Posts

Showing posts from December, 2024

மது மகிழன் - 7

மதுவை அழைத்துச் செல்ல தாமரையும், சந்திரனும் நாளை திருச்சி வருகிறார்கள். ஆனால் இந்த ஆடி அழைப்பை மகிழன் விரும்பவில்லை,  "அம்மா மதுவை அனுப்பனுமா" என்றான் தாயிடம்.. "சும்மா இரு மகி. எல்லத்திலும் விளையாட்டு கூடாது, உங்க பெரியாம்மாவுக்கு யாரு பதில் சொல்றது? நாளைக்கு அவங்க எல்லாம் வந்ததும் நாம அனுப்பித்தான் ஆகணும்" "நானும் கூட போகலாமா? பார்வதி முறைத்தார்... "அப்போ ஒரு வாரம் கழிச்சுப் போகலாமா."  சும்மா இருக்க விடுடா என்னப் படுத்தாத எதுன்னாலும் உன் அக்காவிடம் கேட்டுக்க சொன்னவர் சமையல் அறைக்குள் நகர்ந்து விட்டார். மறுநாள் காலையில் சந்திரனும், தாமரையும் வந்துவிட்டார்கள். மகிழன் பேக்டரிக்கும் போகாமல் பள்ளி மாணவனை போல் காரணம் சொல்லிக்கொண்டே அங்கேயே சுற்றிக் கொண்டிருக்க, தாய் அவனைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டார். எப்போதும் காலையில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருப்பவன். இன்று சம்மந்தமே இல்லாமல் மேலேயும் கீழேயும் நடக்க. "மகி கால் வலிக்க போகுது ஒரு இடத்தில் உட்கார் என்றார். "அம்மா' என்றான் கோபமாக.  "போகாதேன்னு சொல்லலாம் தானே இந்த மாமாவுக்கு என்னை...

மது மகிழன் - 6

காலையில் மது எழும்போது மாமன் அருகில் இல்லை அன்றைக்குப் மது வெகுவாகச் சலித்துப் போனாள். வெளியே சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தவள். குளித்து முடித்து யமுனா வீட்டுக்கு வந்தாள், காலை எட்டு மணி மஹா நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். யமுனா சமையலில் இருக்க "அத்தை நான் இந்த வெங்காயத்தை வெட்டவா' என்று அங்கே இருந்த கத்தியை எடுக்க.. "அதெல்லாம் எதுவும் வேண்டாம் டா.. அத்தை பார்த்துக்குவேன்' உனக்கு டீ போட்டு தரவா?  என்று யமுனா முடிக்கும் முன் "அம்மா டீ" என்று தூக்கம் களையாமல் வந்து நின்றாள் மஹா, சமையல் அறையில் மதுவை பார்த்ததும், "ஹாய் செல்லம்' என்று அவளை கட்டிப்பிடித்தாள். யமுனா கரண்டியால் இரண்டு அடிபோட்டு குளிக்க விரட்ட, மதுவையும் இழுத்துக்கொண்டு தன் அறைக்குள் ஓடினாள்.  குளித்து முடித்து வந்த மஹாவுடன் உணவு மேசையில் இருந்தாள் மது, உடன் மஹாவின் தம்பி கௌதம். மஹா சேலையில் இருந்தாள், வடிவமைப்பு மது. அவர்கள் இருவரின் கவனமும் உணவில் இருக்க, மதுவின் எண்ணம் முழுவதும் மாமான் நிறைந்திருந்தான். சாப்பாட்டில் மனம் ருசிக்கவில்லை.  "அம்மா இது அக்காவுக்கு ஆறாவது தோசை' என்...

மது மகிழன் - 5

அந்த நான்கு கார்களும், இரண்டு பேருந்துகளும் திருச்சி நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. தாமரையின் சொந்தங்கள், சந்திரனின் சொந்தங்கள் என உறவினர்கள் அன்பில் நிரம்பியிருந்தது பேருந்து. காலையிலேயே புறப்பட்டு விட்டார்கள். இரவு மண்டபத்தில் நிச்சயதார்த்தம், மறுநாள் காலையில் முகூர்த்தம் என நேரங் குறிக்கப்பட்டிருந்தது. மது அமைதியாக அவர்களின் காரில் பின் சீட்டில் அமர்ந்தபடி வெளிப்புறத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். அருகில் தாமரை, முன் சீட்டில் இளமாறன். திருச்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது' எனும் பதாகை தொங்க. எண்ணங்கள் பின்னோக்கிப் போனது. முதன் முதலாக மாமானைத் தேடி திருச்சி வந்த நாளை அசை போட்டது. உடம்பு லேசாக புல்லரிக்க கண்கள் கலங்கியது மதுவிற்கு. காதலை மனதில் சுமந்து கொண்டு, அது நிறைவேறுமா? நிறைவேறாதா? எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் மாமன் இருக்கும் ஊரில் இருந்தால் போதுமென்று தான் திருச்சி வந்தாள். காதல் மேல் வைத்த நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு அம்மாவை எதிர்த்து, அப்பாவிடம் மறைத்து என எத்தனை வேதனைகள். துன்பங்கள். இன்று அந்த காதல் கைகூடும் நேரம். ஆனாலு உள்ளுக்குள் மகிழ்ச்சி இல்லை. ஆழமான ஒரு மூச்ச...

மது மகிழன் - 4

காலையிலேயே திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு இருந்தார்கள் மதுநிலாவும், மகிழனும். நான்கு மணி நேரப் பயணம்.  ஓட்டுநர் இருக்கையில் இருந்த மதுவின் தோற்றம் இன்று கூடுதல் அழகாக இருந்தது. தன் காதல் கைகூடும் மகிழ்ச்சி அவள் கண்களில்.. இன்று ஊருக்கு வருவதாக தன் தாய்க்கு நேற்றே தகவல் சொல்லிவிட்டாள். ஆனால் மாமனை பற்றி மூச்சு விடவில்லை. அம்மா தன் உணர்வுகளை புரிந்து கொள்வார் என்று மனம் ஆறுதலாக இருந்தாலும், அப்பாவை  நினைக்கும் போது கொஞ்சம் கவலையும், பயமும் இருந்தது மதுவுக்கு. கார் சிட்டியை விட்டுத் தாண்டியதும் வேகமெடுத்தது. மது கைகளில் அந்தக் ஹோண்டா சிட்டி மிக லாவகமாக முன்னால் சென்ற வாகனங்களை முந்திக்கொண்டு பறந்தது. மகிழன் அவள் கார் ஓட்டும் அழகை வியந்து பார்த்தான். அவன் ரசிப்பதை கண்ட பெண்ணுக்குள் உற்சாகம் பிறந்தது. "ஏய் மது இவ்வளவு அழகா கார் ஓட்டுற.. "தாங்க்ஸ் மாமா... என்று உள்ளம் இனிக்க சிரித்தாள் பெண். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சவாலாக எடுத்துக் கொள்பவள் மது  மதுரை நெருங்கியதும் ஒரு உணவு விடுதியின் முன்பாக நின்றது கார். "சாப்பிடலாம் மாமா, ரெம்ப பசிக்குது."  என்று வயிறை ...