டிப்பா தனியா தூங்க முடியாது", என்று நினைத்து ஒரு தலையணையை தூக்கி கொண்டு இவனுடைய அறைக்கே வந்து விட்டாள்.
அவள் செய்கையை பார்த்தவன், சிரித்து கொண்டு அவளை கண்டு கொள்ளாமல் இருந்தான்.
அவனுக்கு மறு பக்கம் வந்து அமர்ந்தவள், அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.
வேண்டும் என்றே அவள் புறம் திரும்பாமல் அமர்ந்திருந்தான் மகிழன்.
இரண்டு முறை தலையை மட்டும் திருப்பி அவனை பாத்து விட்டு திரும்பிக் கொண்டாள். அதையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.
“எப்படி தான் இத்தனை நாளும் அவ வீட்ல தனியா இருந்தாளோ? மாமா பாவம். அவரை படுத்தி எடுத்துருப்பா. பகல் புல்லா, அப்படியே எல்லாரையும் அரட்டி ஆளுறது. நைட் வந்து இப்படி பம்முறது. சரியான பாப்பா", என்று நினைத்து கொண்டே அமர்ந்திருந்தான்.
எழுந்து அமர்ந்த அணு அவனை பார்த்தாள்.
“என்ன மது? ஏதாவது வேணுமா?", என்று கேட்டான் மகிழன்.
"லைட் ஆப் பண்ணுங்க மாமா. எனக்கு தூங்க முடியலை"
“ஆரம்பிச்சிட்டா", என்று நினைத்து கொண்டு “சரி அமைச்சிறேன். தூங்கு", என்று சொல்லி அணைத்தான்.
"விடி பல்ப் போடுங்க. ரொம்ப இருட்டா இருக்கு"
"சரி போடுறேன்"
"நீயும் கூட படு. எனக்கு தனியா தூக்கம் வராது"
"இதுக்கு தான காத்துட்டு இருந்தேன்", என்று நினைத்து கொண்டு "இதோ படுக்குறேன்", என்று சொல்லி எல்லாம் எடுத்து வைத்து விட்டு அவள் அருகே படுத்தான்.
அவளும் அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள். அதே போல் அவனும் படுத்தான்.
"எதுக்கு மாமா அந்தப் பக்கம் திரும்பி படுத்திருக்க? இங்க திரும்பு", என்றாள் மது.
"நீ மட்டும் படுத்திருக்க?"
"நான் உன் மேல கோபமா இருக்கேன்ல அதான்"
"சரி நான் உன் பக்கமே திரும்பி படுக்குறேன். நீ தூங்கு", என்று சொல்லி திரும்பி படுத்தான். அவள் முதுகு தெரிந்தது.
சிரித்து கொண்டே படுத்திருந்தான். “நமக்கு ஒரு பாப்பா வந்தா கூட, அது இப்படி குழந்தை மாதிரி செய்யாது டி செல்ல குட்டி", என்று நினைத்தான் மகிழன்.
அவன் புறம் திரும்பி படுத்தாள் மதுநிலா. அவளையே தான் பார்த்தான்.
“மாமா", என்று அழைத்தாள் மது.
"தூக்கம் வரலை. ஒரு கதை சொல்லேன்"
“என்ன கதை சொல்ல?"
"எப்பவும் போல எதாவது சொல்லு"
னனென்னமோ செஞ்சு தூங்க விடாடி செய்ற நோச்சை கேட்டு
"போடா, எங்க வீட்ல நீ இல்லாம எனக்கு தூக்கமே வரல தெரியுமா?"
"அப்படியா? அப்ப என்ன செஞ்ச?"
"தூக்கம் வர வரைக்கும், அப்பாவை தூங்க விடாம உக்கார வச்சு பேசிட்டு இருப்பேன். அப்புறம் தூங்கிருவேன்"
"பாவம் மாமனார். இருபத்தி அஞ்சு வருஷம், இவளால என்ன பாடு பட்டிருப்பாரோ?", என்று நினைத்தவனுக்கு "எனக்கு அணுவை பிடிச்சிருக்கு அங்கிள்", என்று அவன் சொன்ன போது அவர் சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.
"உங்க காதலை எதிர்க்குறதுக்காக நான் சொல்லலை தம்பி. ஆனா அணு உங்களுக்கு வேண்டாம். அவளை ஹேண்டில் பண்றது கஷ்டம். அவளை சரியா வளர்க்கலையோன்னு இப்ப கவலை படுறேன். அவளை பிரேடிக்ட் பண்றது கஷ்டம் பா. வேற நல்ல பொண்ணை கட்டிக்கோ", என்றார் அவர்.
நினைத்து பாரத்தவனுக்கு, "ஏன் அப்படி
அதை நினைத்து பார்த்தவனுக்கு, "ஏன் அப்படி
சொன்னார் அவர்? அணுவோட
குணம் மித்த பொண்ணுங்க மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இருக்க தான் செய்யுது. ஆனா அவ இப்படி என்னை சார்ந்து இருக்குறது தான் எனக்கு பிடிச்சிருக்கு", என்று நினைத்து கொண்டே அவளை இறுக்கி கொண்டான்.
"மூச்சு முட்டுது மகி", என்றாள் மது
“சாரி டா. கோபம் போயிருச்சா, என் செல்லத்துக்கு?"
"ஹ்ம்ம்"
"ஹ்ம்ம் போ"
"என் மதுவை விட்டு எங்கயும் போக மாட்டேனே"
"என்னை உனக்கு பிடிக்குமா மகிழன்?"
"உனக்கு தெரியாதா?"
"தெரியும் தான். சரி நீ அப்பாவுக்கு போன் போட்டு திட்டு"
"எதுக்கு டா?"
"என்னை அடிச்சிட்டா?"
"ஐயையோ அப்படியா? எங்க டா?"
"இங்க கன்னத்துல"
"நாளைக்கு மாமா கிட்ட போய் சண்டை போடுறேன். எப்படி நீங்க என் லுவை அடிக்கலாம்னு சரியா? ஐயோ பாவம் அவர் தூங்கட்டும். உனக்கு ரொம்ப வலிச்சகா
"நாளைக்கு மாமா கிட்ட போய் சண்டை போடுறேன். எப்படி நீங்க என் அணுவை அடிக்கலாம்னு சரியா? இப்ப ஐயோ பாவம் அவர் தூங்கட்டும். உனக்கு ரொம்ப வலிச்சதா கண்ணம்மா?"
"ஹ்ம்ம்
ஆமா. நான் அழுதேன். உன்கிட்ட சொல்லிருவேன்னு மிரட்டினேன். உன்னை வச்சி அடிக்க வைப்பேன்னு சொன்னேன்"
"இனி உன்னை அழ விட மாட்டேன் சரியா டா குட்டி. கன்னத்துல முத்தம் தரவா?"
"கன்னத்துல மட்டும் கொடுத்தா போதுமா அணு?"
"மகிழன்", என்று சொல்லி கொண்டே அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அணு.
இந்த உலகத்தை பொறுத்த
க்கும் அணு, ரொம்ப யமான பொண்ணு. ஆனால்,
அவளுடைய அப்பா மற்றும்
இந்த உலகத்தை பொறுத்த வரைக்கும் அணு, ரொம்ப தைரியமான பொண்ணு. ஆனால், அவளுடைய அப்பா, மற்றும் அர்ஜுனிடம் மட்டும் குழந்தையாக மாறி விடுவாள். அவளுடைய கண்ணீரை பார்த்தவர்கள் கூட இவர்கள் இருவராக தான் இருக்கும்.
அவர்கள் அவளை குழந்தையாக தாங்குவதை அதிகமாக விரும்புவாள் அணு. மற்றவர்களிடம் கம்பீரமாக உலா வருவாள். தப்பை தட்டி கேட்பதில், முதல் ஆளாக இருப்பாள். எதாவது போராட்டம் என்றால் முன்னால் நின்று குரல் கொடுப்பாள்.
"ஏன் டி வெளிய எல்லார் கிட்டயும், எப்படி ரவுடி மாதிரி நடந்துக்குற. என்கிட்ட மட்டும் பம்முற? இன்னைக்கே ரெண்டு பேரை அடிச்சு வச்சிருக்க", என்று கேட்டான் மகிழன்.
"எல்லார் கிட்டயும் நம்ம வீக்நசை காட்ட முடியுமா சொல்லு அர்ஜுன்? அவங்க முன்னாடி எல்லாம் பயந்து ப் நடந்தா என்ன நினைப்பாங்க. அவங்க முன்னாடி எல்லாம் என்னோட
"எல்லார் கிட்டயும் நம்ம வீக்நசை காட்ட முடியுமா சொல்லு அர்ஜுன்? அவங்க முன்னாடி எல்லாம் பயந்து போய் நடந்தா என்ன நினைப்பாங்க. அவங்க முன்னாடி எல்லாம் என்னோட பயத்தை காட்ட தெரியாது. என்னோட கண்ணாடியா நீ தான் இருக்க அர்ஜுன். உன்கிட்ட மட்டும் தான் நான் எல்லா உணர்வுகளையும் காட்டுவேன். மித்தவங்க எல்லாருக்கும் நான் அணுராதா தான். அவ எப்பவும் கம்பீரமா இருப்பா. என்னோட உணர்வுகளை வேற யாரும் படிக்க முடியாது. ஆனால் நீ அப்படியா? நீ எனக்கு இன்னொரு அப்பா அர்ஜுன். அதனால தான், உங்க ரெண்டு பேர் கிட்ட மட்டும் நான், நானா இருப்பேன். அழுகை வந்தா அழுவேன். கோபம் வந்தாலும் காட்டுவேன். ஏன்னா நீங்க ரெண்டு பேரும் என்னோட செல்ல பொம்மைஸ்", என்று சிரித்தாள் அணு.
"நீ தான் டி மெழுகு பொம்மை. அப்படியே எப்படி இருக்க
தெரியுமா? தொட்டாலே வழுக்குது. அமையா இருக்க? உன்னை பாதது, பைத்தியமா இருக்கேன்
"நீ தான் டி மெழுகு பொம்மை.
தெரியுமா? தொட்டாலே வழுக்குது.
மென்மையா இருக்க? உன்னை பாத்து, பைத்தியமா இருக்கேன் அணு. உன்னை இப்படி ஒட்டிட்டே
அப்படியே எப்படி இருக்க இருக்கணும்னு, ஒவ்வொரு செல்லும் ஏங்குது. இத்தனை நாள் எப்படி கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? உன்னை தூக்கிட்டு வந்துரலாம்னு நினைச்சேன். அப்புறம் தப்பு என் மேலன்னு, நினைச்சு நீயா வந்திருவன்னு நினைச்சேன். நீ வேணும் டி. இன்னைக்கு தூக்கம் கட். ப்ளீஸ் டி", என்று கேட்டவனின் முகம் அவள் கழுத்தில் ஊர்ந்தது.
கண்களை மூடி அவன் தொடுகையை அனுபவித்தாள் அணு.
"இப்ப எதுக்கு இந்த சட்டையை போட்ட, தொந்தரவா இருக்கு", என்ற படி பட்டனில் கை வைத்தான் அர்ஜுன்.
அங்கு தனியே கிடந்த போர்வையை எடுத்து தங்கள் மேல் மூடினாள்
அவன் வெற்று மார்பில் முகம்
அவன் வெற்று மார்பில் முகம் புதைத்தவள் “மகிழன்", என்று அழைத்தாள்.
“என்ன டா?", என்ற படியே அவள் காதை கடித்தான்.
"அப்பாவுக்கு, குட்டி மகிழன் வேணுமாம்"
அதிர்ச்சியாக அவளை பார்த்தான் மகிழன்.
“என்ன டா இப்படி முழிக்கிற?"
"கொஞ்சம் என்னோட நிலைமையை யோசிச்சு பாரு டா அணு குட்டி. உனக்கும் கதை சொல்லி தூங்க வைக்கணும், அவனுக்கும் கதை சொல்லி தூங்க வைக்கணும்னா? ஒரே நேரத்தில் ரெண்டு குழந்தைகளை எப்படி என்னால சமாளிக்க முடியும் சொல்லு?"
"கிண்டலா பண்ற? நான் ஒன்னும் எப்பவும் அப்படி கிடையாது. எப்பவாது தான். அப்புறம் குழந்தைன்னு சல்லிட்டு, எதுக்கு டா இப்படி நாம் பண்ற? கையை எடு. தள்ளி படு. சேம் சேம் பப்பி சேமா இருக்கு"
**********
அதிகாலையிலேயே உறக்கம் களைந்து எழுந்த மது, தான் இருக்கும் இடம் உணர்ந்து, சட்டென்று அவன் கட்டில் இருந்த பக்கம் திரும்ப, சிறு புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்த தன் மாமனைக் கண்டதும், எப்போதும் போல் அவன் கன்னத்தைக் கடித்து வைக்கும் ஆசை ஆசை வந்தது.
"ச்சே உனக்கெல்லாம் மானரோஷமே இல்லடி!" என்று மூளைத் திட்டியதைப் பொருட்படுத்தாமல்,
நேரே எழுந்து சென்று, அவன் முரட்டுக் கன்னத்தில் அழுத்தமாய், அதே நேரம் காயம் படாமல் ஒரு கடி வைக்க, திடுக்கிட்டு கண்விழித்த மகிழன்,
“ஏய்! அறிவிருக்காடி உனக்கு?!” என்றான் கோபத்துடன்.
"ஐயோ மாமா ஊர்ல இருந்து வரும்போது, அம்மா எடுத்து வைக்க மறந்துவிட்டார் மாம்மு" என்று அவன் கன்னத்தை ஒரு தட்டு தட்டியவள்,
“நான் போய் குளிச்சிட்டு வரேன்” என்று சர்வசாதரணமாய்ச் சொல்லிவிட்டுச் செல்ல,
**********†**
மறுவீடு வந்திருக்கிறார்கள் தம்பதிகள்
மறுவீடு வருமுன் இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி அப்படியே தொடர்ந்தது
அவள் அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லாது போக அவளுக்கும் கோபம் வந்தது.
'நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இவ்ளோ கோபம்?! ! அதை சொன்னதுக்குப் போய் இவ்ளோ கோபப்பட்ட?! என்று எண்ணியவள்,
"பேசாட்டி போங்க!” என்று விட்டு, வீடு திரும்பிய பின் அவர்கள் அறைக்குச் செல்லாமல், தன் தாயுடன் சேர்ந்து இரவு உணவைத் தயாரிக்க சமையலறையில் புகுந்து கொண்டாள்.
வேலை முடிந்ததும், "அவனை சாப்பிடக் கூப்பிடும்மா" என்று தாமரை சொல்ல,
"அவனைச் சாப்பிட அழைக்க தங்கள் அறைக்குச் செல்ல, அவன் ஏதோ ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான்.
“சாப்பிட வாங்க!” என்றாள்.
அப்போதும் அவனிடம் இருந்த எந்த பதிலும் இல்லை!
“எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க!" என்றாள் மீண்டும்.
அப்போதும் அங்கே அமைதி மட்டுமே!
"ம்! ரொம்பதான் பண்றார்!" என்று காலை உதைத்துக் கொண்டு திரும்பிச் செல்லப் பார்த்தவள், இருப்பது தங்கள் வீடு அம்மா, அப்பாவிற்கு பதில் சொல்ல வேண்டும். அவன் சாப்பிடாமல் தூங்கினால் அவளுக்கும் மனம் கேட்காது.
“இப்போ என்ன பிரச்சனை மாமா, ஓவரா பண்ணிக்கிட்டு இருக்கீங்க?!" என்று கத்தினாள் பொறுமை பறந்து. கதவு திறந்திருக்கிறது! கத்தாதே! என்ற ரீதியில் அவன் முறைக்க,
“நான் அப்படிதான் கத்துவேன்! நீங்க சாப்பிட எழுந்து வரலைன்னா!” என்றாள் பிடிவாதமாய்.
“எனக்கு வேணாம். நீ போய் சாப்பிடு!" என்றுவிட்டு அவன் மீண்டும் புத்தகத்தில் மூழ்க, விறுவிறுவென கதவைச் சாத்திவிட்டு அவன் அருகே சென்றவள்,
"சரி மன்னிச்சிடுங்க மாமா. நான் அப்படிப் பேசினது தப்புதான்! வேணும்னா பைன் போட்டுகோங்க!" என்றுவிட்டு, அவன் எதிர்பாரா வண்ணம் அவன் முகத்தை இழுத்து முத்தங்கள் வைக்கத் துவங்க, அவனின் கோபம் தணிந்து போனாலும், அவள் அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவ்வளவுதானா என்று நினைக்கையில், மனம் கசந்தது.
ஆனால், ‘அவள் நம்பிக்கையை நீ எல்லா விதத்திலும் காப்பாற்றுகிறாயா?! எத்தனை பெரிய துரோகம் செய்கிறாய் அவளுக்கு! அதுவே தவறுதானே!' என்று அவன் அவனையே திருப்பிக் குற்றம் சுமத்த, அந்த நாள் அவனுக்குள் எப்போதும் இருக்கும் குற்ற உணர்ச்சியை மேலும் தூண்டிவிட்டிருந்தது பன்மடங்காய்.
"போதுமா மாமா! இப்போ கோவம் போயிடுச்சா?!" என்று அவள் கள்ளமின்றிச் சிரிக்க,
"யார் என்ன சொன்னாலும் நானா உன்னை என்னைக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன்னு நீ நம்பணும் மது. இனி எப்பவும் அப்படிப் பேசாத" என்றான்.
"ம்ஹும்! பேச மாட்டேன்" என்றவள்,
“வாங்க” என்று அவன் கைபிடித்து அழைக்க, மென் சிரிப்புடன் எழுந்து அவளைப் பின்தொடர்ந்தான்.
*****************
நாட்கள் வேகமாக நகர்ந்தது.
இதோ திருமணமாகி மூன்றாம் மாதம் வந்துவிட, அன்று அவளுக்குத் தாலி பிரித்துக் கோர்க்கும் வைபவம்.
செல்லம்மா அவள் வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் அவளிடம் ஆசையாய் கேட்டது, "மது ஏதாவது விஷேசம் இருக்காடி?!" என்பதுதான்.
"ம்! அதெல்லாம் இல்லை ம்மா" என்று அவள் சொல்ல,
“சீக்கிரம் குழந்தை பெத்துக்கோடி! அப்போதான் உன் மாமியார் வீட்ல எல்லோருக்கும் உன்மேல அன்பு கூடும். உன் புருஷனுக்கும்தான்” என,
“இல்லம்மா அவர் கொஞ்ச நாளைக்கு குழந்தை வேணாம்னு நினைக்கிறார் ம்மா” என்றாள்.
“என்ன?! எதுக்காம்?!” என்றவர்,
நான் ரெம்ப சின்னப் பெண்ணாம், நீயே குழந்தை தான் நீ முதலில் மெச்சுடா ஆகு அப்புறம் குழந்தை பெத்து வளர்க்கலாம் என்று சொல்றார் ம்மா
“அதெல்லாம் முதல்ல ஆம்பிள்ளைங்க அப்படித்தான் சொல்வாங்க! அப்புறம் குழந்தை வந்ததும் பொண்டாட்டியைக் கூட மறந்துட்டு புள்ளையதான் கொஞ்சிக்கிட்டு இருப்பாங்க! தள்ளிப் போடாம சீக்கிரம் குழந்தை பெத்துக்குற வழிய பாரு" என்று அவர் மிரட்டி விட்டுச் செல்ல, ஜெயாவும், வசந்தியும் கூட குழந்தையைப் பற்றிக் கேட்டுவிட்டுத்தான் சென்றனர்.
பார்வதி அவளிடம் நேரடியாக கேட்காவிட்டாலும், அவருக்கும் எப்போதடா விசேஷ செய்தி கேட்போம் என்றிருந்தது. எத்தனை வருட தவிப்பு! தனக்குத்தான் இல்லாது போய்விட்டது! இவர்கள் மூலமாவது இவ்வீட்டிற்கு ஒரு வாரிசு வந்துவிடாதா என்று ஆசை கொண்டிருந்தார். சீதா கூட ஜாடைமாடையாய் அவளிடம் குழந்தை பற்றி விசாரிக்க, அவளுக்கு ஏதோ போல் ஆனது!
ஆனால் மாதங்கள் உருண்டோடியதே தவிர உண்டாகவே இல்லை! காரணம்!
இப்போது அவளுக்குமே குழந்தை இல்லாத ஏக்கம் பிறந்திருந்தது.
அன்று மாலை அவ்வப்போது அவர்கள் செல்லும் அண்ணாநகர் டவர் பூங்காவிற்குச் சென்றிருக்க, எப்போதும் சிரித்து கலகலப்பாய் பேசுபவள், அங்கு பெற்றோர்களுடன் வந்திருந்த சிறுபிள்ளைகள் ஓடி ஆடி விளையாடுவதைப் பார்த்து, ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
சுடச் சுட ஆல்வெளி சிப்ஸ் வாங்கிக் கொண்டு வந்தவன், அவளிடம் ஒன்றை நீட்ட, அவள் வாங்காமல் ஏதோ கவனத்தில் இருக்க, “ஏய் மது! அப்படி என்ன யோசனை?!" என்றபடி அவளருகே அமர்ந்தான்.
"ப்ச் ஒண்ணுமில்லை மாமா!" என்றாள் மனதை வெளிக்காட்டாது!
"ப்ச் இல்லை! ஏதோ இருக்கு! நானும் கொஞ்ச நாளா கவனிச்சிட்டுதான் இருக்கேன்! அப்பப்போ ஏதோ யோசனைக்குப் போய்டுற?! என்ன பிரச்சனை உனக்கு?! உங்க வீட்ல ஏதாவது பிரச்சனையாடா?!
"ஒன்னுமில்ல மாமா'
"ப்ச்! எதையோ மறைக்குற மதும்மா! என்கிட்டே மறைக்க என்ன இருக்கு முகம் சரியில்லாதது .
"நான் எதையும் மறைக்கலை'
'“எதுவும் விசேஷம் இல்லையான்னு எல்லோரும் கேட்கிறங்கா!” என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு.
அவள் அப்படி கேட்டதும் அவன் முகம் சட்டென மாறிவிட, “பாருங்க! இப்போகூட குழந்தைன்னதும் உங்க முகம் எப்படி மாறுதுன்னு?!" என்றாள்.
“அதான் ஏற்கனவே சொல்லி இருந்தேனே!"
“அதான் ஏன்னு கேட்குறேன்"
"இப்போதைக்கு வேணாம்!”
“கல்யாணம் ஆன புதுசுல சொன்னீங்க சரி! இப்போ நமக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம்
"அதுக்கு?!"
“வீட்ல எல்லோரும் எப்போ நல்ல செய்தி வரும்னு ரொம்ப எதிர்பார்க்குறாங்க!"
"மத்தவங்களுக்காக எல்லாம் நம்ம முடிவை மாத்திக்க முடியாது!"
"மத்தவங்களுக்காக இல்லை! எனக்கும் குழந்தை வேணும்" என்றாள். அதில் எதிர்ப்பு இல்லை என்றாலும் பிடிவாதம் இருந்தது அவனுக்கு நன்றாய்ப் புரிந்தது.
“இல்லை தேனம்மா!" என்று அவன் ஏதோ சமாதானம் சொல்லப் பார்க்க,
“இல்லை ஆபிசரே! எனக்கு குழந்தை வேணும். ஆசையா இருக்கு!" என்றவளை அமைதியாய் பார்த்தவன்,
"அப்போ நான் முக்கியமில்லையா உனக்கு?!” என்றான்.
“என்ன பேசுறீங்க நீங்க?! குழந்தை வேணும்னா நீங்க முக்கியம் இல்லையான்னு கேட்குறீங்க? உலகத்துல குழந்தை பெத்துக்க ஆசைபடுற எல்லா மனைவியையும் அவங்க புருஷன் இப்படித்தான் கேட்பாங்களா?!” என்றாள் முதன்முதலில் அவன் மீது கோபம் கொண்டவளாய்.
அவள் கேள்வி தலையில் கொட்டியது போல் இருந்தாலும், அவனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் தேனம்மா!" என்றான் இப்போதும் காரணம் சொல்லாமல்.
"ப்ச்!" என்று உச்சுக் கொட்டியவளிடம்,
"இந்தா பிடி! சூடு ஆறுறதுக்குள்ள சாப்பிடு!" என்று வாங்கி வந்த ஆல்வெளி சிப்ஸை அவளிடம் நீட்ட,
“ம்க்கும்! இது ஒண்ணுதான் ஆ றச்சலாக்கும்!" என்று முணுமுணுத்தபடி, உர்ரென்று
அவள் அப்படிக் கேட்டதிலிருந்து அவனுக்கும்தான் எதுவும் ஓடவில்லை! அவன் எப்படிச் சொல்வான் அவளிடம்?! தங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று!
அவள் அங்கே சத்தம் போட்டபடி அங்கே இங்கே ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை ஏக்கமாய் பார்த்திருக்க, அவனும் அவர்களைத்தான் பார்த்திருந்தான் ஆனால் சொல்லொணா வேதனையுடன்.
இந்த பேச்சுவார்த்தை நடந்து மேலும் ஒரு மாதம் கடந்திருக்க, மாலை நேரங்களில் அவ்வப்போது அவர்கள் வீட்டிற்கு வந்து செல்லும் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டி, ஒருவர்,
“என்ன ரகு அம்மா?! உங்க சின்ன மருமகளும் ஒன்னும் நல்ல செய்தி கொண்டு வரலை போல! ஒருவேளை உங்க குடும்பத்துக்கே இது சாபமோ?!" என்றார் குமுதாவின் மனம் வருந்துமாறு.
அது அறைக்குள் இருந்த வவிற்கு நன்றாய் கேட்க, “கிழவி! பயங்கர கடுப்புல இருக்கேன்! இதுல இது வேறு! இதையெல்லாம்
அது அறைக்குள் இருந்த தேனுவிற்கு நன்றாய் கேட்க, “கிழவி! நானே பயங்கர கடுப்புல இருக்கேன்! இதுல இது வேற! இதையெல்லாம் ஏன் அத்தை வீட்டுக்குள்ள விடுறாங்க?!” என்று வாய்விட்டுத் திட்டியவள்,
“இவங்களை எல்லாம் சொல்லி என்ன புண்ணியம்?! எனக்குன்னு வந்து வாச்சிருக்காரே அவரை சொல்லணும்?!" என்று சொல்லிக் கொண்டு கதவைப் பட்டென சாத்தினாள் பக்கத்துக்கு வீட்டுப் பாட்டியின் முகத்தில் அறைவதைப் போல்!
“உன் மருமகளுக்கு நான் பேசுனது கேட்டுடுச்சி போல!” என்றவர்,
"சரிடியம்மா நான் கிளம்பறேன்! எனக்கு எதுக்கு ஊர் பிரச்சனை?!" என்றபடி குடித்து முடித்த காபிக் கோப்பையை குமுதாவிடம் கொடுத்துவிட்டுக் கிளம்ப, குமுதாவிற்கும் ஏதோ போல் ஆனது.
இதற்குள் வேலையில் இருந்து வந்ததும் குளிக்கச் சென்றிருந்தவன் குளித்துவிட்டு வெளியே வந்தான்.
அவள் இன்னமும் கிளம்பாமல், இருப்பதைக் கண்டு, “இன்னும் ரெடியாகலையா தேனம்மா? படம் ஆரம்பிச்சிடும்!" என,
“நான் வரலை!” என்றாள் பட்டென்று.
“ஏன்?!” என அவன் கேள்வியாய் பார்க்க,
"தலை வலிக்குது!” என்றாள்.
“ஏன் என்னாச்சு?! காய்ச்சல் ஏதும் இருக்க?!" என அவன் அக்கறையாய் அவள் அருகே வந்து நெற்றியில் கைவைத்துப் பார்க்க,
“அதெல்லாம் ஒண்ணுமில்ல! தலைவலி மட்டும்தான்" என்றாள்.
“ஓ! சரி நீ படுத்து ரெஸ்ட் எடு!" என்றவன், அவளுக்கு தைலம் எடுத்து வந்து தேய்த்துவிட, கண்மூடிப் திருந்தவளுக்கு கண்ணைக் கரித்தது
மறுநாள் காலை எழுந்தவள், அன்றைய நாள் மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வரப் போகிறது என்ற குஷியில், எப்போதும் அவன் கன்னத்தில் வைக்கும் கடியை அழுத்தமாய் வைத்துவிட,
“ஹா!” என்று அலறித் துடித்தவன்,
“ராட்சசி! காலையிலேயே என்னடி அவ்ளோ வேகம் உனக்கு!" என்று ளை இழுத்து தன்மேல் போட்டுக்
கொண்டவன் அவள் கன்னத்தில்
Comments
Post a Comment